ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்முல்க்

external-link copy
1 : 67

تَبٰرَكَ الَّذِیْ بِیَدِهِ الْمُلْكُ ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرُ ۟ۙ

எவனுடைய கரத்தில் (எல்லாப் படைப்புகளின்) ஆட்சி இருக்கின்றதோ அவன் அருள் வளமிக்கவன். அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
2 : 67

١لَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَالْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْغَفُوْرُ ۟ۙ

அவன்தான் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான் - உங்களில் செயலால் மிக அழகானவர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக. அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான். info
التفاسير: |

external-link copy
3 : 67

الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ— مَا تَرٰی فِیْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ ؕ— فَارْجِعِ الْبَصَرَ ۙ— هَلْ تَرٰی مِنْ فُطُوْرٍ ۟

அவன் ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். ரஹ்மானின் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வையும் நீர் பார்ப்பதில்லை. பார்வையை நீர் மீண்டும் திருப்புவீராக! ஏதாவது பிளவுகளை (விரிசல்களை) நீர் (வானத்தில்) பார்க்கிறீரா? info
التفاسير: |

external-link copy
4 : 67

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَیْنِ یَنْقَلِبْ اِلَیْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِیْرٌ ۟

பிறகு, மீண்டும் பார்வையை இரு முறை திருப்புவீராக! அந்தப் பார்வை இழிவடைந்ததாக உம் பக்கம் திரும்பிவிடும். இன்னும் அது களைத்துவிடும். info
التفاسير: |

external-link copy
5 : 67

وَلَقَدْ زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّیٰطِیْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِیْرِ ۟

திட்டவட்டமாக கீழ் வானத்தை விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். ஷைத்தான்களை எறிவதற்காக அவற்றை (-நட்சத்திரங்களை) ஏற்படுத்தினோம். இன்னும் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பின் வேதனையை தயார் செய்துள்ளோம். info
التفاسير: |

external-link copy
6 : 67

وَلِلَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟

தங்கள் இறைவனை நிராகரிப் பவர்களுக்கு நரகத்தின் தண்டனை உண்டு. அது மீளுமிடங்களில் மிகக் கெட்டது. info
التفاسير: |

external-link copy
7 : 67

اِذَاۤ اُلْقُوْا فِیْهَا سَمِعُوْا لَهَا شَهِیْقًا وَّهِیَ تَفُوْرُ ۟ۙ

அவர்கள் அதில் (-நரகத்தில்) எறியப்பட்டால் அதில் (ஒரு) கடுமையான சப்தத்தை செவியுறுவார்கள். இன்னும் அது கொதி(த்துக் கொண்டிரு)க்கும். info
التفاسير: |

external-link copy
8 : 67

تَكَادُ تَمَیَّزُ مِنَ الْغَیْظِ ؕ— كُلَّمَاۤ اُلْقِیَ فِیْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ نَذِیْرٌ ۟

அது (-நரகம் நிராகரிப்பாளர்களின் மீதுள்ள) கோபத்தால் தெரித்துவிட நெருங்கிவிடும். அதில் ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள். info
التفاسير: |

external-link copy
9 : 67

قَالُوْا بَلٰی قَدْ جَآءَنَا نَذِیْرٌ ۙ۬— فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۖۚ— اِنْ اَنْتُمْ اِلَّا فِیْ ضَلٰلٍ كَبِیْرٍ ۟

அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை, திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!) நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை”என்று நாங்கள் கூறினோம்.” info
التفاسير: |

external-link copy
10 : 67

وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِیْۤ اَصْحٰبِ السَّعِیْرِ ۟

இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் செவி ஏற்பவர்களாக அல்லது சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் நரகவாசிகளில் ஆகி இருக்க மாட்டோம்.” info
التفاسير: |

external-link copy
11 : 67

فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ ۚ— فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِیْرِ ۟

அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, நரகவாசிகளுக்கு கேடுதான்! info
التفاسير: |

external-link copy
12 : 67

اِنَّ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟

நிச்சயமாக மறைவில் தங்கள் இறைவனை பயப்படுகின்றவர்கள், அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு. info
التفاسير: |

external-link copy
13 : 67

وَاَسِرُّوْا قَوْلَكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

உங்கள் பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள் அல்லது அதை உரக்கப் பேசுங்கள்! நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
14 : 67

اَلَا یَعْلَمُ مَنْ خَلَقَ ؕ— وَهُوَ اللَّطِیْفُ الْخَبِیْرُ ۟۠

எவன் படைத்தானோ அவன் அறியமாட்டானா? அவன்தான் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
15 : 67

هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِیْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ ؕ— وَاِلَیْهِ النُّشُوْرُ ۟

அவன்தான் பூமியை உங்களுக்கு (நீங்கள் பயன்படுத்துவதற்கு) இலகுவாக ஆக்கினான். ஆகவே, (உங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி) நீங்கள் அதன் பல பகுதிகளில் செல்லுங்கள்! அவனுடைய உணவில் இருந்து உண்ணுங்கள்! அவன் பக்கம்தான் (மறுமையில் உங்களை) எழுப்பப்படுதல் இருக்கிறது. info
التفاسير: |

external-link copy
16 : 67

ءَاَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِیَ تَمُوْرُ ۟ۙ

வானத்தின் மேல் உள்ளவன் உங்களை பூமியில் சொருகிவிடுவதை நீங்கள் பயமற்று இருக்கின்றீர்களா? அப்போது அது (-பூமி) குலுங்கும். info
التفاسير: |

external-link copy
17 : 67

اَمْ اَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یُّرْسِلَ عَلَیْكُمْ حَاصِبًا ؕ— فَسَتَعْلَمُوْنَ كَیْفَ نَذِیْرِ ۟

அல்லது வானத்தின் மேல் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை பயமற்று இருக்கின்றீர்களா? (நீங்கள் எனது வேதனையை கண் கூடாக பார்க்கும் போது) என் எச்சரிக்கை(யின் முடிவு) எப்படி இருக்கும் என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்! info
التفاسير: |

external-link copy
18 : 67

وَلَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟

இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் திட்டவட்டமாக பொய்ப்பித்தனர். எனது மறுப்பு(ம் மாற்றமும்) எப்படி இருந்தது? (என்று சிந்தித்து பாருங்கள்! info
التفاسير: |

external-link copy
19 : 67

اَوَلَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّیَقْبِضْنَ ؕۘؔ— مَا یُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ ؕ— اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ بَصِیْرٌ ۟

அவர்கள் தங்களுக்கு மேல் (இறக்கைகளை) விரித்தவைகளாகவும் (சில நேரம் அவற்றை தம் விலாக்களுடன்) மடக்கியவைகளாகவும் பறக்கின்ற பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? (அவை கீழே விழாமல் ஆகாயத்தில்) அவற்றை ரஹ்மானைத் தவிர (வேறு யாரும்) தடுக்கமுடியாது. நிச்சயமாக அவன் எல்லாப் பொருளையும் உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
20 : 67

اَمَّنْ هٰذَا الَّذِیْ هُوَ جُنْدٌ لَّكُمْ یَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِ ؕ— اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِیْ غُرُوْرٍ ۟ۚ

மாறாக, ரஹ்மானை அன்றி உங்களுக்கு உதவுகின்ற உங்கள் ராணுவமாக உள்ள இவர்கள் யார்? (நீங்கள் யாரை நம்பி இருக்கின்றீர்களோ அவர்கள் உங்களுக்கு அறவே உதவமுடியாது.) நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்தில் தவிர இல்லை. info
التفاسير: |

external-link copy
21 : 67

اَمَّنْ هٰذَا الَّذِیْ یَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ— بَلْ لَّجُّوْا فِیْ عُتُوٍّ وَّنُفُوْرٍ ۟

மாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கின்ற இவர்கள் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு அப்படி யாரும் இருக்கின்றார்களா?) மாறாக, அவர்கள் வரம்பு மீறுவதிலும் விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர். info
التفاسير: |

external-link copy
22 : 67

اَفَمَنْ یَّمْشِیْ مُكِبًّا عَلٰی وَجْهِهٖۤ اَهْدٰۤی اَمَّنْ یَّمْشِیْ سَوِیًّا عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

தனது முகத்தின் மீது கவிழ்ந்தவனாக நடக்கின்றவன் நேர்வழி பெற்றவனா? (-அவன் தன் இலக்கை நோக்கி சென்று சேர முடியுமா?) அல்லது நேரான பாதையில் சரியாக நடக்கின்றவனா? info
التفاسير: |

external-link copy
23 : 67

قُلْ هُوَ الَّذِیْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ— قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை உருவாக்கினான். இன்னும் உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் (அவனுக்கு) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்! info
التفاسير: |

external-link copy
24 : 67

قُلْ هُوَ الَّذِیْ ذَرَاَكُمْ فِی الْاَرْضِ وَاِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை பூமியில் (பல ஊர்களில், பல நாடுகளில்) பரத்தினான். அவன் பக்கமே நீங்கள் (மறுமையில்) ஒன்று திரட்டப்படுவீர்கள். info
التفاسير: |

external-link copy
25 : 67

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

“(நபியே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (மறுமையில் அல்லாஹ்விடம் நாங்கள் எழுப்பப்படுவோம் என்ற) இந்த வாக்கு எப்பொழுது நிகழும்” (என்று எங்களுக்கு அறிவியுங்கள்!”) என அவர்கள் கூறுகின்றனர். info
التفاسير: |

external-link copy
26 : 67

قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۪— وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟

(நபியே!) கூறுவீராக! (அது பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது. நான் எல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான். info
التفاسير: |

external-link copy
27 : 67

فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِیْٓـَٔتْ وُجُوْهُ الَّذِیْنَ كَفَرُوْا وَقِیْلَ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ ۟

அவர்கள் அதை மிக நெருக்கமாக (-சமீபமாக) பார்க்கின்றபோது நிராகரித்தவர்களின் முகங்கள் கெட்டுவிடும் (-துக்கத்திற்கு ஆளாகிவிடும்). நீங்கள் எதை தேடுபவர்களாக இருந்தீர்களோ அது இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும். info
التفاسير: |

external-link copy
28 : 67

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَهْلَكَنِیَ اللّٰهُ وَمَنْ مَّعِیَ اَوْ رَحِمَنَا ۙ— فَمَنْ یُّجِیْرُ الْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟

(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் அழித்துவிட்டால் அல்லது அவன் எங்கள் மீது கருணை புரிந்(து இன்னும் சில காலம் வாழவைத்)தால், (அது அவனது திட்டத்தின் படி அவன் செய்வதாகும்.) வலி தரக்கூடிய தண்டனையில் இருந்து நிராகரிப்பாளர்களை யார் காப்பாற்றுவார்? (நாங்கள் வாழ்வதும் மரணிப்பதும் உங்களை வேதனையில் இருந்து காப்பாற்றிவிடுமா?)” என்று அறிவியுங்கள். info
التفاسير: |

external-link copy
29 : 67

قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَیْهِ تَوَكَّلْنَا ۚ— فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

(நபியே!) கூறுவீராக! அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). அவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவன் மீதே நாங்கள் “தவக்குல்” நம்பிக்கை வைத்தோம். தெளிவான வழிகேட்டில் உள்ளவர்களை விரைவில் அறிவீர்கள். info
التفاسير: |

external-link copy
30 : 67

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ یَّاْتِیْكُمْ بِمَآءٍ مَّعِیْنٍ ۟۠

(நபியே!) கூறுவீராக! உங்கள் தண்ணீர் (அதை நீங்கள் இறைக்க முடியாத அளவிற்கு) ஆழத்தில் சென்றுவிட்டால் யார் உங்களுக்கு மதுரமான தண்ணீரைக் கொண்டு வருவார்? என்பதை அறிவியுங்கள். info
التفاسير: |