വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
90 : 23

بَلْ اَتَیْنٰهُمْ بِالْحَقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟

(வானவர்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், சிலைகளும் கடவுள்கள்தான் என்று இவர்கள் எண்ணுவது போல் அல்ல உண்மை) மாறாக, நாம் அவர்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். (-விவரித்துள்ளோம்.) நிச்சயமாக இவர்கள் பொய்யர்கள்தான். info
التفاسير:

external-link copy
91 : 23

مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ ؕ— سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ

அல்லாஹ் (தனக்கு) எந்த ஒரு குழந்தையையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (படைப்புகளை படைத்தபோது) அவனுடன் எந்தக் கடவுளும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் சிலர், சிலர் மீது ஆதிக்கம் செலுத்தி (வென்று) இருப்பார்கள். அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். (அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, வேறு கடவுளும் இல்லை.) info
التفاسير:

external-link copy
92 : 23

عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟۠

(அவன்) மறைவையும் வெளிப்படையையும் நன்கறிந்தவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன். info
التفاسير:

external-link copy
93 : 23

قُلْ رَّبِّ اِمَّا تُرِیَنِّیْ مَا یُوْعَدُوْنَ ۟ۙ

(நபியே!) கூறுவீராக: என் இறைவா! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீ எனக்கு காண்பித்தால்... (அவர்களுடன் என்னையும் அழித்துவிடாதே!) info
التفاسير:

external-link copy
94 : 23

رَبِّ فَلَا تَجْعَلْنِیْ فِی الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

ஆகவே, என் இறைவா! அநியாயக்கார மக்களில் என்னையும் நீ ஆக்கிவிடாதே! info
التفاسير:

external-link copy
95 : 23

وَاِنَّا عَلٰۤی اَنْ نُّرِیَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ ۟

நிச்சயமாக அவர்களுக்கு நாம் வாக்களிப்பதை உமக்கு நாம் காண்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவர்கள்தான். info
التفاسير:

external-link copy
96 : 23

اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ السَّیِّئَةَ ؕ— نَحْنُ اَعْلَمُ بِمَا یَصِفُوْنَ ۟

மிக அழகிய (குணத்)தைக் கொண்டு கெட்டதை தடுப்பீராக! (பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் விஷயத்திலும் உமது விஷயத்திலும்) அவர்கள் வர்ணிக்கின்றவற்றை நாம் மிக அறிந்தவர்கள். info
التفاسير:

external-link copy
97 : 23

وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّیٰطِیْنِ ۟ۙ

(நபியே!) கூறுவீராக! என் இறைவா! ஷைத்தான்கள் (என்னை) நெறிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். info
التفاسير:

external-link copy
98 : 23

وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ یَّحْضُرُوْنِ ۟

இன்னும், என் இறைவா! அவர்கள் என்னிடம் (என் காரியங்களில்) வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். info
التفاسير:

external-link copy
99 : 23

حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِ ۟ۙ

இறுதியாக, மரணம் அவர்களில் ஒருவருக்கு வந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! என்னை (உலகத்திற்கு) திருப்(பி அனுப்)பு(ங்கள் என்று வானவர்களை நோக்கி கூறுவார்கள்.) info
التفاسير:

external-link copy
100 : 23

لَعَلِّیْۤ اَعْمَلُ صَالِحًا فِیْمَا تَرَكْتُ كَلَّا ؕ— اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآىِٕلُهَا ؕ— وَمِنْ وَّرَآىِٕهِمْ بَرْزَخٌ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟

(இன்றைய தினத்திற்கு முன் அமல்களில்) நான் விட்டுவிட்டவற்றிலிருந்து (சில) நல்ல அமல்களை(யாவது) நான் செய்வதற்காக (என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பு). ஒரு போதும் அவ்வாறு அல்ல. (உலகத்திற்கு அவன் அனுப்பப்படவே மாட்டான். என்னை உலகிற்கு அனுப்புங்கள் என்ற) இது ஒரு வீண் பேச்சாகும். அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான். அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள்வரை அவர்களுக்கு முன் ஒரு தடை இருக்கிறது. (அவர்கள் உலகிற்கு திரும்புவதிலிருந்து அது அவர்களை தடுத்துவிடும்.) info
التفاسير:

external-link copy
101 : 23

فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَیْنَهُمْ یَوْمَىِٕذٍ وَّلَا یَتَسَآءَلُوْنَ ۟

சூரில் (எக்காளத்தில் முதல் முறை அல்லது இரண்டாவது முறை) ஊதப்பட்டால் அவர்களுக்கு மத்தியில் அந்நாளில் உறவுகள் அறவே இருக்காது. அவர்கள் தங்களுக்குள் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
102 : 23

فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

எனவே, எவரின் எடைகள் கனத்தனவோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். info
التفاسير:

external-link copy
103 : 23

وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِیْ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚ

எவர்களுடைய (நன்மைகளின்) எடைகள் இலகுவாகிவிட்டனவோ அவர்கள்தான் தங்களுக்குத் தாமே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள். நரகில் அவர்கள் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
104 : 23

تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِیْهَا كٰلِحُوْنَ ۟

நெருப்பு அவர்களது முகத்தை பொசுக்கிவிடும். அவர்கள் அதில் உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள். info
التفاسير: