Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Ashuarau   Umurongo:
وَاتَّقُوا الَّذِیْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِیْنَ ۟ؕ
184. உங்களையும் உங்களுக்கு முந்தைய சமூகங்களையும் படைத்த அல்லாஹ் உங்களின் மீது வேதனையை இறக்குவதை அஞ்சுங்கள்.
Ibisobanuro by'icyarabu:
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۙ
26.185. ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக சூனியத்தால் உமது புத்தி பேதலித்து, மங்கி விடுமளவு நீர் பலமுறை சூனியம் செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராக இருக்கிறீர்.
Ibisobanuro by'icyarabu:
وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۚ
26.186. நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எங்களைவிட உமக்கு எந்தச் சிறப்பும் இல்லை. ஆகவே நீர் எவ்வாறு தூதராக முடியும்? நிச்சயமாக தன்னைத் தூதர் என்று நீர் வாதிடும் விஷயத்தில் உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
Ibisobanuro by'icyarabu:
فَاَسْقِطْ عَلَیْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟ؕ
26.187. நீர் வாதிடும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து ஒரு துண்டை விழச் செய்யும்.
Ibisobanuro by'icyarabu:
قَالَ رَبِّیْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
26.188. ஷுஐப் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் என் இறைவன் நன்கறிவான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.”
Ibisobanuro by'icyarabu:
فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ یَوْمِ الظُّلَّةِ ؕ— اِنَّهٗ كَانَ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
26.189. தொடர்ந்தும் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். அதனால் பெரும் வேதனை அவர்களைத் தாக்கியது. கடும் வெயிலுக்குப் பிறகு மேகங்கள் அவர்களுக்கு நிழலளித்தன. அவை அவர்களின் மீது நெருப்பை பொழிந்து அவர்களை எரித்துவிட்டன. நிச்சயமாக அவர்கள் அழிக்கப்பட்ட நாள் பெரும் பயங்கரமான நாளாக இருந்தது.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
26.190. நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட அந்த ஷுஐபின் சமூகம் அழிக்கப்பட்டதில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.
Ibisobanuro by'icyarabu:
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
26.191. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன் அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Ibisobanuro by'icyarabu:
وَاِنَّهٗ لَتَنْزِیْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
26.192. நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
Ibisobanuro by'icyarabu:
نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِیْنُ ۟ۙ
26.193. நம்பிக்கைக்குரிய ஜிப்ரீல் இதனைக்கொண்டு இறங்கினார்.
Ibisobanuro by'icyarabu:
عَلٰی قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِیْنَ ۟ۙ
26.194. -தூதரே!- அவர் உமது உள்ளத்தில் இறக்கினார். அது நீர் மக்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அச்சுறுத்தி, எச்சரிக்கும் தூதர்களில் ஒருவராக வேண்டும் என்பதற்காகத்தான்.
Ibisobanuro by'icyarabu:
بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیْنٍ ۟ؕ
26.195. தெளிவான அரபி மொழியில் இதனை அவர் இறக்கியுள்ளார்.
Ibisobanuro by'icyarabu:
وَاِنَّهٗ لَفِیْ زُبُرِ الْاَوَّلِیْنَ ۟
26.196. நிச்சயமாக இந்த குர்ஆனைக் குறித்து முன்சென்றவர்களின் வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. முந்தயை வானுலக வேதங்கள் இதனைக் கொண்டு நற்செய்தி கூறியுள்ளன.
Ibisobanuro by'icyarabu:
اَوَلَمْ یَكُنْ لَّهُمْ اٰیَةً اَنْ یَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
26.197. உமக்கு இறக்கப்பட்டுள்ளதைக்குறித்து இஸ்ராயீலின் மக்களிலுள்ள அப்துல்லாஹ் இப்னு சலாம் போன்ற அறிஞர்கள் உண்மையாக அறிந்திருப்பது, உம்மை மறுக்கும் இவர்களுக்கு, உனது நம்பகத்தன்மைக்கான ஒரு சான்றாக இல்லையா?
Ibisobanuro by'icyarabu:
وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰی بَعْضِ الْاَعْجَمِیْنَ ۟ۙ
26.198. நாம் அரபி மொழி பேசாத வேறு சிலரின் மீது இந்தக் குர்ஆனை இறக்கியிருந்து
Ibisobanuro by'icyarabu:
فَقَرَاَهٗ عَلَیْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِیْنَ ۟ؕ
26.199. அதனை அவர் அவர்களிடம் படித்துக்காட்டினால் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். “நிச்சயமாக எங்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது” என்று கூறுவார்கள். எனவே அவர்களின் மொழியில் இறக்கப்பட்டதற்காக அவர்கள் அல்லாஹ்வை புகழட்டும்.
Ibisobanuro by'icyarabu:
كَذٰلِكَ سَلَكْنٰهُ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ؕ
26.200. இவ்வாறு நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் நிராகரிப்பை, நிராகரிப்பை நுழைத்து விடுகின்றோம்.
Ibisobanuro by'icyarabu:
لَا یُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟ۙ
26.201. அவர்கள் வேதனைமிக்க தண்டனையைக் காணும்வரை தம்மிடம் இருக்கும் நிராகரிப்பை மாற்றிக் கொள்ளவோ நம்பிக்கைகொள்ளவோ மாட்டார்கள்.
Ibisobanuro by'icyarabu:
فَیَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
26.202. அது திடீரென அவர்களை வந்தடைந்துவிடும். அவர்களிடம் அது திடீரென்று வரும் வரை அதன் வருகையை அவர்கள் அறிய மாட்டார்கள்.
Ibisobanuro by'icyarabu:
فَیَقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ ۟ؕ
26.203. திடீரென வேதனை அவர்கள் மீது இறங்கும்போது மிகவும் வருத்தப்பட்டவர்களாகக் கூறுவார்கள்: “நாங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோர எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுமா?”
Ibisobanuro by'icyarabu:
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
26.204. நம்முடைய வேதனையையா இந்த நிராகரிப்பாளர்கள் அவசரமாக வேண்டினார்கள். அவர்கள் கூறினார்கள்: “நீர் எண்ணுவதுபோல வானத்தை துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்யும்வரை நாங்கள் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்.”
Ibisobanuro by'icyarabu:
اَفَرَءَیْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِیْنَ ۟ۙ
26.205. -தூதரே!- நீர் எனக்குக் கூறுவீராக, நீர் கொண்டுவந்ததன் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணிக்கும் இந்த நிராகரிப்பாளர்களை நாம் அருட்கொடைகளை சிறிது காலம்வரை அனுபவிக்கச் செய்து
Ibisobanuro by'icyarabu:
ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا یُوْعَدُوْنَ ۟ۙ
26.206. அந்த அருட்கொடைகளைப் பெற்று வாழ்ந்த காலத்துக்குப் பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை அவர்களிடம் வந்துவிட்டால்
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• كلما تعمَّق المسلم في اللغة العربية، كان أقدر على فهم القرآن.
1. ஒரு முஸ்லிம் அரபு மொழியில் பாண்டித்தியம் பெறும் அளவு அல்குர்ஆனைப் புரிவதற்கான ஆற்றலைப் பெறுவார்.

• الاحتجاج على المشركين بما عند المُنْصِفين من أهل الكتاب من الإقرار بأن القرآن من عند الله.
2. வேதக்காரர்களில் நியாயவான்கள் ‘குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறங்கியது’ என ஏற்றுக்கொள்வதை, இணைவைப்பாளர்களுக்கு எதிரான ஆதாரமாக முன்வைத்தல்.

• ما يناله الكفار من نعم الدنيا استدراج لا كرامة.
3. இவ்வுலகில் நிராகரிப்பாளர்கள் பெறும் இன்பங்கள் அவர்களைப் படிப்படியாக பிடிக்கும் பொருட்டே அன்றி அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு அல்ல.

 
Ibisobanuro by'amagambo Isura: Ashuarau
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga