Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය වාක්‍යය: (24) පරිච්ඡේදය: යූනුස්
اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ— حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ— اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ— كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
10.24. நீங்கள் அனுபவிக்கக்கூடிய இவ்வுலக வாழ்க்கை விரைவாக அழிந்துவிடுவதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதன் மூலம் மனிதர்கள் உண்ணும் தானியங்கள், பழங்கள், விலங்குகள் உண்ணும் புற்பூண்டுகள் போன்ற பல்வேறு விதமான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. பூமி தன் அழகிய நிறத்தைப் பெற்று மழையின் மூலம் விளையும் பல்வேறு தாவரங்களின் மூலம் பொலிவுற்று, அவற்றின் உரிமையாளர்கள் அவற்றின் விளைச்சல்களை அறுவடைசெய்ய முடியும் என எண்ணிக்கொண்டிருக்கும் போது அவை அழிய வேண்டும் என்ற நம்முடைய விதி அவற்றுக்கு ஏற்படுகிறது. எனவே அண்மையில் தாவரங்களாலும், மரங்களாலும் செழிப்புற்று காணப்படாதது போன்று அறுவடை செய்யப்பட்டதாக அவற்றை ஆக்கி விடுகின்றோம். இவ்வுலகத்தின் நிலையையும் விரைவாக அது அழிந்துவிடுவதையும் நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியது போன்றே சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, படிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கு நாம் ஆதாரங்களையும் சான்றுகளையும் தெளிவுபடுத்துகிறோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• الله أسرع مكرًا بمن مكر بعباده المؤمنين.
1. நம்பிக்கை கொண்ட தன் அடியார்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் விரைவானவன்.

• بغي الإنسان عائد على نفسه ولا يضر إلا نفسه.
2. மனிதன் செய்யக்கூடிய அநியாயம் அவனுக்கே கேடாக அமையும். அவன் அதன் மூலம் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொள்கிறான்.

• بيان حقيقة الدنيا في سرعة انقضائها وزوالها، وما فيها من النعيم فهو فانٍ.
3. விரைவாக அழிந்து விடும் என்ற இவ்வுலகத்தைப் பற்றிய உண்மை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள இன்பங்களும் அழிபவையே.

• الجنة هي مستقر المؤمن؛ لما فيها من النعيم والسلامة من المصائب والهموم.
4. ஒரு முஃமினுடைய தங்குமிடம் சுவர்க்கமே. ஏனெனில் அங்குதான் இன்பங்களும், சோதனைகள் மற்றும் கவலைகள் ஆகியவற்றிலிருந்து ஈடேற்றமும் உள்ளது.

 
අර්ථ කථනය වාක්‍යය: (24) පරිච්ඡේදය: යූනුස්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න