Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Al A’ala   Umurongo:
وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ
87.11. நிராகரிப்பாளன் அறிவுரை பெறுவதை விட்டும் தூரமாகி விரண்டோடுகிறான். ஏனெனில் நிச்சயமாக அவன் நரகில் நுழைவதால் மறுமை நாளில் அவனே மக்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக இருப்பான்.
Ibisobanuro by'icyarabu:
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ
87.12. அவன் பெரும் நரக நெருப்பில் வீழ்வான். அதன் வெப்பத்தை என்றென்றும் அனுபவிப்பான்.
Ibisobanuro by'icyarabu:
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ
87.13. பின்னர் அவன் அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். அவன் அனுபவிக்கும் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவனால் மரணிக்கவும் முடியாது, நல்ல கண்ணியாமாக முறையில் உயிர் வாழவும் முடியாது.
Ibisobanuro by'icyarabu:
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
87.14. இணைவைப்பு மற்றும் பாவங்களைவிட்டும் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டவர் வேண்டியதைப் பெற்று வெற்றியடைந்து விட்டார்.
Ibisobanuro by'icyarabu:
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ
87.15. அவர் தம் இறைவன் அனுமதித்த நினைவூட்டல்களைக்கொண்டு அவனை நினைவுகூர்ந்தார், நிறைவேற்றுமாறு வேண்டப்பட்ட முறையில் தொழுகையை நிறைவேற்றினார்.
Ibisobanuro by'icyarabu:
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ
87.16. மாறாக மறுமைக்கும் இம்மைக்கும் மத்தியில் பாரிய ஏற்றத்தாழ்வு இருந்தும் நீங்கள் மறுமையை தேர்ந்தெடுப்பதை விட இவ்வுலக வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கிறீர்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ
87.17. இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள இன்பங்களை விட மறுமையே சிறந்தது, நிலையானது. ஏனெனில் மறுமையின் இன்பங்கள் நிலையானது, என்றும் முடிவடையாதது.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ
87.18. நிச்சயமாக நாம் உங்களுக்கு நினைவூட்டிய இக்கட்டளைகளும் செய்திகளும் அல்குர்ஆனுக்கு முன்னர் இறக்கப்பட்ட வேதங்களில் (ஆகமங்களில்) உள்ளவையாகும்.
Ibisobanuro by'icyarabu:
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
87.19. அவை இப்ராஹீம் மற்றும் மூஸாவின் மீது இறக்கப்பட்ட வேதங்களாகும் (ஆகமங்களாகும்).
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• أهمية تطهير النفس من الخبائث الظاهرة والباطنة.
1. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அழுக்குகளைவிட்டும் மனதைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• الاستدلال بالمخلوقات على وجود الخالق وعظمته.
2. படைப்பினங்கள் படைப்பாளனின் இருப்பிற்கும் வல்லமைக்குமான சான்றுகளாகும்.

• مهمة الداعية الدعوة، لا حمل الناس على الهداية؛ لأن الهداية بيد الله.
3. அழைப்பாளனின் கடமை எடுத்துரைப்பது மட்டுமே. மக்களை நேர்வழியில் செலுத்துவது அவன்மீதுள்ள கடமையல்ல. ஏனெனில் நிச்சயமாக நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது.

 
Ibisobanuro by'amagambo Isura: Al A’ala
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga