ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ಪುಟ ಸಂಖ್ಯೆ:close

external-link copy
38 : 3

هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ— قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ— اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟

அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்து, "என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்" எனக் கூறினார். info
التفاسير:

external-link copy
39 : 3

فَنَادَتْهُ الْمَلٰٓىِٕكَةُ وَهُوَ قَآىِٕمٌ یُّصَلِّیْ فِی الْمِحْرَابِ ۙ— اَنَّ اللّٰهَ یُبَشِّرُكَ بِیَحْیٰی مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَیِّدًا وَّحَصُوْرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟

ஆகவே, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: "அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக, தலைவராக, இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரைச் சேர்ந்தவராக யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்." info
التفاسير:

external-link copy
40 : 3

قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِیَ الْكِبَرُ وَامْرَاَتِیْ عَاقِرٌ ؕ— قَالَ كَذٰلِكَ اللّٰهُ یَفْعَلُ مَا یَشَآءُ ۟

“என் இறைவா! எனக்கு எவ்வாறு குழந்தை உண்டாகும். என்னையோ முதுமை அடைந்து விட்டது. என் மனைவியோ மலடி" என்று (ஸகரிய்யா) கூற, "(காரியம்) இவ்வாறுதான். அல்லாஹ், தான் நாடியதை செய்வான்" என்று (அல்லாஹ் பதில்) கூறினான். info
التفاسير:

external-link copy
41 : 3

قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ— وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠

"என் இறைவா! எனக்கோர் அத்தாட்சியை ஆக்கு" என்று (ஸகரிய்யா) கூற. "உம் அத்தாட்சி, சாடையாக தவிர மூன்று நாட்கள் மக்களுடன் நீர் பேசாமல் இருப்பதாகும். உம் இறைவனை அதிகம் நினைவு கூறுவீராக! மாலையிலும் காலையிலும் அவனைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக!'' என்று (அல்லாஹ் பதில்) கூறினான். info
التفاسير:

external-link copy
42 : 3

وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟

வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக, "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்தான்; உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்; அகிலத்தார்களின் பெண்களைவிட உம்மை தேர்ந்தெடுத்தான்; info
التفاسير:

external-link copy
43 : 3

یٰمَرْیَمُ اقْنُتِیْ لِرَبِّكِ وَاسْجُدِیْ وَارْكَعِیْ مَعَ الرّٰكِعِیْنَ ۟

மர்யமே! உம் இறைவனுக்குப் பணிவீராக! சிரம் தாழ்த்துவீராக! (தொழுகையில்) குனிபவர்களுடன் குனிவீராக!" info
التفاسير:

external-link copy
44 : 3

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ؕ— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَیُّهُمْ یَكْفُلُ مَرْیَمَ ۪— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یَخْتَصِمُوْنَ ۟

(நபியே!) இவை மறைவான செய்திகளிலிருந்து உள்ளவை. இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) அவர்களில் யார் பொறுப்பேற்பது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கிக்கும்போதும் நீர் அவர்களிடம் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
45 : 3

اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۙۗ— اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ

"மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்) இம்மை, மறுமையில் கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களிலும் இருப்பார்" என்று வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! info
التفاسير: