《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
15 : 12

فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ یَّجْعَلُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ ۚ— وَاَوْحَیْنَاۤ اِلَیْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

அவர்கள் அவரைக் கொண்டு சென்றபோது, அவரை கிணற்றின் ஆழத்தில் ஆக்கி விட அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர். “அவர்களுடைய இந்த காரியத்தை (பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக அறிவிப்பீர், (இதை இப்போது) அவர்கள் உணர மாட்டார்கள்” என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். info
التفاسير:

external-link copy
16 : 12

وَجَآءُوْۤ اَبَاهُمْ عِشَآءً یَّبْكُوْنَ ۟ؕ

அன்று மாலை சாய்ந்த பின், அவர்கள் தம் தந்தையிடம் அழுதவர்களாக வந்தனர். info
التفاسير:

external-link copy
17 : 12

قَالُوْا یٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا یُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ ۚ— وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِیْنَ ۟

“எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் எங்கள் பொருளிடம் யூஸுஃபை விட்டுவிட்டு நாங்கள் அம்பெறிந்தவர்களாக சென்றோம். (அப்போது) அவரை ஓநாய் தின்றது. நாங்கள் (சந்தேகப்பட முடியாத) உண்மையாளர்களாக இருந்தாலும் எங்களை நீர் நம்புபவராக இல்லை” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
18 : 12

وَجَآءُوْ عَلٰی قَمِیْصِهٖ بِدَمٍ كَذِبٍ ؕ— قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ— فَصَبْرٌ جَمِیْلٌ ؕ— وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟

அவருடைய சட்டையில் ஒரு பொய்யான இரத்தத்தை (தடவி)க் கொண்டு வந்தனர். “மாறாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அலங்கரித்தன. (அதை நீங்கள் செய்து விட்டீர்கள்.) ஆகவே, அழகிய பொறுமை (தான் நல்லது). நீங்கள் வர்ணிப்பவை மீது அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று (யஅகூப்) கூறினார். info
التفاسير:

external-link copy
19 : 12

وَجَآءَتْ سَیَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰی دَلْوَهٗ ؕ— قَالَ یٰبُشْرٰی هٰذَا غُلٰمٌ ؕ— وَاَسَرُّوْهُ بِضَاعَةً ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَعْمَلُوْنَ ۟

ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களில் நீர் கொண்டு வருபவரை அனுப்பினார்கள். அவர் (தன்) வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “ஆ... நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை தங்கள்) வர்த்தகப் பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்தார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன். info
التفاسير:

external-link copy
20 : 12

وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚ— وَكَانُوْا فِیْهِ مِنَ الزَّاهِدِیْنَ ۟۠

(திரும்பி வந்த யூஸுஃபுடைய சகோதரர்கள்) எண்ணப்பட்ட (சில) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (பயணக் கூட்டத்தாரிடம்) விற்றார்கள். (அவர்கள்) அவர் விஷயத்தில் ஆசையற்றவர்களாக இருந்தனர். info
التفاسير:

external-link copy
21 : 12

وَقَالَ الَّذِی اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِیْ مَثْوٰىهُ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ؕ— وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ؗ— وَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ؕ— وَاللّٰهُ غَالِبٌ عَلٰۤی اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர், “நீ இவரின் தங்குமிடத்தை கண்ணியப்படுத்து; (கண்ணியமாக தங்கவை) அவர் நமக்கு பலனளிக்கலாம்; அல்லது அவரை நாம் (நமக்கு) ஒரு பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று தன் மனைவிக்கு கூறினார். இவ்வாறு தான் பூமியில் யூஸுஃபுக்கு ஆதிக்கமளித்தோம். (கனவு பற்றிய) செய்திகளின் விளக்கத் திலிருந்து (நாம் நாடியதை) அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (அவருக்கு ஆதிக்கமளித்தோம்). அல்லாஹ் தன் காரியத்தில் மிகைத்தவன். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
22 : 12

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

அவர் (தன் வாலிபத்தின்) முழு ஆற்றல்களை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், (-புரிகின்ற திறமையையும்) கல்வியையும் கொடுத்தோம். நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலி தருவோம். info
التفاسير: