Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 段: (44) 章: 玛仪戴
اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِیْهَا هُدًی وَّنُوْرٌ ۚ— یَحْكُمُ بِهَا النَّبِیُّوْنَ الَّذِیْنَ اَسْلَمُوْا لِلَّذِیْنَ هَادُوْا وَالرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَیْهِ شُهَدَآءَ ۚ— فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ— وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ۟
5.44. நாம் மூஸாவின்மீது தவ்ராத்தை இறக்கினோம். அதில் நன்மையான விஷயங்களின்பால் வழிகாட்டுதலும் வெளிச்சம் பெறக்கூடிய ஒளியும் இருந்தன. இஸ்ராயீலின் மக்களில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த தூதர்கள் அந்த வேதத்தின்படியே தீர்ப்பளித்தார்கள். திரிவுபடுத்தல் மாற்றுதல் ஆகியவற்றை விட்டும் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியதனால், மக்களை வழிநடத்தும் அறிஞர்களும் சட்டவல்லுனர்களும் அதன்படியே தீர்ப்பளித்தார்கள். அது உண்மையானது என்பதற்கு அவர்களே சாட்சியாளர்களாக இருந்தார்கள். மக்கள் தங்கள் விவகாரங்களை அவர்களிடமே கொண்டு செல்கின்றனர். யூதர்களே! நீங்கள் மக்களுக்குப் பயப்படாதீர்கள். அல்லாஹ்வாகிய எனக்கே பயப்படுங்கள். அல்லாஹ் வேதத்தில் இறக்கிய கட்டளைக்குப் பகரமாக தலைமைத்துவம், அந்தஸ்து, சொத்து போன்ற அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். யார் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காமல் இருப்பதை சரியெனக் கருதுகிறாரோ அல்லது அதனைவிடுத்து வேறு சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாரோ அல்லது அதனை பிற சட்டங்களுக்குச் சமமாகக் கருதுகிறாரோ அவர்கள்தாம் உண்மையில் நிராகரிப்பாளர்கள்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• تعداد بعض صفات اليهود، مثل الكذب وأكل الربا ومحبة التحاكم لغير الشرع؛ لبيان ضلالهم وللتحذير منها.
1. பொய்கூறுதல், வட்டி வாங்கி உண்ணுதல், மார்க்கத்திற்கு வெளியே தீர்ப்புக்கேட்பதை விரும்புதல் போன்ற யூதர்களின் சில பண்புகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது அவர்களது வழிகேட்டைத் தெளிவுபடுத்தி அதனை எச்சரிப்பதற்காகவுமே.

• بيان شرعة القصاص العادل في الأنفس والجراحات، وهي أمر فرضه الله تعالى على من قبلنا.
2. உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கேற்ப நியாயமான முறையில் பழிவாங்கப்பட வேண்டும். இது அல்லாஹ் நமக்கு முன்னுள்ளவர்கள் மீது விதித்த கடமையாகும்.

• الحث على فضيلة العفو عن القصاص، وبيان أجرها العظيم المتمثّل في تكفير الذنوب.
3. பழிவாங்காமல் மன்னிப்பதன் சிறப்பு தெளிவாகிறது. பாவங்களுக்குப் பரிகாரமாக அமையுமளவுக்கு மகத்தான கூலி அதற்கு உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• الترهيب من الحكم بغير ما أنزل الله في شأن القصاص وغيره.
4. பழிவாங்குதல் மற்றும் இன்னபிற விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பளிக்காமல் இருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
含义的翻译 段: (44) 章: 玛仪戴
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭