Kilniojo Korano reikšmių vertimas - Tamilų k. vertimas - Omar Šaryf * - Vertimų turinys

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Reikšmių vertimas Sūra: Sūra Marjama   Aja (Korano eilutė):

ஸூரா மர்யம்

كٓهٰیٰعٓصٓ ۟
காஃப் ஹா யா ஐன் ஸாத்.
Tafsyrai arabų kalba:
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
(இது,) உமது இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு அருள் புரிந்ததை நினைவு கூர்வதாகும்.
Tafsyrai arabų kalba:
اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟
அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,
Tafsyrai arabų kalba:
قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟
அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான், எனக்குள் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. இன்னும், (என்) தலை நரையால் வெளுத்து விட்டது. (என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக, நிராசை அடைந்தவனாக) நான் (ஒருபோதும்) ஆகமாட்டேன்.
Tafsyrai arabų kalba:
وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ
இன்னும், நிச்சயமாக நான் எனக்குப் பின்னால் (எனது உறவினர்கள் மார்க்கப் பணியை சரியாக செய்ய மாட்டார்கள் என்று என்) உறவினர்களைப் பற்றி பயப்படுகிறேன். என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். ஆகவே, எனக்கு உன் புறத்திலிருந்து (எனக்கு) உதவியாக இருக்கும் ஒரு வாரிசைத் தா!
Tafsyrai arabų kalba:
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۗ— وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
அவர் என(து நபித்துவத்து)க்கும் வாரிசாக இருப்பார். இன்னும், யஅகூபின் கிளையினரு(டைய நபித்துவத்து)க்கும் வாரிசாக இருப்பார். இன்னும், என் இறைவா! அவரை (உன்) பொருத்தத்திற்குரியவராக ஆக்கு!
Tafsyrai arabų kalba:
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ١سْمُهٗ یَحْیٰی ۙ— لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
ஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா ஆகும். இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை நாம் படைக்கவில்லை. (வேறு யாருக்கும் அந்த பெயரை நாம் சூட்டியதில்லை.)
Tafsyrai arabų kalba:
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟
அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையின் எல்லையை அடைந்து (முற்றிலும் பலவீனனாக ஆகி)விட்டேன்.”
Tafsyrai arabų kalba:
قَالَ كَذٰلِكَ ۚ— قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟
(அல்லாஹ்) கூறினான்: “(அது) அப்படித்தான். அது எனக்கு மிக எளிது. திட்டமாக இதற்கு முன்னர் நீர் ஒரு பொருளாகவே இல்லாதபோது நான் உன்னைப் படைத்திருக்கிறேன் என்று உம் இறைவன் கூறினான்.”
Tafsyrai arabų kalba:
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟
அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்து!” அவன் கூறினான்: “நீர் (எவ்வித நோயுமின்றி) சுகமாக இருக்க, மூன்று இரவுகள் மக்களிடம் நீர் பேசாமல் இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.”
Tafsyrai arabų kalba:
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟
ஆக, அவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்” என்று சைகை காண்பித்தார்.
Tafsyrai arabų kalba:
یٰیَحْیٰی خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ— وَاٰتَیْنٰهُ الْحُكْمَ صَبِیًّا ۟ۙ
(ஆக, அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறந்தார். அவர் பேசுகின்ற வயதை அடைந்த போது நாம் அவரை நோக்கி கூறினோம்:) “யஹ்யாவே! (தவ்ராத்) வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக!” இன்னும், (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்.
Tafsyrai arabų kalba:
وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ؕ— وَكَانَ تَقِیًّا ۟ۙ
இன்னும், நம்மிடமிருந்து இரக்கத்தையும் தூய்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்). இன்னும், அவர் இறையச்சமுள்ளவராக இருந்தார்.
Tafsyrai arabų kalba:
وَّبَرًّا بِوَالِدَیْهِ وَلَمْ یَكُنْ جَبَّارًا عَصِیًّا ۟
இன்னும், அவர் தன் பெற்றோருக்கு நன்மை புரிபவராக இருந்தார். அவர் முரடராக (பெருமைபிடித்தவராக), மாறுசெய்பவராக இருக்கவில்லை.
Tafsyrai arabų kalba:
وَسَلٰمٌ عَلَیْهِ یَوْمَ وُلِدَ وَیَوْمَ یَمُوْتُ وَیَوْمَ یُبْعَثُ حَیًّا ۟۠
இன்னும், அவர் பிறந்த நாளிலும் அவர் மரணிக்கின்ற நாளிலும் அவர் உயிர்பெற்றவராக (மீண்டும்) எழுப்பப்படுகின்ற நாளிலும் அவருக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!
Tafsyrai arabų kalba:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مَرْیَمَ ۘ— اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِیًّا ۟ۙ
இன்னும், இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூர்வீராக! அவள் கிழக்கே இருக்கின்ற இடத்தில் தன் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியபோது,
Tafsyrai arabų kalba:
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا ۫— فَاَرْسَلْنَاۤ اِلَیْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِیًّا ۟
அவர்களுக்கு முன்புறத்திலிருந்து ஒரு திரையை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். ஆக, அவளிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர், அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்.
Tafsyrai arabų kalba:
قَالَتْ اِنِّیْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِیًّا ۟
அவள் கூறினாள்: “நிச்சயமாக நான் உம்மைவிட்டும் ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னிடமிருந்து விலகி சென்றுவிடுவீராக!)”
Tafsyrai arabų kalba:
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖۗ— لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِیًّا ۟
அவர் கூறினார்: “நானெல்லாம் உமது இறைவனின் தூதர்தான் (தீங்கை நாடக்கூடிய மனிதன் அல்ல), பரிசுத்தமான ஒரு குழந்தையை உமக்கு நான் வழங்குவதற்காக (உம்மிடம் வந்திருக்கிறேன்).”
Tafsyrai arabų kalba:
قَالَتْ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِیًّا ۟
அவள் கூறினாள்: “எனக்கு எப்படி குழந்தை உண்டாகும்? என்னை ஆடவர் எவரும் தொடவில்லையே! நான் ஒரு விபச்சாரியாக இல்லையே!”
Tafsyrai arabų kalba:
قَالَ كَذٰلِكِ ۚ— قَالَ رَبُّكِ هُوَ عَلَیَّ هَیِّنٌ ۚ— وَلِنَجْعَلَهٗۤ اٰیَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ— وَكَانَ اَمْرًا مَّقْضِیًّا ۟
அவர் கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான், “அது எனக்கு மிக எளிதா(ன காரியமா)கும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம் புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (இவ்வாறு நடைபெறும்). இன்னும், இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”
Tafsyrai arabų kalba:
فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟
ஆக, அவள் அதை (-அக்குழந்தையை) கர்ப்பத்தில் சுமந்தாள். மேலும், அதனுடன் (-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு விலகிச் சென்றாள்.
Tafsyrai arabų kalba:
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰی جِذْعِ النَّخْلَةِ ۚ— قَالَتْ یٰلَیْتَنِیْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْیًا مَّنْسِیًّا ۟
ஆக, (அவளுக்கு) பிரசவ வலி (ஏற்பட்டு அது) அவளை பேரீச்ச மரத்தின் பக்கம் கொண்டு சென்றது. அவள் கூறினாள்: “இதற்கு முன்னர் நான் மரணித்திருக்க வேண்டுமே! இன்னும், முற்றிலும் (மக்களின் சிந்தனையிலிருந்து) மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!”
Tafsyrai arabų kalba:
فَنَادٰىهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِیْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِیًّا ۟
ஆக, அதனுடைய அடிப்புறத்திலிருந்து அவர் (-ஜிப்ரீல்) அவளை அழைத்தார்: “(மர்யமே!) கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழ் ஓர் நீரோடையை ஏற்படுத்தி இருக்கிறான்.”
Tafsyrai arabų kalba:
وَهُزِّیْۤ اِلَیْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَیْكِ رُطَبًا جَنِیًّا ۟ؗ
“இன்னும், பேரீச்ச மரத்தின் நடுத்தண்டை உம் பக்கம் அசைப்பீராக! அது உம்மீது பழுத்த பழங்களைக் கொட்டும்.”
Tafsyrai arabų kalba:
فَكُلِیْ وَاشْرَبِیْ وَقَرِّیْ عَیْنًا ۚ— فَاِمَّا تَرَیِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ— فَقُوْلِیْۤ اِنِّیْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْیَوْمَ اِنْسِیًّا ۟ۚ
“ஆக, நீர் (அந்த மரத்திலிருந்து விழும் பழங்களை) புசிப்பீராக! இன்னும், (அந்த நீரோடையிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! ஆக, மனிதர்களில் யாரையும் நீர் பார்த்தால், “நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை (-பேசாமல் இருப்பதை) நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன்” என்று கூறுவீராக!”
Tafsyrai arabų kalba:
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ؕ— قَالُوْا یٰمَرْیَمُ لَقَدْ جِئْتِ شَیْـًٔا فَرِیًّا ۟
ஆக, அதனுடன் அவள் தனது மக்களிடம் அதைச் சுமந்தவளாக வந்தாள். அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நீ ஒரு பெரிய (தவறான) காரியத்தைச் செய்து விட்டாய்!”
Tafsyrai arabų kalba:
یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ
“ஹாரூனுடைய சகோதரியே! உமது தந்தை கெட்டவராக இருக்கவில்லை. இன்னும், உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லை.”
Tafsyrai arabų kalba:
فَاَشَارَتْ اِلَیْهِ ۫ؕ— قَالُوْا كَیْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِی الْمَهْدِ صَبِیًّا ۟
ஆக, அவள் அ(ந்)த (குழந்தையிடம் கேட்கும்படி அத)ன் பக்கம் சைகை காண்பித்தாள். அவர்கள் கூறினார்கள்: “மடியில் குழந்தையாக இருக்கின்றவரிடம் நாங்கள் எப்படி பேசுவோம்!”
Tafsyrai arabų kalba:
قَالَ اِنِّیْ عَبْدُ اللّٰهِ ۫ؕ— اٰتٰىنِیَ الْكِتٰبَ وَجَعَلَنِیْ نَبِیًّا ۟ۙ
அவர் (-ஈஸா) கூறினார்: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுப்பான்; இன்னும், என்னை நபியாக ஆக்குவான்.”
Tafsyrai arabų kalba:
وَّجَعَلَنِیْ مُبٰرَكًا اَیْنَ مَا كُنْتُ ۪— وَاَوْصٰنِیْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَیًّا ۟ۙ
இன்னும் நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியமிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவி, தீமையை தடுப்பவனாக, நல்லவற்றை கற்பிப்பவனாக, மக்களுக்கு நன்மை செய்பவனாக) ஆக்குவான். இன்னும், நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையையும் தர்மத்தையும் (பாவங்களை விட்டு விலகி தூய்மையாக இருப்பதையும்) அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்.
Tafsyrai arabų kalba:
وَّبَرًّا بِوَالِدَتِیْ ؗ— وَلَمْ یَجْعَلْنِیْ جَبَّارًا شَقِیًّا ۟
இன்னும், என் தாய்க்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்). இன்னும், அவன் என்னை பெருமையடிப்பவனாக (-இறைவனுக்கு கீழ்ப்படியாதவனாக) தீயவனாக ஆக்கவில்லை.
Tafsyrai arabų kalba:
وَالسَّلٰمُ عَلَیَّ یَوْمَ وُلِدْتُّ وَیَوْمَ اَمُوْتُ وَیَوْمَ اُبْعَثُ حَیًّا ۟
நான் பிறந்த நாளிலும் எனக்கு ஸலாம் - ஈடேற்றம் கிடைத்தது. (அவ்வாறே,) நான் மரணிக்கின்ற நாளிலும் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ற நாளிலும் என் மீது ஸலாம் உண்டாகுக!
Tafsyrai arabų kalba:
ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ— قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟
இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா ஆவார். (இந்த) உண்மையான கூற்றையே கூறுங்கள். இவர் விஷயத்தில்தான் அவர்கள் தர்க்கிக்கிறார்கள். (யூதர்கள் கூறுவதுபோன்று அவர் மந்திரவாதியும் அல்ல. கிறித்தவர்கள் கூறுவதுபோன்று அவர் அல்லாஹ்வின் மகனோ, அல்லாஹ்வோ, கடவுள் மூவரில் ஒருவரோ அல்ல. மாறாக அவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.)
Tafsyrai arabų kalba:
مَا كَانَ لِلّٰهِ اَنْ یَّتَّخِذَ مِنْ وَّلَدٍ ۙ— سُبْحٰنَهٗ ؕ— اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟ؕ
(தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல. அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம், “ஆகு” என்றுதான். உடனே அது ஆகிவிடும்.
Tafsyrai arabų kalba:
وَاِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். இது நேரான பாதையாகும்.
Tafsyrai arabų kalba:
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ— فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ یَوْمٍ عَظِیْمٍ ۟
ஆக, பல பிரிவினர் தங்களுக்கு மத்தியில் (ஈஸா பற்றி) தர்க்கித்தனர். ஆகவே, (அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் வேத அறிவிப்பை) நிராகரிப்பாளர்களுக்குக் கேடுதான் உண்டாகும், மகத்தான நாளை (அவர்கள்) காணும்போது.
Tafsyrai arabų kalba:
اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْ ۙ— یَوْمَ یَاْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْیَوْمَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில் நன்றாக செவிசாய்ப்பார்கள்; இன்னும், நன்றாக பார்ப்பார்கள். (ஆனால், அவர்கள் செவியுறுவதும் பார்ப்பதும் அன்று அவர்களுக்கு பயனளிக்காது.) எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Tafsyrai arabų kalba:
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِیَ الْاَمْرُ ۘ— وَهُمْ فِیْ غَفْلَةٍ وَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
இன்னும், (நபியே! இறுதி) தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது (அந்த) துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் (மறதியில்) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tafsyrai arabų kalba:
اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَیْهَا وَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟۠
நிச்சயமாக நாம்தான் பூமிக்கும் அதில் இருப்பவர்களுக்கும் உரிமையாளர்களாக ஆகுவோம். நம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
Tafsyrai arabų kalba:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬— اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருக்கிறார்.
Tafsyrai arabų kalba:
اِذْ قَالَ لِاَبِیْهِ یٰۤاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا یَسْمَعُ وَلَا یُبْصِرُ وَلَا یُغْنِیْ عَنْكَ شَیْـًٔا ۟
அவர் தனது தந்தைக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் தந்தையே எது செவியுறாதோ, பார்க்காதோ, உம்மை விட்டு (தீமைகளில்) எதையும் தடுக்காதோ அதை நீர் ஏன் வணங்குகிறீர்?”
Tafsyrai arabų kalba:
یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟
“என் தந்தையே! நிச்சயமாக நான் (கூறுவதாவது: அல்லாஹ்வின் புறத்திலிருந்து) உமக்கு வராத கல்வி ஞானம் எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக. நான் உமக்கு சமமான நேரான பாதையை வழிகாட்டுவேன்.”
Tafsyrai arabų kalba:
یٰۤاَبَتِ لَا تَعْبُدِ الشَّیْطٰنَ ؕ— اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِیًّا ۟
“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! நிச்சயமாக ஷைத்தானாகிறவன் ரஹ்மானுக்கு மாறுசெய்தவனாக இருக்கிறான்.”
Tafsyrai arabų kalba:
یٰۤاَبَتِ اِنِّیْۤ اَخَافُ اَنْ یَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّیْطٰنِ وَلِیًّا ۟
என் தந்தையே! “ரஹ்மானிடமிருந்து தண்டனை உம்மை வந்தடைந்தால் (அதை உம்மை விட்டு ஷைத்தானால் தடுக்க முடியாது. அப்போது) நீர் (அந்த) ஷைத்தானுக்கு (நரகத்தில்) தோழனாக ஆகிவிடுவீர்” என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.
Tafsyrai arabų kalba:
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ— لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
(இப்ராஹீமின் தந்தை) கூறினார்: இப்ராஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை மிக அசிங்கமாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர் உன் கண்ணியம்) பாதுகாக்கப்பட்டவராக என்னை விட்டு விலகி சென்றுவிடு!
Tafsyrai arabų kalba:
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ— سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ— اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
(இப்ராஹீம்) கூறினார்: “ஸலாமுன் அலைக்க" (என் புறத்திலிருந்து உமக்கு பாதுகாப்பு உண்டாகுக! இனி நீர் வெறுப்பதைக் கூறமாட்டேன்). உமக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் என் மீது கருணையும் அன்பும் உடையவனாக இருக்கிறான்.”
Tafsyrai arabų kalba:
وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّیْ ۖؗ— عَسٰۤی اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّیْ شَقِیًّا ۟
இன்னும், உங்களையும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நான் விலகி விடுகிறேன். இன்னும், என் இறைவனை நான் (கலப்பற்ற முறையில்) பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் (நான்) பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியவானாக (-நம்பிக்கை அற்றவனாக, பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) ஆகாமல் இருப்பேன்.
Tafsyrai arabų kalba:
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ— وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
ஆக, அவர் - அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். இன்னும், (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
Tafsyrai arabų kalba:
وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِیًّا ۟۠
இன்னும், அவர்களுக்கு நமது அருளிலிருந்து வழங்கினோம். உயர்வான உண்மையான நிலையான புகழையும் நாம் அவர்களுக்கு ஏற்படுத்தினோம்.
Tafsyrai arabų kalba:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ— اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
இன்னும், இவ்வேதத்தில் மூஸாவை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கிறார். இன்னும், தூதராக நபியாக இருக்கிறார்.
Tafsyrai arabų kalba:
وَنَادَیْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَیْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِیًّا ۟
இன்னும், மலையில் (மூஸாவுடைய) வலது பக்கத்திலிருந்து நாம் அவரை அழைத்தோம். நாம் அவரை (நம்முடன்) பேசுகிறவராக நெருக்கமாக்கினோம்.
Tafsyrai arabų kalba:
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
இன்னும், நமது அருளால் அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு நபியாக வழங்கினோம்.
Tafsyrai arabų kalba:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ ؗ— اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟ۚ
இன்னும், இவ்வேதத்தில் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர், வாக்கில் உண்மையாளராக இருந்தார். இன்னும் தூதராக நபியாக இருந்தார்.
Tafsyrai arabų kalba:
وَكَانَ یَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ ۪— وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِیًّا ۟
இன்னும், அவர் தனது குடும்பத்தினருக்கு தொழுகையையும் ஸகாத்தையும் ஏவுகின்றவராக இருந்தார். மேலும், அவர் தன் இறைவனிடம் திருப்திக்குரியவராக இருந்தார்.
Tafsyrai arabų kalba:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِدْرِیْسَ ؗ— اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟ۗۙ
இன்னும், இவ்வேதத்தில் இத்ரீஸை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருந்தார்.
Tafsyrai arabų kalba:
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِیًّا ۟
இன்னும், அவரை உயர்வான இடத்திற்கு மேலே உயர்த்தினோம்.
Tafsyrai arabų kalba:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ— وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ— وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ— وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ— اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
அல்லாஹ் அருள் புரிந்த இந்த நபிமார்கள் ஆதமுடைய சந்ததியிலிருந்தும்; நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலிருந்தும்; இப்ராஹீமுடைய சந்ததியிலிருந்தும், இஸ்ராயீலுடைய சந்ததியிலிருந்தும்; இன்னும், நாம் எவர்களை நேர்வழியில் செலுத்தினோமோ, தேர்ந்தெடுத்தோமோ அவர்களிலிருந்தும் உள்ளவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு முன் ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (ஸுஜூதில்) விழுந்து விடுவார்கள்.
Tafsyrai arabų kalba:
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّا ۟ۙ
ஆக, அவர்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். இன்னும், காம இச்சைகளுக்கு பின்னால் சென்றனர். ஆகவே, அவர்கள் (நரக நெருப்பில் மிகப் பெரிய) தீமையை சந்திப்பார்கள். (இந்த தீமை என்பது நரகத்தில் மிக மோசமான தண்டனைகள் நிறைந்த ஒரு கிணற்றையோ அல்லது ஒரு பள்ளத்தாக்கையோ குறிக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.)
Tafsyrai arabų kalba:
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
(எனினும்,) எவர்கள் (தொழுகையை விடுகின்ற குற்றத்திலிருந்து) திருந்தினார்களோ; இன்னும், நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், நன்மையை செய்தார்களோ அவர்களைத் தவிர. அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், அவர்கள் அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
Tafsyrai arabų kalba:
جَنّٰتِ عَدْنِ ١لَّتِیْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَیْبِ ؕ— اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِیًّا ۟
(அவர்கள்) ‘அத்ன்’ சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவனுடைய வாக்கு நிறைவேறக்கூடியதாக இருக்கிறது.
Tafsyrai arabų kalba:
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا اِلَّا سَلٰمًا ؕ— وَلَهُمْ رِزْقُهُمْ فِیْهَا بُكْرَةً وَّعَشِیًّا ۟
அவற்றில் (அழகிய முகமனாகிய) ஸலாமைத் தவிர வீணான பேச்சுகளை செவியுற மாட்டார்கள். இன்னும், அவர்களுக்கு அவற்றில் அவர்களுடைய (விருப்ப) உணவு காலையிலும் மாலையிலும் கிடைக்கும்.
Tafsyrai arabų kalba:
تِلْكَ الْجَنَّةُ الَّتِیْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِیًّا ۟
இந்த சொர்க்கத்தை நம் அடியார்களில் யார் இறையச்சமுள்ளவராக இருக்கிறாரோ அவருக்கு சொந்தமாக்கி வைப்போம்.
Tafsyrai arabų kalba:
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ ۚ— لَهٗ مَا بَیْنَ اَیْدِیْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَیْنَ ذٰلِكَ ۚ— وَمَا كَانَ رَبُّكَ نَسِیًّا ۟ۚ
இன்னும், (ஜிப்ரீலே! நபி முஹம்மதுக்கு கூறுவீராக!) உமது இறைவனின் உத்தரவின்படியே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் (-மறுமை காரியங்களும்) எங்களுக்கு பின் இருப்பவையும் (-உலக காரியங்களும்) அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ற காரியங்களும் அவனுக்கே உரிமையானவை ஆகும். இன்னும், உமது இறைவன் மறதியாளனாக இல்லை.
Tafsyrai arabų kalba:
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖ ؕ— هَلْ تَعْلَمُ لَهٗ سَمِیًّا ۟۠
(அவனே) வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவனை வணங்குவதில் உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக! அவனுக்கு ஒப்பான ஒருவரை நீர் அறிவீரா!
Tafsyrai arabų kalba:
وَیَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَیًّا ۟
இன்னும், மனிதன் கூறுகிறான்: “நான் மரணித்து விட்டால் உயிருள்ளவனாக (மீண்டும்) எழுப்பப்படுவேனா!”
Tafsyrai arabų kalba:
اَوَلَا یَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ یَكُ شَیْـًٔا ۟
“இதற்கு முன்னர் நிச்சயமாக நாம் அவனைப் படைத்ததையும் (நாம் அவனைப் படைப்பதற்கு முன்பு) அவன் எந்த ஒரு பொருளாகவும் இருக்கவில்லை” என்பதையும் அந்த மனிதன் சிந்திக்க வேண்டாமா!
Tafsyrai arabų kalba:
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ
ஆக, உமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பிறகு, அவர்கள் முழங்காலிட்டவர்களாக இருக்கும் நிலையில் நரகத்திற்கு அருகில் அவர்களைக் கொண்டுவருவோம்.
Tafsyrai arabų kalba:
ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِیْعَةٍ اَیُّهُمْ اَشَدُّ عَلَی الرَّحْمٰنِ عِتِیًّا ۟ۚ
பிறகு, ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் அவர்களில் யார் பாவம் செய்வதில் ரஹ்மானுக்கு கடுமையானவரோ அவரை நாம் கழட்டி (தனியாக) எடுப்போம்.
Tafsyrai arabų kalba:
ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِیْنَ هُمْ اَوْلٰی بِهَا صِلِیًّا ۟
பிறகு, அதில் கடுமையாக தண்டனையை அனுபவிப்பதற்கு மிகவும் தகுதியானவர்களை நாம் மிக அறிந்தவர்கள் ஆவோம்.
Tafsyrai arabų kalba:
وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ— كَانَ عَلٰی رَبِّكَ حَتْمًا مَّقْضِیًّا ۟ۚ
உங்களில் எல்லோரும் அதன் மீது கடந்து சென்றே ஆக வேண்டும். அது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட உறுதியான காரியமாக இருக்கிறது.
Tafsyrai arabų kalba:
ثُمَّ نُنَجِّی الَّذِیْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِیْنَ فِیْهَا جِثِیًّا ۟
பிறகு, எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ அவர்களை நாம் (நரகத்தில் விழுந்துவிடாமல்) பாதுகாப்போம். இன்னும், அநியாயக்காரர்களை முழங்காலிட்டவர்களாக அதில் (தள்ளி) விட்டுவிடுவோம்.
Tafsyrai arabų kalba:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا ۙ— اَیُّ الْفَرِیْقَیْنِ خَیْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِیًّا ۟
அவர்களுக்கு முன் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி, “(நம்) இரு பிரிவுகளில் தங்குமிடத்தால் யார் சிறந்தவர், இன்னும், சபையால் யார் மிக அழகானவர்?” என்று (கேலியாக) கூறுகிறார்கள்:
Tafsyrai arabų kalba:
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِﺋْﻴًﺎ ۟
இன்னும், இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் (இவர்களை விட வீட்டு பயன்பாட்டுப்) பொருட்களாலும் (செல்வத்தாலும் உடல்) தோற்றத்தாலும் மிக அழகானவர்கள்.
Tafsyrai arabų kalba:
قُلْ مَنْ كَانَ فِی الضَّلٰلَةِ فَلْیَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ۬— حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ۬— فَسَیَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ۟
(நபியே!) கூறுவீராக: (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கிறாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை - ஒன்று தண்டனையை; அல்லது, மறுமை நாளை- அவர்கள் (கண்கூடாக) பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்.
Tafsyrai arabų kalba:
وَیَزِیْدُ اللّٰهُ الَّذِیْنَ اهْتَدَوْا هُدًی ؕ— وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ مَّرَدًّا ۟
இன்னும், நேர்வழி நடப்போருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகப்படுத்துவான். நிரந்தரமான நன்மைகள்தான் உமது இறைவனிடம் நற்கூலியால் மிகச் சிறந்ததும் முடிவால் மிகச் சிறந்ததும் ஆகும்.
Tafsyrai arabų kalba:
اَفَرَءَیْتَ الَّذِیْ كَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوْتَیَنَّ مَالًا وَّوَلَدًا ۟ؕ
எவன் நமது வசனங்களை நிராகரித்தானோ; இன்னும், “நிச்சயமாக நான் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானோ அவனைப் பற்றி நீர் அறிவிப்பீராக!
Tafsyrai arabų kalba:
اَطَّلَعَ الْغَیْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۙ
(இப்படி அவன் கூறுவதற்கு) அவன் மறைவானதை அறிந்திருக்கிறானா?; அல்லது, ரஹ்மானிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறானா?
Tafsyrai arabų kalba:
كَلَّا ؕ— سَنَكْتُبُ مَا یَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۟ۙ
அவ்வாறல்ல! அவன் கூறுவதை நாம் பதிவு செய்வோம். இன்னும், (மறுமையில்) அவனுக்கு தண்டனையை அதிகப்படுத்துவோம்.
Tafsyrai arabų kalba:
وَّنَرِثُهٗ مَا یَقُوْلُ وَیَاْتِیْنَا فَرْدًا ۟
இன்னும், அவன் கூறிய (அவனது செல்வம், சந்ததி ஆகியவற்றை விட்டு அவனை பிரித்துவிட்டு அ)வற்றுக்கு நாம் வாரிசாகி விடுவோம். இன்னும், அவன் நம்மிடம் (மறுமையில் தன்னந்) தனியாக வருவான்.
Tafsyrai arabų kalba:
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّیَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۟ۙ
அவர்கள் அல்லாஹ்வை அன்றி பல தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர், அவை (அல்லாஹ்வின் தண்டனையை விட்டு தங்களை பாதுகாக்கக்கூடிய) வலிமையாக தங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக.
Tafsyrai arabų kalba:
كَلَّا ؕ— سَیَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَیَكُوْنُوْنَ عَلَیْهِمْ ضِدًّا ۟۠
அவ்வாறல்ல! அவை அவர்கள் தம்மை வணங்கியதை நிராகரித்து விடும். இன்னும் அவை அவர்களுக்கு எதிரானவையாக மாறிவிடும்.
Tafsyrai arabų kalba:
اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّیٰطِیْنَ عَلَی الْكٰفِرِیْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۟ۙ
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) தூண்டுகின்றன.
Tafsyrai arabų kalba:
فَلَا تَعْجَلْ عَلَیْهِمْ ؕ— اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۟ۚ
ஆகவே, அவர்கள் மீது (தண்டனை உடனே இறங்க வேண்டுமென்று) அவசரப்படாதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்காக (அவர்களுடைய நாட்களையும் அவர்களுடைய செயல்களையும்) எண்ணுகிறோம்.
Tafsyrai arabų kalba:
یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ اِلَی الرَّحْمٰنِ وَفْدًا ۟ۙ
இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில்,
Tafsyrai arabų kalba:
وَّنَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَهَنَّمَ وِرْدًا ۟ۘ
இன்னும் குற்றவாளிகளை நரகத்தின் பக்கம் அவர்களோ தாகித்தவர்களாக இருக்கும் நிலையில் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்ற நாளில்,
Tafsyrai arabų kalba:
لَا یَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۘ
அவர்கள் (யாருக்கும்) சிபாரிசு செய்ய(வோ யாரிடமிருந்து சிபாரிசு பெறவோ) உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திய (நம்பிக்கையாளர்களான நல்ல)வர்களைத் தவிர.
Tafsyrai arabų kalba:
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۟ؕ
இன்னும், “ரஹ்மான் (தனக்கொரு) குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Tafsyrai arabų kalba:
لَقَدْ جِئْتُمْ شَیْـًٔا اِدًّا ۟ۙ
(இவ்வாறு சொல்வதின் மூலம்) திட்டமாக (மகா மோசமான) பெரிய (பாவமான) ஒரு காரியத்தை செய்து விட்டீர்கள்.
Tafsyrai arabų kalba:
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۟ۙ
இ(ந்)த (சொல்லி)னால் வானங்கள் துண்டு துண்டாகி விடுவதற்கும்; பூமி பிளந்து விடுவதற்கும்; மலைகள் (ஒன்றன் மீது ஒன்று) சரிந்து விழுந்து (நொறுங்கி) விடுவதற்கும் நெருங்கி விட்டன,
Tafsyrai arabų kalba:
اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۟ۚ
அவர்கள் ரஹ்மானுக்கு குழந்தை இருக்கிறது என்று அழைத்ததால்.
Tafsyrai arabų kalba:
وَمَا یَنْۢبَغِیْ لِلرَّحْمٰنِ اَنْ یَّتَّخِذَ وَلَدًا ۟ؕ
ஆனால், (தனக்கொரு) குழந்தையை ஏற்படுத்திக் கொள்வது ரஹ்மானுக்கு தகுதியானது அல்ல.
Tafsyrai arabų kalba:
اِنْ كُلُّ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِی الرَّحْمٰنِ عَبْدًا ۟ؕ
வானங்கள்; இன்னும், பூமியில் உள்ள ஒவ்வொருவரும் ரஹ்மானிடம் (பணிந்த) அடிமையாக வருவாரே தவிர (குழந்தையாகவோ அவனுக்கு நிகரானவராகவோ) இல்லை.
Tafsyrai arabų kalba:
لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۟ؕ
திட்டவட்டமாக அவன் அவர்களை (தீர்க்கமாக) கணக்கிட்டு விட்டான்; இன்னும், அவர்களை (துல்லியமாக) எண்ணி வைத்திருக்கிறான்.
Tafsyrai arabų kalba:
وَكُلُّهُمْ اٰتِیْهِ یَوْمَ الْقِیٰمَةِ فَرْدًا ۟
இன்னும், அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்.
Tafsyrai arabų kalba:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ۟
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு ரஹ்மான் (மக்களின் உள்ளங்களில்) அன்பை ஏற்படுத்துவான்.
Tafsyrai arabų kalba:
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِیْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا ۟
ஆக, இ(ந்த வேதத்)தை உமது நாவில் நாம் இலகுவாக்கியதெல்லாம் இறையச்சமுள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும்; விதண்டாவாதம் செய்கின்ற மக்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.
Tafsyrai arabų kalba:
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ ؕ— هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ۟۠
இன்னும், இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்களில் யாரையும் நீர் (இப்போது) பார்க்கிறீரா? அல்லது, அவர்களுடைய சிறிய சப்தத்தை நீர் கேட்கிறீரா?
Tafsyrai arabų kalba:
 
Reikšmių vertimas Sūra: Sūra Marjama
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - Tamilų k. vertimas - Omar Šaryf - Vertimų turinys

Kilniojo Korano reikšmių vertimas į tamilų k., išvertė šeichas Umar Šarif Bin Abdis-Salam.

Uždaryti