Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (67) Sura: Et-Tevba
اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْ بَعْضٍ ۘ— یَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَیَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَیَقْبِضُوْنَ اَیْدِیَهُمْ ؕ— نَسُوا اللّٰهَ فَنَسِیَهُمْ ؕ— اِنَّ الْمُنٰفِقِیْنَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
9.67. நயவஞ்சகர்களான ஆண்களும் பெண்களும் நயவஞ்சகப் பண்புகளில் ஒன்றுபட்டவர்களே. அவர்கள் தீமை செய்யத் தூண்டுகிறார்கள். நன்மையை விட்டும் தடுக்கிறார்கள். தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கு வழிபடுதை விட்டுவிட்டார்கள். எனவே அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டான். நிச்சயமாக இந்த நயவஞ்சகர்களே அல்லாஹ்வுக்குக் அடிபணியாதவர்கள். சத்தியப் பாதையிலிருந்து பாவம் மற்றும் வழிகேட்டை நோக்கி வெளியேறியவர்கள்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• قبائح المنافقين كثيرة، ومنها الإقدام على الأيمان الكاذبة، ومعاداة الله ورسوله، والاستهزاء بالقرآن والنبي والمؤمنين، والتخوف من نزول سورة في القرآن تفضح شأنهم، واعتذارهم بأنهم هازلون لاعبون، وهو إقرار بالذنب، بل هو عذر أقبح من الذنب.
1. நயவஞ்சகர்களின் கெட்ட பண்புகள் ஏராளமானவை. அவற்றுள் சில: துணிந்து பொய்ச்சத்தியம் செய்வது, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பது, குர்ஆனையும், இறைத்தூதர், நம்பிக்கையாளர்கள் ஆகியோரையும் பரிகாசம் செய்வது, தமது விடயங்கள் அம்பலப்படுத்தும் ஏதேனும் அத்தியாயம் இறங்கிவிடுமோ என்று அஞ்சுவது, வீண் விளையாட்டுக்காகவே செய்தோம் என சாக்குப்போக்குகள் கூறுவது. விளையாட்டுக்காகச் செய்தோம் எனக் காரணம் கூறுவது பாவம் செய்ததை ஏற்றுக்கொள்வதாகும். இவ்வாறு கூறுவது வெறும் பாவத்தை விட மோசமானதாகும்.

• لا يُقبل الهزل في الدين وأحكامه، ويعد الخوض بالباطل في كتاب الله ورسله وصفاته كفرًا.
2. மார்க்க சட்டதிட்டங்கள் விஷயத்தில் பரிகாசம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அல்லாஹ்வைக் குறித்தும் அவனுடைய தூதுரைக் குறித்தும் அவனுடைய பண்புகளைக் குறித்தும் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகவே கருதப்படும்.

• النّفاق: مرض عُضَال متأصّل في البشر، وأصحاب ذلك المرض متشابهون في كل عصر وزمان في الأمر بالمنكر والنّهي عن المعروف، وقَبْض أيديهم وإمساكهم عن الإنفاق في سبيل الله للجهاد، وفيما يجب عليهم من حق.
3. நயவஞ்சகம் மனிதர்களில் வேரூன்றியுள்ள கடுமையான நோயாகும். இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தீமையை ஏவி நன்மையை விட்டும் தடுத்தல், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காகவும் அவர்கள் மீது கடமையானவற்றிற்காகவும் செலவளிக்காது கஞ்சத்தனம் செய்தல் ஆகிய பண்புகளில் ஒத்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.

• الجزاء من جنس العمل، فالذي يترك أوامر الله ويأتي نواهيه يتركه من رحمته.
4. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயற்படுத்தாமல் விட்டு விட்டு அவன் தடைசெய்தவற்றில் ஈடுபடுவோருக்கு அல்லாஹ்வும் அருள் புரியாது விட்டு விடுகிறான்.

 
Prijevod značenja Ajet: (67) Sura: Et-Tevba
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje