Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් මාඉදා   වාක්‍යය:
یَوْمَ یَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَیَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ— قَالُوْا لَا عِلْمَ لَنَا ؕ— اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
5.109. மனிதர்களே! மறுமைநாளை நினைவுகூருங்கள். அந்த நாளில் தூதர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டி, “நீங்கள் அனுப்பப்பட்ட உங்களின் சமூகங்கள் உங்களுக்கு என்ன பதில் கூறின” என்று கேட்பான். அவர்கள் பதிலை அல்லாஹ்விடம் ஒப்படைத்தவர்களாக, “எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் இறைவா! அனைத்து அறிவும் உன்னிடமே உள்ளன, மறைவானவை, அனைத்தையும் நீதான் நன்கறிந்தவன்” என்று கூறுவார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ— اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫— تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ— وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ— وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ— وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ— وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
5.110. அல்லாஹ் ஈஸாவிடம் பின்வருமாறு உரையாடிய சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக: “மர்யமின் மகன் ஈஸாவே, நான் உம்மை தந்தையின்றி படைத்தபோது உம்மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக. உமது தாய் மர்யமை அக்காலப் பெண்களை விட சிறப்பாக்கி அவர் மீது செய்த அருளையும் நினைவுகூர்வீராக! ஜிப்ரீலைக் கொண்டு நாம் உம்மை வலுப்படுத்தியபோது - நீர் கைக்குழந்தையாக இருந்த போது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து உரையாடினீர். மேலும் வாலிபப் பருவத்திலும் நான் உமக்கு வழங்கிய தூதை அவர்களுக்கு எடுத்துரைத்து உரையாடினீர். உமக்கு எழுதவும் மூஸாவுக்கு இறக்கிய தவ்ராத், உம்மீது இறக்கிய இன்ஜீல், மார்க்க சட்டங்களின் இரகசியங்களையும், பயன்களையும், நோக்கங்களையும் உமக்கு நான் கற்பித்ததும் நான் உமக்கு அளித்த அருட்கொடைகளே. மேலும் நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் மண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப்போல் செய்து பின்னர் அதில் ஊதியதும் அது பறவையாயிற்று. நீர் பிறவிக் குருடனை குருட்டுத்தன்மையிலிருந்து குணப்படுத்துகிறீர். தொழுநோயாளியையும் குணப்படுத்துகிறீர். அதனால் அவர் ஆரோக்கியமான தோல் உடையவராக மாறிவிடுகிறார். உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறீர். இவையனைத்தும் என் அனுமதியால் நடந்தவையாகும். நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது ‘ஈஸா கொண்டு வந்தது தெளிவான சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று கூறி அவற்றை நிராகரித்து இஸ்ராயீலின் மக்கள் உம்மைக் கொல்ல நாடியபோது நாம் உம்மை இஸ்ரவேலர்களிடமிருந்து காப்பாற்றியதாகும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاِذْ اَوْحَیْتُ اِلَی الْحَوَارِیّٖنَ اَنْ اٰمِنُوْا بِیْ وَبِرَسُوْلِیْ ۚ— قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ۟
5.111. நாம் உமக்கு அளித்த பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பார்ப்பீராக: நாம் உமக்கு உதவியாளர்களை ஏற்படுத்தினோம். அவர்களின் உள்ளத்தில் என்மீதும் உம்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று உள்ளுதிப்பை ஏற்படுத்தினோம். எனவே அவர்கள் கட்டுப்பட்டார்கள். உம்முடைய அழைப்புக்கு செவிசாய்த்தார்கள். “நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்கள் இறைவா, நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டவர்கள், அடிபணிந்தவர்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பீராக” என்று கூறினார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِذْ قَالَ الْحَوَارِیُّوْنَ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ هَلْ یَسْتَطِیْعُ رَبُّكَ اَنْ یُّنَزِّلَ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ— قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
5.112. ஹவாரிய்யீன்கள் பின்வருமாறு கூறியதை நினைத்துப் பார்ப்பீராக: “நீர் பிரார்த்தனை செய்தால், உமது இறைவன் வானத்திலிருந்து ஓர் உணவுத்தட்டை இறக்க முடியுமா?” அதற்கு ஈஸா, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அது சோதனையாக அமையலாம் என்பதனால் இதுபோன்ற கேள்விகளை விட்டுவிடுமாறும் அவர்களிடம் கூறினார். “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் வாழ்வாதாரம் வேண்டுவதில் உங்கள் இறைவனின் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள்” என்றும் அவர் கூறினார்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالُوْا نُرِیْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَیْهَا مِنَ الشّٰهِدِیْنَ ۟
5.113. ஹவாரிய்யீன்கள் ஈஸாவிடம் கூறினார்கள்: “நாங்கள் அந்த உணவுத்தட்டிலிருந்து உண்ணவும் அல்லாஹ்வின் முழுமையான ஆற்றலையும் நீர் அவனது தூதர் என்பதையும் எங்கள் உள்ளங்கள் உணரவும் விரும்புகின்றோம். நீர் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததில் உண்மையாளர் என்பதை உறுதியாக அறிந்து, அதனைக் காணாதவர்களிடம் சாட்சி கூறுபவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்.”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• إثبات جمع الله للخلق يوم القيامة جليلهم وحقيرهم.
1. மறுமை நாளில் அல்லாஹ் சிறிய பெரிய அனைத்துப் படைப்பினங்களையும் ஒன்றுதிரட்டுவான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

• إثبات بشرية المسيح عليه السلام وإثبات آياته الحسية من إحياء الموتى وإبراء الأكمه والأبرص التي أجراها الله على يديه.
2. ஈஸா(அலை) ஒரு மனிதர்தாம் என்பதையும் இறந்தவர்களை உயிர்ப்பித்தமை, பிறவிக் குருடனையையும் தொழுநோயாளியையும் குணப்படுத்தியமை ஆகிய வெளிரங்கமானஅத்தாட்சிகளை அல்லாஹ் அவர் மூலம் நிகழ்த்திக்காட்டினான் என்பதையும் நிரூபித்தல்

• بيان أن آيات الأنبياء تهدف لتثبيت الأتباع وإفحام المخالفين، وأنها ليست من تلقاء أنفسهم، بل تأتي بإذن الله تعالى.
3. இறைத்தூதர்களின் அற்புதங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களை உறுதிப்படுத்தவும் நிராகரிப்பவர்களை வாயடைப்பதற்காக வருபவையே அன்றி அவர்களின் புறத்திலிருந்து வருபவையல்ல. மாறாக அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே நடைபெறுகின்றன.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් මාඉදා
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න