Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Āli 'Imrān   Ayah:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاُولٰٓىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِ ۟ۙ
3.10. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களை இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அல்லாஹ்வின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிடாது. இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் மறுமைநாளில் எரிக்கப்படும் நரகத்தின் எரிபொருள்களாவர்.
Tafsir berbahasa Arab:
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ— وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ— وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟
3.11. இவர்கள், அல்லாஹ்வை நிராகரித்து, அவனுடைய சான்றுகளைப் பொய் எனக்கூறிய ஃபிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றவர்கள். அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. தன்னை நிராகரித்து, தன் சான்றுகளைப் பொய் எனக் கூறக்கூடியவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன்.
Tafsir berbahasa Arab:
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰی جَهَنَّمَ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟
3.12. தூதரே! பலதரப்பட்ட மதங்களில் உள்ள நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்கள் உங்களை மிகைத்துவிடுவார்கள். நீங்கள் நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுவீர்கள். அல்லாஹ் நரக நெருப்பில் உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். அது உங்களுக்கு மோசமான தங்குமிடமாகும்.”
Tafsir berbahasa Arab:
قَدْ كَانَ لَكُمْ اٰیَةٌ فِیْ فِئَتَیْنِ الْتَقَتَا ؕ— فِئَةٌ تُقَاتِلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاُخْرٰی كَافِرَةٌ یَّرَوْنَهُمْ مِّثْلَیْهِمْ رَاْیَ الْعَیْنِ ؕ— وَاللّٰهُ یُؤَیِّدُ بِنَصْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟
3.13. பத்ருப்போரில் மோதிக்கொண்ட இரு பிரிவினரிடமும் உங்களுக்கு படிப்பினைகளும் சான்றுகளும் இருக்கின்றன. ஒரு பிரிவினர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அவனுடைய தூதரும் அவருடைய தோழர்களுமாவார். அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் நிராகரித்தோரின் வாக்கை தாழ்த்துவதற்காகவும் அவனுடைய பாதையில் போரிட்டார்கள். மற்றொரு பிரிவினர் அவனை நிராகரித்த மக்காவாசிகளாவர். கர்வத்திற்காகவும் வெளிப்பகட்டிற்காகவும் குலப்பெருமைக்காகவும் அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அவர்களை நம்பிக்கையாளர்கள் தம்மைவிட இருமடங்காகக் கண்டார்கள். அல்லாஹ் தன் நேசர்களுக்கு உதவிசெய்தான். அவன் தான் நாடியோரை தன் உதவியால் வலுப்படுத்துகிறான். அகப்பார்வையுடையவர்களுக்கு இதில் படிப்பினைகளும் அறிவுரைகளும் இருக்கின்றன. நம்பிக்கையாளர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள்தாம் அல்லாஹ்வின் உதவியைப் பெறுவார்கள். அசத்தியவாதிகள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் தோல்வியையே பெறுவார்கள். என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
Tafsir berbahasa Arab:
زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِیْنَ وَالْقَنَاطِیْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَیْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ؕ— ذٰلِكَ مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ ۟
3.14. மக்களை சோதிக்கும்பொருட்டு இவ்வுலக இன்பங்களை விரும்புவதை அவர்களுக்கு அழகாகக் காட்டியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். உதாரணமாக, பெண்கள், ஆண்பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய அடையாளமிடப்பட்ட குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள், விளைநிலங்கள். ஆயினும் இவையனைத்தும் சில காலம் அனுபவித்த பின் அழியக்கூடிய இவ்வுலக இன்பங்கள்தாம். இவற்றின்மீது மோகம்கொள்வது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல. அல்லாஹ்விடமே சுவனம் என்னும் அழகிய திரும்புமிடம் இருக்கின்றது. அது வானங்கள் பூமியளவு விசாலமானது.
Tafsir berbahasa Arab:
قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَیْرٍ مِّنْ ذٰلِكُمْ ؕ— لِلَّذِیْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟ۚ
3.15. தூதரே! நீர் கூறுவீராக, “இந்த இன்பங்களைவிட சிறந்தவற்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு சொர்க்கச் சோலைகள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். மரணமோ அழிவோ இன்றி அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு குணத்திலும் தோற்றத்திலும் அனைத்துக் குறைகளையும் விட்டும் பரிசுத்தமான துணைவியரும் உண்டு. இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் திருப்தியடைவான். அவன் ஒருபோதும் அவர்கள்மீது கோபம்கொள்ள மாட்டான். அல்லாஹ் தன் அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு கூலி வழங்குவான்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• أن غرور الكفار بأموالهم وأولادهم لن يغنيهم يوم القيامة من عذاب الله تعالى إذا نزل بهم.
1. நிராகரிப்பாளர்கள் தங்களின் செல்வங்களைக் கொண்டும் பிள்ளைகளைக் கொண்டும் பெருமையடித்தாலும் அது மறுமைநாளில் அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் அவர்களைக் காப்பாற்றாது.

• النصر حقيقة لا يتعلق بمجرد العدد والعُدة، وانما بتأييد الله تعالى وعونه.
2. உண்மையான வெற்றி வெறும் ஆள்பலம் ஆயுத பலத்தின் மூலம் கிடைக்காது. அது அல்லாஹ்வின் உதவியால் மாத்திரமே கிடைக்கும்.

• زَيَّن الله تعالى للناس أنواعًا من شهوات الدنيا ليبتليهم، وليعلم تعالى من يقف عند حدوده ممن يتعداها.
3. மக்களில் தன்னுடைய வரம்புகளைப் பேணுபவர் யார் என்பதை அறிவதற்காகவும் அவர்களைச் சோதிப்பதற்காகவும் அல்லாஹ் பலவித உலக இன்பங்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டியுள்ளான்.

• كل نعيم الدنيا ولذاتها قليل زائل، لا يقاس بما في الآخرة من النعيم العظيم الذي لا يزول.
4. இவ்வுலக இன்பங்கள் அனைத்தும் அற்பமானவை மற்றும் அழியக்கூடியவை. இதனை மறுமையில் கிடைக்கும் நிரந்தர இன்பங்களுடன் ஒப்பிட முடியாது.

 
Terjemahan makna Surah: Āli 'Imrān
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup