Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Ashuarau   Umurongo:
وَاجْعَلْ لِّیْ لِسَانَ صِدْقٍ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
26.84. எனக்குப் பிறகு வரும் தலைமுறைகளிடம் எனக்கு நற்பெயரை, அழகிய புகழை ஏற்படுத்துவாயாக.
Ibisobanuro by'icyarabu:
وَاجْعَلْنِیْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِیْمِ ۟ۙ
26.85. நம்பிக்கை மிக்க உன் அடியார்கள் இன்பம் பெறும் சுவனத்தின் அந்தஸ்த்தை பெறக்கூடியவர்களில் என்னையும் ஆக்குவாயாக. அங்கு என்னை வசிக்கச் செய்வாயாக.
Ibisobanuro by'icyarabu:
وَاغْفِرْ لِاَبِیْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّیْنَ ۟ۙ
26.86. என் தந்தையை மன்னித்துவிடுவாயாக. நிச்சயமாக அவர் இணைவைத்து சத்தியத்தைவிட்டும் வழிகெட்டவர்களில் ஒருவராக இருக்கின்றார். இந்தப் பிரார்த்தனை இப்ராஹிம் தம் தந்தை நரகவாசிகளில் ஒருவர் என்பதை அறிவதற்கு முன்னர் செய்ததாகும். தம் தந்தை நரகவாசி என்பதை அறிந்த பின்னர் அவர் தம் தந்தையை விட்டும் நீங்கிவிட்டார், அவருக்காக பிரார்த்தனை செய்யவில்லை.
Ibisobanuro by'icyarabu:
وَلَا تُخْزِنِیْ یَوْمَ یُبْعَثُوْنَ ۟ۙ
26.87. மக்கள் விசாரணைக்காக எழுப்படும் மறுமை நாளில் என்னை வேதனையால் இழிவுபடுத்திவிடாதே.
Ibisobanuro by'icyarabu:
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۟ۙ
26.88. உலகில் மனிதன் சேகரித்த செல்வங்களோ அவனுக்கு உதவியாக இருந்த பிள்ளைகளோ அந்த நாளில் அவனுக்குப் பயனளிக்காது.
Ibisobanuro by'icyarabu:
اِلَّا مَنْ اَتَی اللّٰهَ بِقَلْبٍ سَلِیْمٍ ۟ؕ
26.89. ஆயினும் இணைவைப்பு, நயவஞ்சகம், முகஸ்துதி, தற்பெருமை ஆகியவை இன்றி தூய்மையான உள்ளத்துடன் அவனிடம் வந்தவர்களைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவன் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்த செல்வங்களைக் கொண்டு அவனுக்காக பிரார்த்தனை செய்யும் பிள்ளைகளைக் கொண்டு பயனடைவான்.
Ibisobanuro by'icyarabu:
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
26.90. தங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்காக சுவனம் அருகில் கொண்டு வரப்படும்.
Ibisobanuro by'icyarabu:
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِلْغٰوِیْنَ ۟ۙ
26.91. மஹ்ஷர் பெருவெளியில் சத்திய மார்க்கத்தை விட்டும் தடம்புரண்ட வழிகேடர்களுக்காக நரகம் வெளிப்படுத்தப்படும்.
Ibisobanuro by'icyarabu:
وَقِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
26.92,93. அவர்களைக் கண்டிக்கும் விதமாக கேட்கப்படும்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கிக்கொண்டிருந்த சிலைகளெல்லாம் எங்கே?
Ibisobanuro by'icyarabu:
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— هَلْ یَنْصُرُوْنَكُمْ اَوْ یَنْتَصِرُوْنَ ۟ؕ
அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்குபவை அல்லாஹ்வின் வேதனையைவிட்டும் உங்களைத் தடுத்து உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது அவை தங்களுக்காவது உதவி செய்யுமா?”
Ibisobanuro by'icyarabu:
فَكُبْكِبُوْا فِیْهَا هُمْ وَالْغَاوٗنَ ۟ۙ
26.94,95. அவர்களும் அவர்களை வழிகெடுத்தவர்களும் சிலருக்கு மேல் சிலர் நரகத்தில் எறியப்படுவார்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَجُنُوْدُ اِبْلِیْسَ اَجْمَعُوْنَ ۟ؕ
இப்லீஸின் உதவியாளர்களான ஷைத்தான்கள் என அவர்கள் அனைவரும் (எரியப்படுவார்கள்). அவர்களில் எவருக்கும் விதிவிலக்கில்லை.
Ibisobanuro by'icyarabu:
قَالُوْا وَهُمْ فِیْهَا یَخْتَصِمُوْنَ ۟ۙ
26.96. அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களை வணங்கி, அவர்களை இணைகளாக ஏற்படுத்திய இணைவைப்பாளர்கள் தம்மால் வணங்கப்பட்டவர்களுடன் தர்க்கித்தவர்களாக கூறுவார்கள்:
Ibisobanuro by'icyarabu:
تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
26.97. அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் சத்தியத்தை விட்டு தெளிவான வழிகேட்டில் இருந்தோம்.
Ibisobanuro by'icyarabu:
اِذْ نُسَوِّیْكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகளைப் போல் உங்களை ஆக்கி அவனை வணங்குவது போன்று உங்களை வணங்கிவிட்டோம்.
Ibisobanuro by'icyarabu:
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ ۟
26.99. அல்லாஹ்வை விடுத்து தங்களை வணங்கும்படி அழைத்த குற்றவாளிகள்தாம் எங்களை சத்தியப் பாதையை விட்டும் வழிதவறச் செய்தார்கள்.
Ibisobanuro by'icyarabu:
فَمَا لَنَا مِنْ شَافِعِیْنَ ۟ۙ
26.100. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக அவனிடம் பரிந்து பேசுபவர்கள் யாரும் இல்லை.
Ibisobanuro by'icyarabu:
وَلَا صَدِیْقٍ حَمِیْمٍ ۟
26.101. எங்களைப் பாதுகாத்து எமக்காக பரிந்துரை செய்யக்கூடிய தூய அன்புள்ள எந்த நண்பனும் எங்களுக்கு இல்லை.
Ibisobanuro by'icyarabu:
فَلَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
26.102. நிச்சயமாக நாங்கள் மீண்டும் உலக வாழ்க்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களாக ஆகிவிடுவோம்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
26.103. நிச்சயமாக மேற்கூறப்பட்ட இப்ராஹீமின் சம்பவத்திலும் பொய்ப்பித்தவர்களின் முடிவிலும் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை.
Ibisobanuro by'icyarabu:
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
26.104. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Ibisobanuro by'icyarabu:
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ١لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
26.105. நூஹின் சமூகத்தினர் அவரை நிராகரித்தபோது தூதர்களையும் நிராகரித்தார்கள்.
Ibisobanuro by'icyarabu:
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
26.142. அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா?
Ibisobanuro by'icyarabu:
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
26.107. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியின் மூலம் அறிவிப்பதை கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
Ibisobanuro by'icyarabu:
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
26.108. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۚ
26.109. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத வேறு எவரிடமும் இல்லை.
Ibisobanuro by'icyarabu:
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ؕ
26.110. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
Ibisobanuro by'icyarabu:
قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ ۟ؕ
26.111. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: -“நூஹே!- தலைவர்களோ மரியாதைக்குரியவர்களோ உம்மைப் பின்பற்றாமல் தாழ்ந்த மக்களே உம்மைத் தொடர்வோராக இருக்கும் நிலையில் நாங்கள் உம்மீது நம்பிக்கைகொண்டு நீர் கொண்டுவந்ததைப் பின்பற்றி செயல்படுவதா?
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• أهمية سلامة القلب من الأمراض كالحسد والرياء والعُجب.
1. பொறாமை, முகஸ்துதி, தற்பெருமை போன்ற நோய்களிலிருந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்.

• تعليق المسؤولية عن الضلال على المضلين لا تنفع الضالين.
2. வழிகெட்டவர்கள் வழிகேட்டுக்கான பொறுப்பை தம்மை வழிகெடுத்தவர்கள் மீது போடுவது அவர்களுக்குப் பயனளிக்கப்போவதில்லை.

• التكذيب برسول الله تكذيب بجميع الرسل.
3. அல்லாஹ்வின் ஒரு தூதரை நிராகரிப்பது அனைவரையும் நிராகரிப்பதற்குச் சமனாகும்.

• حُسن التخلص في قصة إبراهيم من الاستطراد في ذكر القيامة ثم الرجوع إلى خاتمة القصة.
4.இப்ராஹீம் அலை அவர்களது சம்பவத்தின் இடையில் மறுமையைக் குறிப்பிடுவதில் திசைமாறுவதிலிருந்து விடுபட்டு பின்பு மீண்டும் அந்த சம்பவத்தின் முடிவுக்கு வருதல்.

 
Ibisobanuro by'amagambo Isura: Ashuarau
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga