ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்கலம்

external-link copy
1 : 68

نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ

நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக! info
التفاسير: |

external-link copy
2 : 68

مَاۤ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ۟ۚ

உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக் காரராக இல்லை. info
التفاسير: |

external-link copy
3 : 68

وَاِنَّ لَكَ لَاَجْرًا غَیْرَ مَمْنُوْنٍ ۟ۚ

நிச்சயமாக உமக்கு முடிவற்ற நற்கூலி உண்டு. info
التفاسير: |

external-link copy
4 : 68

وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟

நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர். info
التفاسير: |

external-link copy
5 : 68

فَسَتُبْصِرُ وَیُبْصِرُوْنَ ۟ۙ

ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள், info
التفاسير: |

external-link copy
6 : 68

بِاَیِّىكُمُ الْمَفْتُوْنُ ۟

உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று. info
التفاسير: |

external-link copy
7 : 68

اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۪— وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟

நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து வழிதவறியவனை அவன் மிக அறிந்தவன் ஆவான். அவன்தான் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
8 : 68

فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟

ஆகவே, (நபியே!) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்! info
التفاسير: |

external-link copy
9 : 68

وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟

நீர் (அவர்களுடன்) அனுசரித்து போகவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அப்படி யென்றால் அவர்களும் (உம்மை) அனுசரிப்பார்கள். info
التفاسير: |

external-link copy
10 : 68

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ

அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர். info
التفاسير: |

external-link copy
11 : 68

هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ

அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோள் சொல்பவன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்). info
التفاسير: |

external-link copy
12 : 68

مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ

நன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்). info
التفاسير: |

external-link copy
13 : 68

عُتُلٍّۢ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ

அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்). info
التفاسير: |

external-link copy
14 : 68

اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ

செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்). info
التفاسير: |

external-link copy
15 : 68

اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟

அவன் மீது நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான். info
التفاسير: |

external-link copy
16 : 68

سَنَسِمُهٗ عَلَی الْخُرْطُوْمِ ۟

(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம். info
التفاسير: |

external-link copy
17 : 68

اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ— اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ

நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம், தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல். “அதிகாலை பொழுதை அவர்கள் அடையும்போது நிச்சயமாக அவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்! info
التفاسير: |

external-link copy
18 : 68

وَلَا یَسْتَثْنُوْنَ ۟

“அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை. info
التفاسير: |

external-link copy
19 : 68

فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟

அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) இரவில் சுற்றியது. info
التفاسير: |

external-link copy
20 : 68

فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ

அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது. info
التفاسير: |

external-link copy
21 : 68

فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ

அவர்கள் அதிகாலையில் ஆனவுடன் ஒருவரை ஒருவர் அழைத்தனர். info
التفاسير: |

external-link copy
22 : 68

اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟

நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள் நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால், info
التفاسير: |

external-link copy
23 : 68

فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ

அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக சென்றனர். info
التفاسير: |

external-link copy
24 : 68

اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ

இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அதில் (-அந்த தோட்டத்தில்) நுழைந்து விடக்கூடாது. info
التفاسير: |

external-link copy
25 : 68

وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟

அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர். info
التفاسير: |

external-link copy
26 : 68

فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ

அவர்கள் அதைப் பார்த்த போது நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம். info
التفاسير: |

external-link copy
27 : 68

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟

இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம் என்று கூறினார்கள். info
التفاسير: |

external-link copy
28 : 68

قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟

அவர்களில் நீதவான் கூறினார்: “நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா” என்று நான் உங்களுக்கு கூறவில்லையா? info
التفاسير: |

external-link copy
29 : 68

قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.” info
التفاسير: |

external-link copy
30 : 68

فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟

அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர். info
التفاسير: |

external-link copy
31 : 68

قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.” info
التفاسير: |

external-link copy
32 : 68

عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟

எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த(தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் ஆதரவும்) உள்ளவர்கள். info
التفاسير: |

external-link copy
33 : 68

كَذٰلِكَ الْعَذَابُ ؕ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠

இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியது ஆகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே! info
التفاسير: |

external-link copy
34 : 68

اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன. info
التفاسير: |

external-link copy
35 : 68

اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ

(நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்களை (-முஸ்லிம்களை), (நமது கட்டளையை மீறுகின்ற) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா? info
التفاسير: |

external-link copy
36 : 68

مَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ

உங்களுக்கு என்ன ஆனது எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள். info
التفاسير: |

external-link copy
37 : 68

اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ

(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கிறதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கிறீர்களா? info
التفاسير: |

external-link copy
38 : 68

اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ

(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?” info
التفاسير: |

external-link copy
39 : 68

اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ— اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ

நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை (நீடித்து இருக்கின்ற)உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?) info
التفاسير: |

external-link copy
40 : 68

سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ

(நபியே!) அவர்களிடம் கேட்பீராக! அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்? info
التفاسير: |

external-link copy
41 : 68

اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ— فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟

(இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? அப்படி இருந்தால் அவர்களின் அந்த கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) அவர்கள் கொண்டு வரட்டும், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால். info
التفاسير: |

external-link copy
42 : 68

یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ

கெண்டைக்காலை விட்டும் அகற்றப்படுகின்ற நாளில் (-கடுமையான சோதனை நிகழ்கின்ற நாளில் அவர்களை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
43 : 68

خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ— وَقَدْ كَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ ۟

அவர்களின் பார்வைகள் தாழ்ந்து இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலகத்தில் வாழ்ந்தபோது,) அவர்கள் சுகமானவர்களாக இருந்த போது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.) info
التفاسير: |

external-link copy
44 : 68

فَذَرْنِیْ وَمَنْ یُّكَذِّبُ بِهٰذَا الْحَدِیْثِ ؕ— سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۙ

என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்பிடிப்போம். info
التفاسير: |

external-link copy
45 : 68

وَاُمْلِیْ لَهُمْ ؕ— اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟

இன்னும் அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக பலமானது. info
التفاسير: |

external-link copy
46 : 68

اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ۚ

(நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கின்றீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா? info
التفاسير: |

external-link copy
47 : 68

اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟

அவர்களிடம் மறைவானவை இருக்கின்றதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை) அவர்கள் எழுதுகின்றனரா? (முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல.) info
التفاسير: |

external-link copy
48 : 68

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ ۘ— اِذْ نَادٰی وَهُوَ مَكْظُوْمٌ ۟ؕ

(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுமை காப்பீராக! மீனுடையவரைப் போல் (அவர் தனது மக்கள் மீது கோபப்பட்டது போல்) நீர் ஆகிவிடாதீர், அவர் (தனது மக்களை) அழைத்த நேரத்தில், அவர் கடும் கோபமுடையவராக இருந்தார். info
التفاسير: |

external-link copy
49 : 68

لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ ۟

அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராகத்தான் இருந்தார். info
التفاسير: |

external-link copy
50 : 68

فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟

பிறகு, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். இன்னும் அவரை நல்லவர்களில் ஆக்கினான். info
التفاسير: |

external-link copy
51 : 68

وَاِنْ یَّكَادُ الَّذِیْنَ كَفَرُوْا لَیُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَیَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۟ۘ

நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை செவியுற்ற போது. இன்னும் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்”. info
التفاسير: |

external-link copy
52 : 68

وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠

அது (-அந்த குர்ஆன்) அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிர வேறில்லை. info
التفاسير: |