Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (15) Simoore: Simoore rewɓe
وَالّٰتِیْ یَاْتِیْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَیْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ— فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِی الْبُیُوْتِ حَتّٰی یَتَوَفّٰهُنَّ الْمَوْتُ اَوْ یَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِیْلًا ۟
4.15. உங்கள் பெண்களில் திருமணம் முடித்த முடிக்காத யாரேனும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு எதிராக நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய முஸ்லிமான நான்கு ஆண் சாட்சிகளைத் தேடுங்கள். அவர்கள் ‘அந்தப் பெண்கள் விபச்சாரம் புரிந்தார்கள்’ என்று சாட்சிகூறினால் அந்தப் பெண்களுக்குத் தண்டனையாக அவர்கள் மரணிக்கும்வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு வேறொரு வழியை ஏற்படுத்தும்வரை அவர்களை வீடுகளில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். (பின்னர் அல்லாஹ் அவர்களுக்கான வழியைத் தெளிவுபடுத்தினான், அவர்கள் திருமணமாகதவர்களாக இருந்தால் அவர்கள்மீது நூறு கசையடிகள் அடிக்கப்பட்டு ஒரு வருடம் நாடுகடத்தப்பட வேண்டும். அவர்கள் திருமணமானவர்களாக இருந்தால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்).
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• ارتكاب فاحشة الزنى من أكثر المعاصي خطرًا على الفرد والمجتمع؛ ولهذا جاءت العقوبات عليها شديدة.
1. விபச்சாரம் தனிமனிதன்மீதும் சமூகத்தின்மீதும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய பாவங்களில் ஒன்றாகும். எனவேதான் அதற்கான தண்டனையும் கடுமையாக இருக்கின்றது.

• لطف الله ورحمته بعباده حيث فتح باب التوبة لكل مذنب، ويسر له أسبابها، وأعانه على سلوك سبيلها.
2. அல்லாஹ் தன் அடியார்களுக்காக பாவமன்னிப்பின் வாசலை திறந்தே வைத்துள்ளான். அதனுடைய காரணிகளையும் இலகுபடுத்தியுள்ளான். அந்த வழியில் செல்வதற்கு உதவியும் புரிந்துள்ளான். இது அல்லாஹ் தன் அடியார்கள்மீது பொழிந்த பெருங்கருணையாகும்.

• كل من عصى الله تعالى بعمد أو بغير عمد فهو جاهل بقدر من عصاه جل وعلا، وجاهل بآثار المعاصي وشؤمها عليه.
3. வேண்டுமென்றோ தற்செயலாகவோ பாவங்களில் ஈடுபடும் அனைவரும் தான் மாறுசெய்துகொண்டிருக்கும் அல்லாஹ்வின் தகுதியையும் பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும் அறியாதவரே.

• من أسباب استمرار الحياة الزوجية أن يكون نظر الزوج متوازنًا، فلا يحصر نظره فيما يكره، بل ينظر أيضا إلى ما فيه من خير، وقد يجعل الله فيه خيرًا كثيرًا.
4. மணவாழ்க்கை உறுதியாக நிலைத்திருக்க கணவன் சமநிலைப் பார்வையுடையவனாக இருக்கவேண்டும். அவன் தான் வெறுக்கும் விஷயத்தை மாத்திரம் கவனிக்காது. மனைவியின் நல்லவிடயங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சிலவேளை அல்லாஹ் அதில் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.

 
Firo maanaaji Aaya: (15) Simoore: Simoore rewɓe
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tippudi firooji ɗii

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uddude