Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Al Muuminuna   Umurongo:
اَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
23.105. அவர்களைக் கண்டித்துக் கூறப்படும்: “உலகில் குர்ஆனின் வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்படவில்லையா? நீங்கள் அவற்றை நிராகரித்துக் கொண்டிருந்தீர்களே!”
Ibisobanuro by'icyarabu:
قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَیْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّیْنَ ۟
23.106. அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ முன்னரே அறிந்த எங்களின் துர்பாக்கியம் எங்களை மிகைத்துவிட்டது. நாங்கள் சத்தியத்தைவிட்டு வழிதவறியவர்களாக இருந்தோம்.
Ibisobanuro by'icyarabu:
رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ ۟
23.107. எங்கள் இறைவா! நரகத்திலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக. நாங்கள் இருந்த நிராகரிப்பின் பக்கமும், வழிகேட்டின் பக்கமும் மீண்டும் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் எங்கள் மீதே அநீதி இழைத்தவர்களாவோம். எங்களுக்கான காரணமும் அறுபட்டுவிடும்.”
Ibisobanuro by'icyarabu:
قَالَ اخْسَـُٔوْا فِیْهَا وَلَا تُكَلِّمُوْنِ ۟
23.108. அல்லாஹ் கூறுவான்: “இழிவடைந்தவர்களாக நரகத்திலேயே தங்கியிருங்கள். என்னிடம் பேசாதீர்கள்.”
Ibisobanuro by'icyarabu:
اِنَّهٗ كَانَ فَرِیْقٌ مِّنْ عِبَادِیْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ
23.109. நிச்சயமாக என்மீது நம்பிக்கைகொண்ட என் அடியார்களில் ஒரு பிரிவினர் கூறினார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் மீது உன் கருணையை காட்டுவாயாக. நீயே மிகச் சிறந்த கருணையாளனாவாய்.”
Ibisobanuro by'icyarabu:
فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِیًّا حَتّٰۤی اَنْسَوْكُمْ ذِكْرِیْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ ۟
23.110. தங்கள் இறைவனை அழைக்கும் இந்த நம்பிக்கையாளர்களை நீங்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். அவர்களைக் கேலி செய்தீர்கள். எந்த அளவுக்கெனில் அவர்களைக் கேலி செய்வதில் ஈடுபடுவது உங்களை அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் மறக்கடித்துவிட்டது. நீங்கள் அவர்களைப் பரிகாசம் செய்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
Ibisobanuro by'icyarabu:
اِنِّیْ جَزَیْتُهُمُ الْیَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ— اَنَّهُمْ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
23.111. நிச்சயமாக நான் மறுமை நாளில் இந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும், உங்கள் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்திலும், பொறுமையாக இருந்ததனால் சுவனத்தைப் பரிசாக அளித்தேன்.
Ibisobanuro by'icyarabu:
قٰلَ كَمْ لَبِثْتُمْ فِی الْاَرْضِ عَدَدَ سِنِیْنَ ۟
23.112. அவன் கேட்பான்: “பூமியில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தீர்கள்? அதில் எவ்வளவு நேரங்களை வீணாக்கினீர்கள்?”
Ibisobanuro by'icyarabu:
قَالُوْا لَبِثْنَا یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ فَسْـَٔلِ الْعَآدِّیْنَ ۟
23.113. அவர்கள் பதிலாக கூறுவார்கள்: “நாங்கள் ஒருநாளோ அல்லது ஒருநாளின் ஒருபகுதியோ தங்கியிருப்போம். நாட்களையும், மாதங்களையும் கணக்கிடுவோரிடம் கேட்பாயாக.”
Ibisobanuro by'icyarabu:
قٰلَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِیْلًا لَّوْ اَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
23.114. அவன் கூறுவான்: “நீங்கள் உலகில் குறைவான காலமே தங்கியிருந்தீர்கள். தங்கியிருக்கும் காலத்தை நீங்கள் அறிந்திருந்தால் வழிப்படுவதில் பொறுமையாக இருப்பது உங்களுக்கு இலகுவாக இருந்திருக்கும்.
Ibisobanuro by'icyarabu:
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَیْنَا لَا تُرْجَعُوْنَ ۟
23.115. -மனிதர்களே!- உங்களை நாம் நோக்கமின்றி வீணாகப் படைத்துள்ளோம், கால்நடைகளைப் போல உங்களுக்கும் கூலியோ, தண்டனையோ வழங்கப்படாது என்றும் நீங்கள் மறுமை நாளில் விசாரணைக்காக, கூலி கொடுக்கப்படுவதற்காக நம்மிடம் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?
Ibisobanuro by'icyarabu:
فَتَعٰلَی اللّٰهُ الْمَلِكُ الْحَقُّ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— رَبُّ الْعَرْشِ الْكَرِیْمِ ۟
23.116. தான் படைத்தவற்றில் தான் விரும்பியவாறு ஆட்சி செலுத்தும் உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக தூய்மையானவன். அவனுடைய வாக்குறுதியும், வார்த்தையும் உண்மையானது. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி. அது படைப்புகளில் மகத்தானது. படைப்புகளில் மிகவும் மகத்தானதிற்கு அதிபதியாக இருப்பவனே படைப்புகள் அனைத்திற்கும் அதிபதியுமாவான்.
Ibisobanuro by'icyarabu:
وَمَنْ یَّدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۙ— لَا بُرْهَانَ لَهٗ بِهٖ ۙ— فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الْكٰفِرُوْنَ ۟
23.117. யார் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குத் தகுதியானது என்பதற்கு எந்த ஆதாரமும் அற்ற வேறு கடவுளையும் அழைப்பாரோ (அல்லாஹ்வைத் தவிரவுள்ள வணங்கப்படும் அனைத்தின் நிலையும் இதுவே) நிச்சயமாக அவருடைய தீய செயலுக்கான தண்டனை அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அவரை வேதனையால் தண்டிப்பான். பயப்படுவதில் (நரகம்) இருந்து தப்பித்து எதிர்பார்ப்பதை (சுவனத்தை) பெற்று நிராகரிப்பாளர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ ۟۠
23.118. -தூதுரே!- நீர் கூறுவீராக: “என் இறைவா! என் பாவங்களை மன்னிப்பாயாக. என்மீது உன் கருணையை காட்டுவாயாக. நீயே பாவிகளுக்கு கருணை புரிந்து அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வதில் மிகச் சிறந்தவனாவாய்.”
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• الكافر حقير مهان عند الله.
1. நிராகரிப்பாளன் அல்லாஹ்விடத்தில் இழிவுக்கும், அவமானத்திற்கும் உரியவனாவான்.

• الاستهزاء بالصالحين ذنب عظيم يستحق صاحبه العذاب.
2. நல்லவர்களைக் கேலி செய்வது தண்டனைக்கு தகுதியான பெரும் பாவமாகும்.

• تضييع العمر لازم من لوازم الكفر.
3. வாழ்நாளை வீணாக்குவது நிராகரிப்பின் விளைவுகளில் ஒன்றாகும்.

• الثناء على الله مظهر من مظاهر الأدب في الدعاء.
4. அல்லாஹ்வைப் புகழ்வது பிரார்த்தனையின் ஒழுக்கத்தின் வெளிப்பாடாகும்.

• لما افتتح الله سبحانه السورة بذكر صفات فلاح المؤمنين ناسب أن تختم السورة بذكر خسارة الكافرين وعدم فلاحهم.
5. நம்பிக்கையாளர்களின் வெற்றிக்கான பண்புகளைக் கொண்டு அத்தியாயத்தை அல்லாஹ் ஆரம்பித்தது போல் நிராகரிப்பாளர்களின் நஷ்டத்தையும், தோல்வியையும் கூறி அத்தியாயத்தை முடிப்பது பொருத்தமாக அமைந்துள்ளது.

 
Ibisobanuro by'amagambo Isura: Al Muuminuna
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga