Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Alhajj   Aya:
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ ۙ— وَّاَنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یُّرِیْدُ ۟
22.16. மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான தெளிவான ஆதாரங்களை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியது போன்றே முஹம்மதின் மீது குர்ஆனை தெளிவான சான்றுகளாக இறக்கியுள்ளோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அருளால் தான் நாடியவர்களுக்கு நேர் வழியை அடைவதற்கு உதவுகிறான்.
Tafsiran larabci:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰی وَالْمَجُوْسَ وَالَّذِیْنَ اَشْرَكُوْۤا ۖۗ— اِنَّ اللّٰهَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
22.17. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தில் உள்ளவர்கள், யூதர்கள், சாபியீன்கள் - சில இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள்- கிருஸ்தவர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள் ஆகியோரிடையே மறுமை நாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அவர்களில் நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். மற்றவர்களை நரகத்தில் புகுத்திவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் சொல், செயல் என அனைத்திற்கும் சாட்சியாளனாக இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَسْجُدُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِیْرٌ مِّنَ النَّاسِ ؕ— وَكَثِیْرٌ حَقَّ عَلَیْهِ الْعَذَابُ ؕ— وَمَنْ یُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ ؕ— اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یَشَآءُ ۟
22.18. -தூதரே!- நிச்சயமாக வானங்களிலுள்ள வானவர்களும் பூமியிலுள்ள நம்பிக்கைகொண்ட மனித, ஜின் இனத்தாரும் அல்லாஹ்வை வழிப்படுவதற்காக சிரம்பணிகின்றார்கள். மேலும் சூரியனும், சந்திரனும், வானிலுள்ள நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பூமியிலுள்ள உயிரினங்களும் அவனுக்குக் கட்டுப்பட்டு சிரம்பணிகின்றன. இன்னும் ஏராளமான மக்களும் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிகிறார்கள் என்பதை நீர் அறியவில்லையா? அதிகமானோர் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிவதற்கு மறுக்கின்றனர். அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை உறுதியாகி விட்டது. யாருக்கு அல்லாஹ் அவருடைய நிராகரிப்பின் காரணமாக இழிவை விதித்துவிட்டானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
Tafsiran larabci:
هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِیْ رَبِّهِمْ ؗ— فَالَّذِیْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِیَابٌ مِّنْ نَّارٍ ؕ— یُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِیْمُ ۟ۚ
22.19. தமது இறைவனுடைய விடயத்தில் தம்மில் யார் சத்தியவாதிகள் என முரண்பட்டுக்கொள்ளும் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் நம்பிக்கையாளர்கள், மற்றொரு பிரிவினர் நிராகரிப்பாளர்கள். ஆடை உடலை சூழ்ந்துகொள்வது போல நிராகரிப்பாளர்களை நரகம் சூழ்ந்துகொள்ளும். அவர்களின் தலைக்கு மேலிருந்து கொதிக்கும் நீர் கொட்டப்படும்.
Tafsiran larabci:
یُصْهَرُ بِهٖ مَا فِیْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۟ؕ
22.20. அதன் அதிக வெப்பத்தினால் அவர்களின் வயிற்றிலுள்ள குடல்கள் உருக்கிவிடுவதோடு அவர்களின் தோல்களையும் தாக்கி அதனையும் உருக்கிவிடும்.
Tafsiran larabci:
وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِیْدٍ ۟
22.21. நரகத்தில் வானவர்கள் இரும்புச் சம்மட்டியால் அவர்களின் தலைகளில் அடிப்பார்கள்.
Tafsiran larabci:
كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِیْدُوْا فِیْهَا ۗ— وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟۠
22.22. அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனை தாங்காமல் நரகிலிருந்து வெளியேற முயற்சி செய்யும்போதெல்லாம் அதிலேயே அவர்கள் தள்ளப்படுவார்கள். அவர்களிடம் கூறப்படும்: “கொழுந்து விட்டெரியும் நெருப்பின் வேதனை அனுபவியுங்கள்.”
Tafsiran larabci:
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ؕ— وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
22.23. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்ட நம்பிக்கையாளர்களை அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு தங்கம் மற்றும் முத்துகளிலான காப்புகளை அணிவித்து அல்லாஹ் அலங்கரிப்பான். அங்கு அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الهداية بيد الله يمنحها من يشاء من عباده.
1. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அவன் தான் நாடிய தன் அடியார்களுக்கு அதனை வழங்குகிறான்.

• رقابة الله على كل شيء من أعمال عباده وأحوالهم.
2. அடியார்களின் செயல்கள், நிலமைகள் ஆகிய அனைத்தையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

• خضوع جميع المخلوقات لله قدرًا، وخضوع المؤمنين له طاعة.
3. அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வுக்கு விதியினடிப்படையில் கட்டுப்பட்டே இருக்கின்றன. நம்பிக்கையாளர்கள் அவனுக்கு விரும்பி அடிபணிகிறார்கள்.

• العذاب نازل بأهل الكفر والعصيان، والرحمة ثابتة لأهل الإيمان والطاعة.
4. நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகள் மீது வேதனை இறங்கும். வழிப்பட்டவர்கள், நம்பிக்கையாளர்கள் மீது கருணை உறுதியானதாகும்.

 
Fassarar Ma'anoni Sura: Alhajj
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa