Check out the new design

Қуръони Карим маъноларининг таржимаси - Тамилча таржима - Умар Шариф * - Таржималар мундарижаси

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Маънолар таржимаси Сура: Каҳф   Оят:
وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ ؕ— وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَیْءٍ جَدَلًا ۟
இன்னும், இந்த குர்ஆனில் மக்களுக்காக எல்லா உதாரணங்களையும் திட்டவட்டமாக விவரித்து விட்டோம். ஆனால், (நிராகரிக்கின்ற) மனிதன் (ஒரே ஓர் இறைவனை மட்டும் வணங்குவதை எதிர்த்து) மிக அதிகம் வாதிடுபவனாக இருக்கிறான்.
Арабча тафсирлар:
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ یُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰی وَیَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمْ سُنَّةُ الْاَوَّلِیْنَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ قُبُلًا ۟
இன்னும், மக்களுக்கு நேர்வழி வந்தபோது (அதை ஏற்று) அவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதை விட்டும் அவர்களைத் தடுக்கவில்லை, முன்னோரின் நடைமுறை அவர்களுக்கு வருவதை; அல்லது, கண்முன் (வெளிப்படையாக, திடீரென) தண்டனை அவர்களுக்கு வருவதை (அவர்கள் எதிர்பார்ப்பதே) தவிர.
Арабча тафсирлар:
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۚ— وَیُجَادِلُ الَّذِیْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوْۤا اٰیٰتِیْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا ۟
இன்னும், நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவுமே தவிர தூதர்களை நாம் அனுப்பமாட்டோம். மாறாக, அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தை அழிப்பதற்காக நிராகரித்தவர்கள் அ(ந்த அசத்தியத்)தைக் கொண்டு வாதிடுகிறார்கள். இன்னும், என் வசனங்களையும் அவர்கள் எதைக் கொண்டு எச்சரிக்கப்பட்டார்களோ அதையும் அவர்கள் கேலியாக எடுத்துக் கொண்டனர்.
Арабча тафсирлар:
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِیَ مَا قَدَّمَتْ یَدٰهُ ؕ— اِنَّا جَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِنْ تَدْعُهُمْ اِلَی الْهُدٰی فَلَنْ یَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا ۟
இன்னும், எவர் தன் இறைவனின் வசனங்களைக் கொண்டு அறிவுரை கூறப்பட்டாரோ, இன்னும், அவற்றைப் புறக்கணித்து, தன் இரு கரங்களும் முற்படுத்திய (தீய)வற்றை மறந்தானோ அவனை விட மகா தீயவன் யார்? அ(ந்த சத்தியத்)தை அவர்கள் புரிந்து கொள்வதை தடுக்கின்ற மூடிகளை அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களுடைய காதுகள் மீது கனத்தையும் (-செவிட்டுத் தனத்தையும்) நாம் நிச்சயமாக ஆக்கினோம். மேலும், (நபியே!) நீர் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால், அப்போதும் அவர்கள் அறவே நேர்வழி பெற மாட்டார்கள்.
Арабча тафсирлар:
وَرَبُّكَ الْغَفُوْرُ ذُو الرَّحْمَةِ ؕ— لَوْ یُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ ؕ— بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ یَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْىِٕلًا ۟
இன்னும், உம் இறைவன் மகா மன்னிப்பாளன், (நிறைவான) கருணையுடையவன் ஆவான். அவர்கள் செய்தவற்றுக்காக அவன் அவர்களை தண்டித்தால் தண்டனையை அவர்களுக்கு தீவிரப்படுத்தியிருப்பான். மாறாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதிலிருந்து (தப்பிக்க) ஒதுங்குமிடத்தை (அவர்கள்) அறவே பெற மாட்டார்கள்.
Арабча тафсирлар:
وَتِلْكَ الْقُرٰۤی اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا ۟۠
அந்த ஊர்(வாசி)கள், அவர்கள் தீங்கிழைத்தபோது அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களின் அழிவிற்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நேரத்தை நாம் ஆக்கினோம்.
Арабча тафсирлар:
وَاِذْ قَالَ مُوْسٰی لِفَتٰىهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤی اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَیْنِ اَوْ اَمْضِیَ حُقُبًا ۟
இன்னும், மூஸா தன்(னுடன் இருந்த) வாலிபரை நோக்கி “இரு கடல்களும் இணைகின்ற இடத்தை நான் அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது, நீண்டதொரு காலம் நடந்து சென்று கொண்டே இருப்பேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Арабча тафсирлар:
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَیْنِهِمَا نَسِیَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِیْلَهٗ فِی الْبَحْرِ سَرَبًا ۟
ஆக, அவ்விருவரும் அந்த இரண்டு (கடல்களு)ம் இணையும் இடத்தை அடைந்தபோது இருவரும் தங்கள் மீனை மறந்தனர். ஆக, அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் ஆக்கிக் கொண்டது.
Арабча тафсирлар:
 
Маънолар таржимаси Сура: Каҳф
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - Тамилча таржима - Умар Шариф - Таржималар мундарижаси

Шайх Умар Шариф ибн Абдусалом таржимаси.

Ёпиш