Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
43 : 14

مُهْطِعِیْنَ مُقْنِعِیْ رُءُوْسِهِمْ لَا یَرْتَدُّ اِلَیْهِمْ طَرْفُهُمْ ۚ— وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ۟ؕ

(அந்நாளில்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக... (வருவர்.) அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும். info
التفاسير:

external-link copy
44 : 14

وَاَنْذِرِ النَّاسَ یَوْمَ یَاْتِیْهِمُ الْعَذَابُ فَیَقُوْلُ الَّذِیْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ— نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ؕ— اَوَلَمْ تَكُوْنُوْۤا اَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِّنْ زَوَالٍ ۟ۙ

(நபியே!) மக்களை, அவர்களுக்கு வேதனை வரும் ஒரு நாளைப் பற்றி எச்சரிப்பீராக! அநியாயக்காரர்கள் கூறுவர்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்திருக்கவில்லையா?” info
التفاسير:

external-link copy
45 : 14

وَّسَكَنْتُمْ فِیْ مَسٰكِنِ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَیَّنَ لَكُمْ كَیْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ ۟

“தமக்குத்தாமே தீங்கிழைத் தவர்களுடைய வசிப்பிடங்களில் (நீங்களும்) வசித்தீர்கள் (அல்லவா)? நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக இருந்தது. உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.” info
التفاسير:

external-link copy
46 : 14

وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْ ؕ— وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ ۟

திட்டமாக அவர்கள் தங்கள் சூழ்ச்சியை செய்(து முடித்)தனர். அல்லாஹ்விடம் அவர்களுடைய சூழ்ச்சி (அறியப்பட்ட ஒன்றுதான். அது புதியதல்ல). அவர்களுடைய சூழ்ச்சி அதனால் மலைகள் பெயர்த்துவிடும்படி இருந்தாலும் சரியே! (அல்லாஹ்வின் வல்லமைக்கு முன் அது ஒன்றுமே இல்லை.) info
التفاسير:

external-link copy
47 : 14

فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟ؕ

அல்லாஹ்வை (அவன்) தன் தூதர்களுக்கு (தான் அளித்த) தனது வாக்கை மீறுபவனாக (நபியே!) நிச்சயம் எண்ணாதீர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
48 : 14

یَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَیْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟

பூமி வேறு பூமியாகவும் வானங்களும் (அவ்வாறே) மாற்றப்பட்டு, ஒரே ஒருவனான அடக்கி ஆளுபவனான அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள் வெளிப்படும் நாளில்... info
التفاسير:

external-link copy
49 : 14

وَتَرَی الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ مُّقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟ۚ

அந்நாளில் குற்றவாளிகளை விலங்குகளில் பிணைக்கப்பட்டவர்களாக காண்பீர். info
التفاسير:

external-link copy
50 : 14

سَرَابِیْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰی وُجُوْهَهُمُ النَّارُ ۟ۙ

அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவை. அவர்களுடைய முகங்களை நெருப்பு சூழும். info
التفاسير:

external-link copy
51 : 14

لِیَجْزِیَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக (மறுமையை ஏற்படுத்தியுள்ளான்). நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிகத் தீவிரமானவன். info
التفاسير:

external-link copy
52 : 14

هٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِیُنْذَرُوْا بِهٖ وَلِیَعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّلِیَذَّكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟۠

இ(வ்வேதமான)து மக்களுக்கொரு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; அவன் ஒரே ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு இறக்கினான்). info
التفاسير: