Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅನ್ನಜ್ಮ್   ಶ್ಲೋಕ:
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَیُسَمُّوْنَ الْمَلٰٓىِٕكَةَ تَسْمِیَةَ الْاُ ۟
53.27. நிச்சயமாக மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாதவர்கள் வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு பெண் பெயர் சூட்டுகிறார்கள். அவர்கள் கூறும் வார்த்தையைவிட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ ۚ— وَاِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ۟ۚ
53.28. அவர்கள் இவ்வாறு வானவர்களுக்கு பெண் பெயர் சூட்டியதற்கு அவர்களிடம் ஆதாரமாக அமையத்தக்க எந்த அறிவும் இல்லை. அவர்கள் இந்த விஷயத்தில் யூகத்தையும் இட்டுக்கட்டுதலையும் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக யூகம் சத்தியத்தின் இடத்தை அடைவதற்கு முன்னால் எந்தப் பயனையும் அளிக்காது.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰی ۙ۬— عَنْ ذِكْرِنَا وَلَمْ یُرِدْ اِلَّا الْحَیٰوةَ الدُّنْیَا ۟ؕ
53.29. -தூதரே!- அல்லாஹ்வை நினைவுகூராமலும் அதுகுறித்து அக்கறை கொள்ளாமலும் இருப்பவனைப் புறக்கணித்து விடுவீராக. அவன் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விரும்புவதுமில்லை, மறுமைக்காகச் செயல்படுவதுமில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை நம்பவில்லை.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰی ۟
53.30. இந்த இணைவைப்பாளர்கள் வானவர்களுக்குப் பெண் பெயர் கூறுவதுதான் அவர்களின் அறிவின் மட்டமாகும். ஏனெனில் அவர்கள் அறிவிலிகள். நம்பிக்கையில் உறுதியை அடையவில்லை. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் சத்தியப் பாதையைவிட்டும் தவறியவர்களையும் அவனுடைய பாதையில்பால் நேர்வழி பெறுபவர்களையும் நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۙ— لِیَجْزِیَ الَّذِیْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَیَجْزِیَ الَّذِیْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰی ۟ۚ
53.31. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் உரிமையால், படைப்பால், நிர்ணயத்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இது அவன் உலகில் தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பதற்காவும் நற்செயல்கள் புரிந்த நம்பிக்கையாளர்களுக்கு சுவனத்தை கூலியாக அளிப்பதற்காகவும்தான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اَلَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ— اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ؕ— هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ ۚ— فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ— هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰی ۟۠
53.32. அவர்கள் சிறு பாவங்களைத்தவிர பெரும் பாவங்களைவிட்டும் மானக்கேடான பாவங்களைவிட்டும் விலகியிருக்கிறார்கள். பெரும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்து நற்செயல்களில் அதிகமாக ஈடுபட்டால் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும், -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன். அடியார்கள் பாவமன்னிப்புக் கோரும்போது அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதே, உங்கள் அன்னையரின் வயிற்றில் படிப்படியாக நீங்கள் படைக்கப்பட்டபோதே உங்களின் நிலைகளையும் விவகாரங்களையும் குறித்து நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே உங்களை நீங்களே இறையச்சமுடையவர்கள் என்று புகழாதீர்கள். உங்களில் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நன்கறிந்தவன்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اَفَرَءَیْتَ الَّذِیْ تَوَلّٰی ۟ۙ
53.33. இஸ்லாத்தின் அருகில் வந்த பின்னரும் அதனைப் புறக்கணித்தவனின் அவலட்சன நிலையை நீர் பார்த்தீரா?
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاَعْطٰی قَلِیْلًا وَّاَكْدٰی ۟
53.34. அவன் குறைவாக அளித்து பின்னர் தடுத்துக் கொண்டான். ஏனெனில் நிச்சயமாக கஞ்சத்தனமே அவனது இயல்பாகும். இருந்தும் அவன் தன்னைத்தானே பரிசுத்தப்படுத்துகிறான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اَعِنْدَهٗ عِلْمُ الْغَیْبِ فَهُوَ یَرٰی ۟
53.35. அவனிடம் மறைவான ஞானம் இருந்து அதை அவன் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கின்றானா?
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اَمْ لَمْ یُنَبَّاْ بِمَا فِیْ صُحُفِ مُوْسٰی ۟ۙ
53.36,37. அல்லது அவன் அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டுகிறானா? அல்லது அல்லாஹ்வின்மீது இவ்வாறு இட்டுக்கட்டும் இவனுக்கு அல்லாஹ் மூஸாவின்மீது இறக்கிய ஆரம்ப ஏடுகளில் அறிவிக்கப்படவில்லையா?
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
37. தம் இறைவன் தமக்கு இட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் வேதங்களிலும் (உள்ளவை அறிவிக்கப்படவில்லையா)?
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۟ۙ
53.38. நிச்சயமாக ஒரு மனிதன் மற்ற மனிதனின் பாவத்தை சுமக்க மாட்டான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاَنْ لَّیْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰی ۟ۙ
53.39. மனிதனுக்கு அவன் செய்த செயல்களின் நன்மைகளே அன்றி வேறில்லை.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاَنَّ سَعْیَهٗ سَوْفَ یُرٰی ۟
53.40. மறுமை நாளில் தான் செய்த செயல்களை வெளிப்படையாகக் காண்பான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ثُمَّ یُجْزٰىهُ الْجَزَآءَ الْاَوْفٰی ۟ۙ
53.41. பின்னர் அவனுடைய செயலுக்கேற்ப குறைவின்றி முழுமையாக கூலி வழங்கப்படுவான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاَنَّ اِلٰی رَبِّكَ الْمُنْتَهٰی ۟ۙ
53.42. -தூதரே!- நிச்சயமாக அடியார்கள் மரணித்தபிறகு அவர்கள் உம் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰی ۟ۙ
53.43. நிச்சயமாக அவனே தான் நாடியவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை சிரிக்க வைக்கிறான். தான் நாடியவர்களை கவலையில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை அழ வைக்கிறான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْیَا ۟ۙ
53.44. நிச்சயமாக அவனே உலகில் உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மரணித்தவர்களை மறுமையில் மீண்டும் எழுப்பி உயிர்ப்பிக்கிறான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• انقسام الذنوب إلى كبائر وصغائر.
1. பாவங்கள் சிறு பாவங்கள், பெரும் பாவங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

• خطورة التقوُّل على الله بغير علم.
2. அறிவின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதன் விபரீதம்

• النهي عن تزكية النفس.
3. தன்னைத் தானே தூய்மையானவன் என்று கூறுவதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளது.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅನ್ನಜ್ಮ್
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಪ್ರಕಾಶನ - ಕುರ್‌ಆನ್ ತಫ್ಸೀರ್ ಸ್ಟಡಿ ಸೆಂಟರ್

ಮುಚ್ಚಿ