Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Lexique des traductions


Traduction des sens Verset: (38) Sourate: AT-TAWBAH
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَا لَكُمْ اِذَا قِیْلَ لَكُمُ انْفِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَی الْاَرْضِ ؕ— اَرَضِیْتُمْ بِالْحَیٰوةِ الدُّنْیَا مِنَ الْاٰخِرَةِ ۚ— فَمَا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا قَلِیْلٌ ۟
9.38. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளுடன் போரிடுவதற்காக அழைக்கப்பட்டால் சோம்பலுற்று, உங்களின் வீடுகளில் தங்கி விடுகிறீர்களே? அல்லாஹ் தன் பாதையில் போரிடுபவர்களுக்காக தயார்படுத்திவைத்துள்ள நிலையான மறுமை இன்பங்களுக்குப் பகரமாக அழியக்கூடிய, நிரந்தரமற்ற இவ்வுலக இன்பங்களை விரும்புகிறீர்களா? மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலக இன்பங்கள் அற்ப இன்பங்களேயாகும். நிரந்தரமானதை விட்டு விட்டு அழியக்கூடியதையும் மகத்தானதை விட்டுவிட்டு அற்பமானதையும் ஓர் அறிவாளி எவ்வாறு தேர்ந்தெடுப்பான்?
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• العادات المخالفة للشرع بالاستمرار عليها دونما إنكار لها يزول قبحها عن النفوس، وربما ظُن أنها عادات حسنة.
1. மார்க்கத்திற்கு முரணான பழக்கவழக்கங்களை எவ்வித எதிர்ப்புமின்றி தொடர்ந்து செய்யும் போது உள்ளத்திலிருந்து அதன் அருவருப்புத் தன்மை நீங்கிவிடுகிறது. சில சமயங்களில் அவற்றை நல்ல பழக்கவழக்கங்கள் என்று கருதப்படும்.

• عدم النفير في حال الاستنفار من كبائر الذنوب الموجبة لأشد العقاب، لما فيها من المضار الشديدة.
2. போர்ச் சூழலில் போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டும் புறப்படாமல் இருப்பது தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். ஏனெனில் பலவிதமான கெடுதிகள் உள்ளன.

• فضيلة السكينة، وأنها من تمام نعمة الله على العبد في أوقات الشدائد والمخاوف التي تطيش فيها الأفئدة، وأنها تكون على حسب معرفة العبد بربه، وثقته بوعده الصادق، وبحسب إيمانه وشجاعته.
3. மன அமைதியின் சிறப்பு. உள்ளங்கள் நடுங்கும் கடினமான சமயங்களில் அல்லாஹ் அடியானுக்கு வழங்கும் பெரும் அருளே மன அமைதியாகும். இறைவனைக் குறித்த அடியானின் புரிதல், அவனது வாக்குறுதியின் மீதுள்ள நம்பிக்கை, அவனுடைய இறைநம்பிக்கை துணிவு என்பவற்றுக்கேற்ப இந்த அருள் கிடைக்கும்.

• أن الحزن قد يعرض لخواص عباد الله الصدِّيقين وخاصة عند الخوف على فوات مصلحة عامة.
4. உண்மையாளர்களாக இருக்கின்ற அல்லாஹ்வின் பிரத்யேக அடியார்களுக்கும் கவலை ஏற்படத்தான் செய்கிறது. குறிப்பாக பொது நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உண்டாகும் அச்சத்தின் போது இக்கவலை அவர்களுக்கு ஏற்படும்.

 
Traduction des sens Verset: (38) Sourate: AT-TAWBAH
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Lexique des traductions

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fermeture