លេខ​ទំព័រ:close

external-link copy
67 : 40

هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ یُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُیُوْخًا ۚ— وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

அவன்தான் உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பிறகு, இந்திரியத்தில் இருந்தும் பிறகு இரத்தக் கட்டியில் இருந்தும் படைத்தான். பிறகு, அவன் உங்களை குழந்தைகளாக வெளிக்கொண்டு வருகிறான். பிறகு, நீங்கள் உங்கள் (வாலிபத்தின்) வலிமையை அடைவதற்காகவும், பிறகு நீங்கள் வயோதிகர்களாக ஆகுவதற்காகவும் (அவன் உங்களுக்கு ஆயுள் காலத்தை நீட்டுகின்றான்). இதற்கு முன்னர் உங்களில் உயிர் கைப்பற்றப்படுபவரும் உண்டு. இன்னும் ஒரு குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காகவும் (அவன் உங்களை இவ்வாறு படைத்து, தான் படைத்த விதத்தை உங்களுக்கு விவரிக்கின்றான்). info
التفاسير: |

external-link copy
68 : 40

هُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۚ— فَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠

அவன்தான் உயிர்ப்பிக்கின்றான், மரணிக்கச் செய்கின்றான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகு என்றுதான். உடனே அது ஆகிவிடும். info
التفاسير: |

external-link copy
69 : 40

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ ؕ— اَنّٰی یُصْرَفُوْنَ ۟ۙۛ

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் எவ்வாறு (சத்தியத்தில் இருந்து) திருப்பப்படுகிறார்கள் என்று. info
التفاسير: |

external-link copy
70 : 40

الَّذِیْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ۫— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟ۙ

வேதத்தையும் நமது தூதர்களை நாம் எதைக் கொண்டு அனுப்பினோமோ அதையும் பொய்ப்பித்தவர்கள் விரைவில் (அல்லாஹ்வின் தண்டனையை) அறிந்து கொள்வார்கள். info
التفاسير: |

external-link copy
71 : 40

اِذِ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُ ؕ— یُسْحَبُوْنَ ۟ۙ

அப்போது, இரும்பு வளையங்களும் சங்கிலிகளும் அவர்களின் (கைகள், கால்கள் இன்னும்) கழுத்துகளில் போடப்பட்டு (நரகத்தை நோக்கி) இழுக்கப்படுவார்கள். info
التفاسير: |

external-link copy
72 : 40

فِی الْحَمِیْمِ ۙ۬— ثُمَّ فِی النَّارِ یُسْجَرُوْنَ ۟ۚ

கொதிக்கின்ற நீரில் (அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்). பிறகு நரக நெருப்பில் அவர்கள் எரிக்கப்படுவார்கள். info
التفاسير: |

external-link copy
73 : 40

ثُمَّ قِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَ ۟ۙ

பிறகு, நீங்கள் இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? என்று அவர்களிடம் கூறப்படும். info
التفاسير: |

external-link copy
74 : 40

مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْـًٔا ؕ— كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ الْكٰفِرِیْنَ ۟

அல்லாஹ்வை அன்றி நீங்கள் அவர்களை வணங்கினீர்களே! அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குபவர்களாக இருக்கவில்லையே!” (என்றும் பொய் கூறுவார்கள்). இவ்வாறுதான், அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கிறான். info
التفاسير: |

external-link copy
75 : 40

ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ۟ۚ

இது (-அல்லாஹ் உங்களை வேதனை செய்தது), பூமியில் அநியாயத்தை (பாவங்களை)க் கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைபவர்களாக இருந்த காரணத்தாலும், மமதை கொள்பவர்களாக நீங்கள் இருந்த காரணத்தாலும் ஆகும். info
التفاسير: |

external-link copy
76 : 40

اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟

நரகத்தின் வாசல்களில் நீங்கள் நுழையுங்கள்! அதில் நிரந்தரமானவர்களாக இருங்கள். பெருமை அடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது. info
التفاسير: |

external-link copy
77 : 40

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ— فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟

ஆகவே, (நபியே!) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஒன்று அவர்களை நாம் எச்சரித்தவற்றில் (தண்டனைகளில்) சிலதை உங்களுக்கு காண்பிப்போம். அல்லது (அதற்கு முன்னர்) உம்மை உயிர் கைப்பற்றிக்கொள்வோம். (பின்னர்) நம் பக்கம்தான் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். (அப்போது அவர்களுக்கு நமது தண்டனையைக் காண்பிப்போம்.) info
التفاسير: |