Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අත් තීන්   වාක්‍යය:

அத்தீன்

සූරාවෙහි අරමුණු:
امتنان الله على الإنسان باستقامة فطرته وخلقته، وكمال الرسالة الخاتمة.
மனிதனின் நேர்த்தியான இயல்பு மற்றும் படைப்பு, இறுதி தூதின் பரிபூரணம் ஆகியவற்றின் மூலம் அவனுக்கு அல்லாஹ் அருள் புரிதல்

وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
95.1. அல்லாஹ் அத்தியின் மீதும் அது விளையும் இடத்தின் மீதும் சைத்தூனின் மீதும் ஈஸா அலை அவர்கள் அனுப்பப்பட்ட பலஸ்தீனில் அது விளையும் இடத்தின் மீதும் சத்தியம் செய்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَطُوْرِ سِیْنِیْنَ ۟ۙ
95.2. அவன் தன் நபி மூஸாவுடன் இரகசியமாகப் பேசிய சீனாய் மலையைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ
95.3. நபியவர்கள் அனுப்பப்பட்ட, அதன் உள்ளே நுழைபவர் பாதுகாப்பைப் பெறும் புனித பூமியான மக்காவைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ ۟ؗ
95.4. நாம் மனிதனை நேர்த்தியான முறையிலும் அழகிய தோற்றத்திலும் படைத்தோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَ ۟ۙ
95.5. பின்னர் உலகில் அவனை வயோதிபம் மற்றும் அதனால் ஏற்படும் புத்திக்கோளாறின்பால் திருப்பிவிட்டோம். எனவே இயல்பை சீரழித்து நரகிற்கு சென்றுவிட்டவன் அதன் மூலம் எவ்விதப் பயனும் பெறாததைப் போல் அவனும் தனது உடல் மூலம் எந்தப் பலனையும் அடையமுடியாது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟ؕ
95.6. ஆயினும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் வயோதிபத்தை அடைந்தாலும் நாம் அவர்களுக்கு சுவனம் என்னும் என்றும் முடிவுறாத நிலையான நன்மையை வழங்குவோம். ஏனெனில் அவர்கள் தமது இயல்புகளை பரிசுத்தப்படுத்தினர்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِ ۟ؕ
95.7. -மனிதனே!- அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் ஏராளமான சான்றுகளை நீ கண்ட பின்னரும் எது உன்னை கூலி கொடுக்கப்படும் நாளை பொய்ப்பிக்கத் தூண்டுகிறது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ ۟۠
95.8. அல்லாஹ் -கூலி கொடுக்கப்படும் நாளை மறுமையில் ஏற்படுத்தியதன் மூலம்- தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் மிகச்சிறந்த தீர்ப்பளிப்பாளன், நீதியாளன் இல்லையா? நன்மை செய்தவர்களுக்கு நற்கூலியும் தீமை செய்தவர்களுக்குத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்காமல் அவனது அடியார்களை அல்லாஹ் அப்படியே விட்டுவிடுவது அறிவுப்பூர்வமானதா என்ன?
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• رضا الله هو المقصد الأسمى.
அல்லாஹ் தனது நபியின் புகழை உயர்த்தியதன் மூலம் அவரை கண்ணிப்படுத்தல்

• أهمية القراءة والكتابة في الإسلام.
1. அல்லாஹ்வின் திருப்தியே உன்னத நோக்கமாகும்.

• خطر الغنى إذا جرّ إلى الكبر والبُعد عن الحق.
2. இஸ்லாத்தில் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

• النهي عن المعروف صفة من صفات الكفر.
3. கர்வம், சத்தியத்தை விட்டும் தூரமாதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் செல்வத்தின் விபரீதம்

• إكرام الله تعالى نبيه صلى الله عليه وسلم بأن رفع له ذكره.
4. நன்மையான செயல்களைவிட்டுத் தடுப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අත් තීන්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න