クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 対訳の目次


対訳 節: (37) 章: 悔悟章
اِنَّمَا النَّسِیْٓءُ زِیَادَةٌ فِی الْكُفْرِ یُضَلُّ بِهِ الَّذِیْنَ كَفَرُوْا یُحِلُّوْنَهٗ عَامًا وَّیُحَرِّمُوْنَهٗ عَامًا لِّیُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَیُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ؕ— زُیِّنَ لَهُمْ سُوْٓءُ اَعْمَالِهِمْ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟۠
9.37. அரபிகள் அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்தது போன்று புனிதப்படுத்தப்பட்ட மாதத்தின் புனிதத்தை, புனிதப்படுத்தப்படாத ஒரு மாதத்திற்கு மாற்றி, அதனைப் புனித மாதத்தின் இடத்தில் வைத்து அதன் புனிதத்தைப் பிற்படுத்துவது இறைநிராகரிப்பை விட மேலதிகமான நிராகரிப்பாகும். புனித மாதங்களின் விடயத்தில் அவனது சட்டத்தை அவர்கள் நிராகரித்துள்ளனர். ஷைத்தான் தவறான இந்த வழிகாட்டலை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வை நிராகரித்தவர்களை வழிகெடுக்கிறான். ஒரு வருடம் அதன் புனிதத்தை மீறுகின்றனர். மற்றொரு வருடம் அதன் புனிதத்தைப் பேணுகின்றனர். உரிய மாதத்துக்கு முரண்பட்டாலும் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் எண்ணிக்கையுடன் உடன்படுவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். எனவேதான் ஒரு மாதத்தின் புனிதத்தை மீறினால் அதற்குப் பகரமாக இன்னுமொரு மாதத்தைப் புனிதப்படுத்துகின்றனர். அதன் மூலம் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் புனிதத்தை அவர்கள் மீறுகின்றனர். அதற்குரிய சட்டங்களுக்கு மாறுசெய்கின்றனர். அவர்களின் இந்த தீய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டியுள்ளான். எனவே அதன்படி செயல்படுகிறார்கள். அவற்றில் ஒன்றே புனித மாதத்தைப் பிற்போடுவதாகும். நிராகரிப்பில் நிலைத்திருக்கும் நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• العادات المخالفة للشرع بالاستمرار عليها دونما إنكار لها يزول قبحها عن النفوس، وربما ظُن أنها عادات حسنة.
1. மார்க்கத்திற்கு முரணான பழக்கவழக்கங்களை எவ்வித எதிர்ப்புமின்றி தொடர்ந்து செய்யும் போது உள்ளத்திலிருந்து அதன் அருவருப்புத் தன்மை நீங்கிவிடுகிறது. சில சமயங்களில் அவற்றை நல்ல பழக்கவழக்கங்கள் என்று கருதப்படும்.

• عدم النفير في حال الاستنفار من كبائر الذنوب الموجبة لأشد العقاب، لما فيها من المضار الشديدة.
2. போர்ச் சூழலில் போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டும் புறப்படாமல் இருப்பது தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். ஏனெனில் பலவிதமான கெடுதிகள் உள்ளன.

• فضيلة السكينة، وأنها من تمام نعمة الله على العبد في أوقات الشدائد والمخاوف التي تطيش فيها الأفئدة، وأنها تكون على حسب معرفة العبد بربه، وثقته بوعده الصادق، وبحسب إيمانه وشجاعته.
3. மன அமைதியின் சிறப்பு. உள்ளங்கள் நடுங்கும் கடினமான சமயங்களில் அல்லாஹ் அடியானுக்கு வழங்கும் பெரும் அருளே மன அமைதியாகும். இறைவனைக் குறித்த அடியானின் புரிதல், அவனது வாக்குறுதியின் மீதுள்ள நம்பிக்கை, அவனுடைய இறைநம்பிக்கை துணிவு என்பவற்றுக்கேற்ப இந்த அருள் கிடைக்கும்.

• أن الحزن قد يعرض لخواص عباد الله الصدِّيقين وخاصة عند الخوف على فوات مصلحة عامة.
4. உண்மையாளர்களாக இருக்கின்ற அல்லாஹ்வின் பிரத்யேக அடியார்களுக்கும் கவலை ஏற்படத்தான் செய்கிறது. குறிப்பாக பொது நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உண்டாகும் அச்சத்தின் போது இக்கவலை அவர்களுக்கு ஏற்படும்.

 
対訳 節: (37) 章: 悔悟章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 対訳の目次

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

閉じる