யாஸீன்

external-link copy
1 : 36

یٰسٓ ۟ۚ

யா, ஸீன். info
التفاسير: |

external-link copy
2 : 36

وَالْقُرْاٰنِ الْحَكِیْمِ ۟ۙ

ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக! info
التفاسير: |

external-link copy
3 : 36

اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ۙ

நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர். info
التفاسير: |

external-link copy
4 : 36

عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ؕ

நேரான பாதையின் மீது இருக்கிறீர். info
التفاسير: |

external-link copy
5 : 36

تَنْزِیْلَ الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ

மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் இது. info
التفاسير: |

external-link copy
6 : 36

لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ ۟

ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இந்த வேதம் அருளப்பட்டது). அவர்களின் மூதாதைகள் (இதற்கு முன்னர் இறைத்தூதர்களால்) எச்சரிக்கப்படவில்லை. ஆகவே, அவர்கள் அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர். info
التفاسير: |

external-link copy
7 : 36

لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰۤی اَكْثَرِهِمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

அவர்களில் அதிகமானவர்கள் மீது (அல்லாஹ்வின்) வாக்கு திட்டமாக உறுதியாகிவிட்டது. ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
8 : 36

اِنَّا جَعَلْنَا فِیْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِیَ اِلَی الْاَذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ ۟

நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகள் மீது அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை) உயர்த்தியவர்களாக இருக்கின்றனர். info
التفاسير: |

external-link copy
9 : 36

وَجَعَلْنَا مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَیْنٰهُمْ فَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟

அவர்களுக்கு முன்னும் ஒரு தடுப்பையும் அவர்களுக்கு பின்னும் ஒரு தடுப்பையும் நாம் ஆக்கினோம். ஆகவே, நாம் அவர்களை குருடாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் பார்க்கமாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
10 : 36

وَسَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

நீர் அவர்களை எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் அவர்கள் மீது (இரண்டும்) சமம் தான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
11 : 36

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ ۚ— فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِیْمٍ ۟

நீர் எச்சரிப்பதெல்லாம் இந்த வேதத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை பயந்தவரைத்தான். ஆகவே, அவருக்கு மன்னிப்பைக் கொண்டும் கண்ணியமான கூலியைக் கொண்டும் நற்செய்தி கூறுவீராக! info
التفاسير: |

external-link copy
12 : 36

اِنَّا نَحْنُ نُحْیِ الْمَوْتٰی وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْ ؔؕ— وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ فِیْۤ اِمَامٍ مُّبِیْنٍ ۟۠

நிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் அவர்களின் காலடிச்சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம். info
التفاسير: |