पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

رقم الصفحة:close

external-link copy
31 : 22

حُنَفَآءَ لِلّٰهِ غَیْرَ مُشْرِكِیْنَ بِهٖ ؕ— وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّیْرُ اَوْ تَهْوِیْ بِهِ الرِّیْحُ فِیْ مَكَانٍ سَحِیْقٍ ۟

அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக அவனுக்கு (எதையும்) இணையாக்காதவர்களாக (இருங்கள்). எவர் அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்து, பிறகு பறவைகள் அவரைக் கொத்திச் சென்றவரைப் போன்று அல்லது காற்று அவரை தூரமான இடத்தில் எறிந்தவரைப் போன்றவராவார். info
التفاسير:

external-link copy
32 : 22

ذٰلِكَ ۗ— وَمَنْ یُّعَظِّمْ شَعَآىِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَی الْقُلُوْبِ ۟

அவைதான் (சிலைகளை விட்டும் பொய் பேச்சை விட்டும் விலகுவது, அல்லாஹ்விற்கு பணிவது, இணைவைப்பதிலிருந்து விலகி இருப்பது உள்ளத்தின் இறையச்சத்தைச் சேர்ந்ததாகும்). இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ (-குர்பானி பிராணிகளை அழகிய முறையில் பராமரித்து அவற்றை கொழுக்க வைப்பாரோ, ஹஜ்ஜுடைய கடமைகளை அல்லாஹ் ஏவிய முறையில் செய்வாரோ) நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து உள்ளவையாகும். info
التفاسير:

external-link copy
33 : 22

لَكُمْ فِیْهَا مَنَافِعُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ مَحِلُّهَاۤ اِلَی الْبَیْتِ الْعَتِیْقِ ۟۠

உங்களுக்கு இவற்றில் (அல்லாஹ்வின் புனித அடையாளங்களிலும் குர்பானி பிராணிகளிலும்) குறிப்பிட்ட ஒரு காலம்வரை பலன்கள் உள்ளன. பின்னர் அவற்(றை அ)று(ப்பதற்)குரிய (ஹலாலான) இடம் அல் பைத்துல் அதீக் (-ஹரம் எல்லை) ஆகும். info
التفاسير:

external-link copy
34 : 22

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ؕ— فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا ؕ— وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ ۟ۙ

(உங்களுக்கு முன்சென்ற நம்பிக்கை கொண்ட) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் குர்பானியை அறுப்பதை (வணக்கமாக) நாம் ஆக்கி இருக்கிறோம். அல்லாஹ், அவர்களுக்குக் கொடுத்த கால்நடைகளின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் நினைவு கூருவதற்காக (நாம் குர்பானியை ஏற்படுத்தினோம்). ஆக, உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, அவனுக்கே பணிந்து வழிபடுங்கள். (அல்லாஹ்விற்கு) கீழ்ப்படிந்தவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! info
التفاسير:

external-link copy
35 : 22

الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِیْنَ عَلٰی مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِیْمِی الصَّلٰوةِ ۙ— وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟

(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயப்படும். அவர்களுக்கு ஏற்பட்டவற்றின் மீது (-சோதனைகளின் மீது) பொறுமையாக இருப்பார்கள். தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள். info
التفاسير:

external-link copy
36 : 22

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُمْ مِّنْ شَعَآىِٕرِ اللّٰهِ لَكُمْ فِیْهَا خَیْرٌ ۖۗ— فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهَا صَوَآفَّ ۚ— فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ؕ— كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

கொழுத்த ஒட்டகங்கள் (மற்றும் மாடுகள்) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கின்றோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒருகால் கட்டுப்பட்டு மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். (அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள், இன்னும் யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அதை உங்களுக்கு வசப்படுத்தித்தந்தோம். info
التفاسير:

external-link copy
37 : 22

لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ— كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ— وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟

அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். இவ்வாறுதான் அவன் அவற்றை (அந்த குர்பானி பிராணிகளை) உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், அல்லாஹ்வை -அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக-நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக. (நபியே!) அல்லாஹ்விற்கு அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக! info
التفاسير:

external-link copy
38 : 22

اِنَّ اللّٰهَ یُدٰفِعُ عَنِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُوْرٍ ۟۠

நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை விட்டும் (நிராகரிப்பாளர்களை) தடுத்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லா மோசடிக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் நேசிக்க மாட்டான். info
التفاسير: