Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 阿里欧姆拉尼   段:
وَسَارِعُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُ ۙ— اُعِدَّتْ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
3.133. நற்காரியங்களாற்றுவதன் பக்கமும் பலவித வணக்கங்களின் மூலம் அவனை நெருங்குவதன் பக்கமும் விரையுங்கள். அதனால் அல்லாஹ்வின் பெரும்மன்னிப்பைப் பெற்று வானங்கள் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவனத்தில் நுழைவீர்கள். தன்னை அஞ்சும் அடியார்களுக்காகவே அல்லாஹ் அதனைத் தயார்படுத்திவைத்துள்ளான்.
阿拉伯语经注:
الَّذِیْنَ یُنْفِقُوْنَ فِی السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِیْنَ الْغَیْظَ وَالْعَافِیْنَ عَنِ النَّاسِ ؕ— وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟ۚ
3.134. இறையச்சமுடையவர்களே செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள். பழிவாங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தமக்கு அநீதி இழைத்தவர்களை மன்னித்துவிடுவார்கள். இத்தகைய பண்புகளை உடைய நல்லவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
阿拉伯语经注:
وَالَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ۫— وَمَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۪۫— وَلَمْ یُصِرُّوْا عَلٰی مَا فَعَلُوْا وَهُمْ یَعْلَمُوْنَ ۟
3.134. அவர்கள் பெரும் பாவம் செய்தாலோ சிறு பாவத்தில் ஈடுபட்டு தமக்குத் தாமே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். பாவிகளுக்கு அவன் விடுத்த எச்சரிக்கைகளையும் அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் அளித்த வாக்குறுதியையும் நினைத்துப் பார்ப்பார்கள். தங்கள் பாவங்களை மறைத்துவிடுமாறும் தண்டிக்காமல் விட்டுவிடுமாறும் கைசேதப்பட்டவர்களாக தங்கள் இறைவனிடம் மன்றாடுவார்கள். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அறிந்துகொண்டே தங்களின் பாவங்களில் நிலைத்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கக்கூடியவன்.
阿拉伯语经注:
اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ؕ
3.135. மிகச் சிறந்த இந்த பண்புகளை உடையவர்களது பாவங்களை அல்லாஹ் மறைத்து, மன்னித்துவிடுவான். மறுமையில் அவர்களுக்குச் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களின் கூலி சிறப்பானதாகும்.
阿拉伯语经注:
قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ— فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟
3.136. உஹதுப்போரில் ஏற்பட்ட இழப்புகளால் நம்பிக்கையாளர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அல்லாஹ் கூறினான்: நிராகரிப்பாளர்களை அழிப்பதிலும், நம்பிக்கையாளர்களைச் சோதித்த பிறகு இறுதி முடிவை அவர்களுக்கு சாதகமாக ஆக்குவதிலும் இறைவனின் நியதிகள் உங்களுக்கு முன்னரும் நிகழ்ந்தே இருக்கின்றன.அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று, என்பதை பூமியில் பயணம் செய்து படிப்பினை பெறும் கண்ணோட்டத்தோடு பாருங்கள். அவர்களின் வசிப்பிடங்கள் வெற்றிடமாகி விட்டன. அவர்களின் ஆட்சி நீங்கிவிட்டது.
阿拉伯语经注:
هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَهُدًی وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
3.137. கண்ணியமிக்க இந்த குர்ஆன் சத்தியத்தைத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் அசத்தியத்திலிருந்து மனிதர்கள் அனைவரையும் எச்சரிக்கக்கூடியதாகவும் நேர்வழிகாட்டக்கூடியதாகவும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு அறிவுரையாகவும் இருக்கின்றது. ஏனெனில் அவர்கள்தாம் இதிலுள்ள வழிகாட்டுதலைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.
阿拉伯语经注:
وَلَا تَهِنُوْا وَلَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
3.138. நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் பலவீனமடைந்து விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். அது உங்களுக்கு உகந்ததும் அல்ல. நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் தன்னை அஞ்சும் அடியார்களுக்கு அளித்த வாக்குறுதியின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் உங்களின் நம்பிக்கையினால், அல்லாஹ்வின் உதவியினால், அவனது உதவியில் கொண்டிருக்கும் ஆதரவினால் நீங்கள்தாம் உயர்ந்தவர்கள்.
阿拉伯语经注:
اِنْ یَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ— وَتِلْكَ الْاَیَّامُ نُدَاوِلُهَا بَیْنَ النَّاسِ ۚ— وَلِیَعْلَمَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟ۙ
3.139. நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருந்தால் உங்களைப்போன்றே நிராகரிப்பாளர்களுக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மக்களிடையே உயர்ந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் தான் நாடியவாறு வெற்றியையும் தோல்வியையும் காலத்துக்குக் காலம் மாறிமாறி வரச் செய்கின்றான். உண்மையான நம்பிக்கையாளர்களை நயவஞ்சகர்களிடமிருந்து வேறுபடுத்துதல்; தான் விரும்பும் அடியார்களுக்கு தன் பாதையில் மரணிக்கச் செய்வதன் மூலம் கவுரவித்தல் ஆகியன அந்த நோக்கங்களில் சிலவாகும். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதை விட்டுவிட்டு தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• الترغيب في المسارعة إلى عمل الصالحات اغتنامًا للأوقات، ومبادرة للطاعات قبل فواتها.
1. நேரங்கள் கடந்துவிடுவதற்கு முன்பே அவற்றைப் பயன்படுத்தி நற்செயல்களின் பக்கம், அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் பக்கம் விரையுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

• من صفات المتقين التي يستحقون بها دخول الجنة: الإنفاق في كل حال، وكظم الغيظ، والعفو عن الناس، والإحسان إلى الخلق.
2. எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்தல், கோபத்தை அடக்கிக் கொள்ளுதல், மக்களை மன்னித்தல், படைப்புகளுக்கு நன்மை செய்தல் இவையனைத்தும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களின் சுவனம் செல்லத் தகுதியான பண்புகளாகும்.

• النظر في أحوال الأمم السابقة من أعظم ما يورث العبرة والعظة لمن كان له قلب يعقل به.
3. கடந்தகால சமூகங்களை படிப்பினைபெறும் கண்ணோட்டத்தோடு பார்ப்பது உணர்ந்துகொள்ளும் உள்ளங்களுக்கு படிப்பினைகளையும் அறிவுரைகளையும் அளிக்கிறது.

 
含义的翻译 章: 阿里欧姆拉尼
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭