Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Al Muuminuna   Umurongo:
وَالَّذِیْنَ یُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّقُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰی رَبِّهِمْ رٰجِعُوْنَ ۟ۙ
23.60. மறுமை நாளில் அவனிடம் திரும்பும் போது தங்களின் தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டானோ என்று அஞ்சிய நிலமையில், யார் நன்மையான காரியங்களில் முயற்சி செய்து, நன்மையான செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்குகிறார்களோ,
Ibisobanuro by'icyarabu:
اُولٰٓىِٕكَ یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ ۟
23.61. மகத்தான இந்த பண்புகளை உடையவர்கள்தாம் நற்செயல்களின்பால் விரைகிறார்கள். அவர்களே அவற்றுக்கு முந்தக்கூடியவர்கள். இதனால்தான் மற்றவர்களை முந்திவிட்டார்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَلَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا وَلَدَیْنَا كِتٰبٌ یَّنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
23.62. நாம் எந்த ஒரு மனிதனுக்கும் அவனால் செய்ய முடிந்த செயல்களையே பொறுப்பாக சாட்டுகிறோம். நம்மிடம் ஒரு புத்தகம் உள்ளது. அதில் அனைவரின் செயல்களையும் பதிவுசெய்து வைத்துள்ளோம். அது சந்தேகமற்ற சத்தியத்தைக்கொண்டு பேசும். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் மீது அநீதி இழைக்கப்படாது.
Ibisobanuro by'icyarabu:
بَلْ قُلُوْبُهُمْ فِیْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ ۟
23.63. மாறாக நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் சத்தியத்தைக்கொண்டு பேசும் இந்த புத்தகத்தை விட்டும் அவர்கள் மீது இறங்கிய வேதத்தை விட்டும் அலட்சியமாக இருக்கின்றன. அவர்களுக்கு அவர்களின் நிராகரிப்புத் தவிர்ந்த வேறு செயல்களும் இருக்கின்றன.
Ibisobanuro by'icyarabu:
حَتّٰۤی اِذَاۤ اَخَذْنَا مُتْرَفِیْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ یَجْـَٔرُوْنَ ۟ؕ
23.64. இறுதியில் உலகில் சொகுசாக வாழ்ந்தோரை மறுமை நாளில் நாம் வேதனையால் தண்டிக்கும்போது அவர்கள் சத்தமாக அபயக்குரல் எழுப்புவார்கள்.
Ibisobanuro by'icyarabu:
لَا تَجْـَٔرُوا الْیَوْمَ ۫— اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ ۟
23.65. அல்லாஹ்வின் அருளைவிட்டு நிராசையடையச் செய்யும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் சப்தமிடவோ, அபயக்குரல் எழுப்பவோ வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் எந்த உதவியாளரும் உங்களுக்குக் கிடையாது.
Ibisobanuro by'icyarabu:
قَدْ كَانَتْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَكُنْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ تَنْكِصُوْنَ ۟ۙ
23.66. உலகில் இறைவேத வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. அதனைக் கேட்கும் போது அதன் மீதுள்ள வெறுப்பினால் அவற்றைப் புறக்கணித்து திரும்பிச் செல்வோராக இருந்தீர்கள்.
Ibisobanuro by'icyarabu:
مُسْتَكْبِرِیْنَ ۖۚۗ— بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ ۟
23.67. நாங்கள் ஹரமைச் சேர்ந்தவர்கள்’ என்று எண்ணி மக்களிடம் கர்வம்கொண்டுதான் இவ்வாறெல்லாம் செய்தீர்கள். நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. ஏனெனில் நிச்சயமாக இறையச்சமுடையவர்கள்தாம் ஹரமைச் சார்ந்தவர்களாவர். அதைச் சுற்றி இருந்துகொண்டு தீய வார்த்தைகளால் இரவில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அதனைப் புனிதப்படுத்துவதில்லை.
Ibisobanuro by'icyarabu:
اَفَلَمْ یَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ یَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِیْنَ ۟ؗ
23.68. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ் இறக்கிய குர்ஆனை நம்பிக்கைகொண்டு அதன்படி செயல்படுவதற்காக அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துவிட்டதா? அதனால் அவர்கள் அதனைப் புறக்கணித்து பொய்ப்பிக்கிறார்களா?
Ibisobanuro by'icyarabu:
اَمْ لَمْ یَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟ؗ
23.69. அல்லது அல்லாஹ் அவர்களின்பால் அனுப்பிய முஹம்மதை அறியாததால் அவரை அவர்கள் நிராகரிக்கிறார்களா? அவர்கள் அவரையும் அவரது நம்பகத்தன்மையையும் அமானிதத்தையும் நன்கறிவார்கள்.
Ibisobanuro by'icyarabu:
اَمْ یَقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ ؕ— بَلْ جَآءَهُمْ بِالْحَقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟
23.70. மாறாக அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அவர்கள் பொய் கூறுகிறார்கள். மாறாக அவர் நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து சந்தேகமற்ற சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் தங்களிடமுள்ள பொறாமையினாலும், அசத்தியத்திலுள்ள பிடிவாதத்தினாலும் சத்தியத்தை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَلَوِ اتَّبَعَ الْحَقُّ اَهْوَآءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِیْهِنَّ ؕ— بَلْ اَتَیْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَ ۟ؕ
அவர்களின் மனங்கள் விரும்புவதற்கு ஏற்ப அல்லாஹ் காரியங்களை நிகழ்த்தி திட்டமிட்டால் வானங்களும் பூமியும் அதில் உள்ளவைகளும் சீர்குழைந்துவிடும். ஏனெனில் அவர்களுக்கு பின்விளைவுகளைப் பற்றியோ திட்டமிடலில் நல்லது கெட்டதைப் பற்றியோ தெரியாது.எனவே அவர்களுக்கு கண்ணியமும் மதிப்பும் பொதிந்த அல் குரானை வழங்கியுள்ளோம். ஆனால் அவர்களோ அதனை புறக்கணித்தவர்களாக உள்ளனர் .
Ibisobanuro by'icyarabu:
اَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَیْرٌ ۖۗ— وَّهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
23.72. -தூதரே!- நீர் அவர்களிடம் கொண்டுவந்த தூதுப்பணிக்காக அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்டு, அதனால் அவர்கள் உமது அழைப்பை நிராகரிக்கிறார்களா? இவ்வாறு நீர் கேட்கவில்லை. உம் இறைவன் உமக்கு வழங்கும் கூலி இவர்கள், இவர்கள் அல்லாத ஏனையவர்களின் கூலியைவிடச் சிறந்ததாகும். அவனே வாழ்வாதாரம் வழங்குவோரில் மிகச்சிறந்தவன்.
Ibisobanuro by'icyarabu:
وَاِنَّكَ لَتَدْعُوْهُمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
23.73. -தூதரே!- நிச்சயமாக நீர் இவர்களையும், மற்றவர்களையும் கோணலற்ற நேரான வழியின் பக்கம் அழைக்கின்றீர். அது இஸ்லாம் என்னும் வழியாகும்.
Ibisobanuro by'icyarabu:
وَاِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنٰكِبُوْنَ ۟
23.74. மறுமை நாளின் மீதும் அங்கு இடம்பெறும் கேள்வி கணக்கு, வழங்கப்படும் நற்கூலி, தண்டனை என்பவற்றின் மீதும் நம்பிக்கைகொள்ளாதவர்கள் இஸ்லாம் என்னும் நேரான வழியை விட்டு நரகத்தின்பால் இட்டுச் செல்லக்கூடிய கோணலான வழிகளின் பக்கம் சாய்ந்துள்ளார்கள்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• خوف المؤمن من عدم قبول عمله الصالح.
1. தனது நற்செயல் அங்கீகரிக்கப்படாதோ என்ற நம்பிக்கையாளனின் அச்சம்.

• سقوط التكليف بما لا يُسْتطاع رحمة بالعباد.
2. செய்ய முடியாதவற்றை செய்யுமாறு கட்டாயப்படுத்தாமை அடியார்களின் மீதுள்ள கருணையாகும்.

• الترف مانع من موانع الاستقامة وسبب في الهلاك.
3. உல்லாச வாழ்வு சத்தியத்தில் நிலைத்திருப்பதற்குத் தடையாகவும் அழிவிற்கான காரணியாகவும் இருக்கின்றது.

• قصور عقول البشر عن إدراك كثير من المصالح.
4. எவ்வளவோ நலன்களை புரிந்துகொள்ள முடியாதளவு மனிதனின் அறிவு குறுகியதாகும்.

 
Ibisobanuro by'amagambo Isura: Al Muuminuna
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga