ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය වාක්‍යය: (104) පරිච්ඡේදය: සූරා අල් බකරා
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
2.104. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேசும்படி அறிவுரை வழங்குகிறான்: நம்பிக்கையாளர்களே,எங்களைக் கவனியுங்கள் என்று பொருளுடைய "ராயினா "என்ற வார்த்தையைக் கூறாதீர்கள். ஏனெனில் யூதர்கள் இந்த வார்த்தையைத் திரித்து, முட்டாள் என்ற தவறான பொருளை மனதில் வைத்து நபியவர்களை அழைக்கின்றனர். எனவே அல்லாஹ் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறான். அதற்குப் பதிலாக "உன்ளுர்னா" என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு தன் அடியார்களுக்குக் கட்டளையிடுகிறான். இது எங்களைக் கவனியுங்கள் என்ற ஒரே பொருளையே தருவதுடன் ராஇனா என்பதைப் போன்று தவறான பொருளில் இதனைப் பயன்படுத்தவும் முடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• سوء أدب اليهود مع أنبياء الله حيث نسبوا إلى سليمان عليه السلام تعاطي السحر، فبرّأه الله منه، وأَكْذَبَهم في زعمهم.
1. யூதர்கள் அல்லாஹ்வின் தூதர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். சுலைமானோடு சூனியத்தை இணைத்தார்கள். அல்லாஹ் அதிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தினான்; அவர்களின் வாதத்தைப் பொய்யாக்கினான்.

• أن السحر له حقيقة وتأثير في العقول والأبدان، والساحر كافر، وحكمه القتل.
2. சூனியத்தின் மூலம் மனதிலும் உடலிலும் தாக்கம் ஏற்படும். சூனியம் செய்பவன் நிராகரிப்பாளன். அவனைக் கொல்வதே மார்க்கத்தீர்ப்பாகும்.

• لا يقع في ملك الله تعالى شيء من الخير والشر إلا بإذنه وعلمه تعالى.
3. அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் நன்மையோ, தீமையோ அவனுடைய அனுமதியின்றி நடைபெறாது.

• سد الذرائع من مقاصد الشريعة، فكل قول أو فعل يوهم أمورًا فاسدة يجب تجنبه والبعد عنه.
4. தவறான எண்ணத்தை உண்டாக்கக்கூடிய சொல்லோ செயலோ முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும். சந்தேகம் ஏற்படுத்தும் வழிகளை அடைப்பதும் ஷரீஅத்தின் நோக்கங்களில் உள்ளதாகும்.

• أن الفضل بيد الله تعالى وهو الذي يختص به من يشاء برحمته وحكمته.
5. அருள்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. தனது கருணை மற்றும் ஞானத்திற்கேற்ப தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான்.

 
අර්ථ කථනය වාක්‍යය: (104) පරිච්ඡේදය: සූරා අල් බකරා
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - පරිවර්තන පටුන

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

වසන්න