លេខ​ទំព័រ:close

external-link copy
9 : 69

وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ

ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்னுள்ளவர்களும் தலைக்கீழாக புரட்டப்பட்ட ஊரார்களும் தீய செயல்களை செய்தனர். info
التفاسير: |

external-link copy
10 : 69

فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟

அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். ஆகவே, கடுமையான பிடியால் அவன் அவர்களைப் பிடித்தான். info
التفاسير: |

external-link copy
11 : 69

اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ

தண்ணீர் மிக அதிகமாகிய போது நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் முன்னோரான நூஹுடன் நம்பிக்கை கொண்டோரை) கப்பலில் ஏற்றினோம். info
التفاسير: |

external-link copy
12 : 69

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟

அதை (-நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை) உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகின்ற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்). info
التفاسير: |

external-link copy
13 : 69

فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ

சூரில் ஒரு முறை ஊதப்பட்டால், info
التفاسير: |

external-link copy
14 : 69

وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ

பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால், info
التفاسير: |

external-link copy
15 : 69

فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ

அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை) நாள் நிகழும். info
التفاسير: |

external-link copy
16 : 69

وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ

வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். அது அந்நாளில் பலவீனப்பட்டுவிடும். info
التفاسير: |

external-link copy
17 : 69

وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ— وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ

வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் தங்களுக்கு மேல் உள்ள உமது இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள். info
التفاسير: |

external-link copy
18 : 69

یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟

அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) சமர்ப்பிக்கப்படுவீர்கள். உங்களிடமிருந்து மறையக்கூடியது (-இரகசியங்கள்) எதுவும் (இறைவனுக்கு முன்னால்) மறைந்துவிடாது. info
التفاسير: |

external-link copy
19 : 69

فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ

ஆக, யார் தனது செயலேடு தனது வலது கரத்தில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: வாருங்கள்! (இதோ) எனது செயலேட்டை (எடுத்துப்) படியுங்கள்! info
التفاسير: |

external-link copy
20 : 69

اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ

நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன். info
التفاسير: |

external-link copy
21 : 69

فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ

ஆகவே, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருப்பார், info
التفاسير: |

external-link copy
22 : 69

فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ

(அவர்) உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார். info
التفاسير: |

external-link copy
23 : 69

قُطُوْفُهَا دَانِیَةٌ ۟

அதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும். info
التفاسير: |

external-link copy
24 : 69

كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟

நீங்கள் கடந்த காலங்களில் (-நீங்கள் உலகத்தில் இருந்தபோது உங்கள் மறுமை வாழ்க்கைக்காக) முற்படுத்தியவற்றின் (-நன்மைகளின்) காரணமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்! info
التفاسير: |

external-link copy
25 : 69

وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬— فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ

ஆக, யார் தனது செயலேடு தனது இடது கையில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார், எனது செயலேடு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே! info
التفاسير: |

external-link copy
26 : 69

وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ

எனது விசாரணை என்னவாகும் என்று நான் அறியமாட்டேன். info
التفاسير: |

external-link copy
27 : 69

یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ

அதுவே (-நான் உலகத்தில் மரணித்த எனது மரணமே எனது காரியத்தை) முடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டுமே! (இந்த மறுமைக்கு நான் வராமல் இருந்திருக்க வேண்டுமே!) info
التفاسير: |

external-link copy
28 : 69

مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ

எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை! info
التفاسير: |

external-link copy
29 : 69

هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ

எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுத்து நான் கூறிவந்த எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டது. info
التفاسير: |

external-link copy
30 : 69

خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ

(அல்லாஹ் வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! அவனை விலங்கிடுங்கள்! info
التفاسير: |

external-link copy
31 : 69

ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ

பிறகு, நரகத்தில் அவனை எரித்து பொசுக்குங்கள்! info
التفاسير: |

external-link copy
32 : 69

ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ

பிறகு, ஒரு சங்கிலியில் -அதன் முழம் எழுபது முழங்களாகும்- அவனைப் புகுத்துங்கள்! (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.) info
التفاسير: |

external-link copy
33 : 69

اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ

நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான். info
التفاسير: |

external-link copy
34 : 69

وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ

இன்னும் ஏழைகளின் உணவிற்கு (-வாழ்வாதாரத்திற்கு பிறரை) தூண்டாதவனாக இருந்தான். info
التفاسير: |

external-link copy
35 : 69

فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ

ஆகவே, இன்று அவனுக்கு இங்கு (உதவி செய்கின்ற) நெருக்கமான நண்பர் யாரும் இருக்க மாட்டார். info
التفاسير: |
prev

அல்ஹாக்கா

next