Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (40) Simoore: Simoo tuubabuya
اِلَّا تَنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِیْنَ كَفَرُوْا ثَانِیَ اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ اِذْ یَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ— فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلَیْهِ وَاَیَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِیْنَ كَفَرُوا السُّفْلٰی ؕ— وَكَلِمَةُ اللّٰهِ هِیَ الْعُلْیَا ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
9.40. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யவில்லையெனில், அவருடைய அழைப்பை ஏற்று அவனுடைய பாதையில் போர் செய்வதற்கான அவரது அழைப்புக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையெனில், நீங்கள் இல்லாதிருந்த சமயத்திலும் அவன் அவருக்கு உதவிசெய்துள்ளான். அதுதான் இணைவைப்பாளர்கள் அவரையும் அபூபக்கர் (ரழி) அவர்களையும் வெளியேற்றிய சமயமாகும். அவர்கள் இருவரும் ஸவ்ர் என்னும் குகையில் வேறு யாருமின்றி தம்மைத் தேடிக்கொண்டிருந்த நிராகரிப்பாளர்களை விட்டும் மறைந்திருந்தனர். இணைவைப்பாளர்கள் தம்மைக் கண்டுபிடித்து விடுவார்களோ என அபூபக்ர் (ரழி) பயந்த போது தூதர் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் நம்முடனிருந்து பலப்படுத்திக் கொண்டும் உதவி செய்து கொண்டும் இருக்கின்றான்.” அல்லாஹ் தன் தூதரின் உள்ளத்தில் நிம்மதியை இறக்கினான். அவருக்கு உதவி செய்வதற்காக உங்களால் பார்க்க முடியாத அவரைப் பலப்படுத்தும் வானவர் படையை அனுப்பினான். இஸ்லாத்தை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வாக்கை தாழ்த்தினான். அல்லாஹ்வின் வாக்கை உயர்ந்ததாக மாற்றினான். அல்லாஹ் தன் உள்ளமையிலும் அடக்குவதிலும் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது திட்டமிடலில் தான் அமைத்த விதிகளில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• العادات المخالفة للشرع بالاستمرار عليها دونما إنكار لها يزول قبحها عن النفوس، وربما ظُن أنها عادات حسنة.
1. மார்க்கத்திற்கு முரணான பழக்கவழக்கங்களை எவ்வித எதிர்ப்புமின்றி தொடர்ந்து செய்யும் போது உள்ளத்திலிருந்து அதன் அருவருப்புத் தன்மை நீங்கிவிடுகிறது. சில சமயங்களில் அவற்றை நல்ல பழக்கவழக்கங்கள் என்று கருதப்படும்.

• عدم النفير في حال الاستنفار من كبائر الذنوب الموجبة لأشد العقاب، لما فيها من المضار الشديدة.
2. போர்ச் சூழலில் போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டும் புறப்படாமல் இருப்பது தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். ஏனெனில் பலவிதமான கெடுதிகள் உள்ளன.

• فضيلة السكينة، وأنها من تمام نعمة الله على العبد في أوقات الشدائد والمخاوف التي تطيش فيها الأفئدة، وأنها تكون على حسب معرفة العبد بربه، وثقته بوعده الصادق، وبحسب إيمانه وشجاعته.
3. மன அமைதியின் சிறப்பு. உள்ளங்கள் நடுங்கும் கடினமான சமயங்களில் அல்லாஹ் அடியானுக்கு வழங்கும் பெரும் அருளே மன அமைதியாகும். இறைவனைக் குறித்த அடியானின் புரிதல், அவனது வாக்குறுதியின் மீதுள்ள நம்பிக்கை, அவனுடைய இறைநம்பிக்கை துணிவு என்பவற்றுக்கேற்ப இந்த அருள் கிடைக்கும்.

• أن الحزن قد يعرض لخواص عباد الله الصدِّيقين وخاصة عند الخوف على فوات مصلحة عامة.
4. உண்மையாளர்களாக இருக்கின்ற அல்லாஹ்வின் பிரத்யேக அடியார்களுக்கும் கவலை ஏற்படத்தான் செய்கிறது. குறிப்பாக பொது நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உண்டாகும் அச்சத்தின் போது இக்கவலை அவர்களுக்கு ஏற்படும்.

 
Firo maanaaji Aaya: (40) Simoore: Simoo tuubabuya
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tippudi firooji ɗii

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uddude