Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
65 : 19

رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖ ؕ— هَلْ تَعْلَمُ لَهٗ سَمِیًّا ۟۠

அவன்தான் வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன். ஆகவே, அவனை வணங்குவீராக! அவனை வணங்குவதில் பொறுமையாக இருப்பீராக! அவனுக்கு ஒப்பானவரை நீர் அறிவீரா! info
التفاسير:

external-link copy
66 : 19

وَیَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَیًّا ۟

“நான் மரணித்து விட்டால் உயிருள்ளவனாக (மீண்டும்) கண்டிப்பாக எழுப்பப்படுவேனா” என்று (மறுமையை நம்பாத) மனிதன் கூறுகிறான். info
التفاسير:

external-link copy
67 : 19

اَوَلَا یَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ یَكُ شَیْـًٔا ۟

மனிதன் சிந்திக்க வேண்டாமா! “முன்னர் நிச்சயமாக நாம் அவனைப் படைத்ததை.” (நாம் அவனைப் படைப்பதற்கு முன்பு) அவன் எந்த ஒரு பொருளாகவும் இருக்கவில்லையே! info
التفاسير:

external-link copy
68 : 19

فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ

உமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் எழுப்புவோம். பிறகு, நரகத்தை சுற்றி அவர்களை முழந்தாளிட்டவர்களாகக் கொண்டு வருவோம். info
التفاسير:

external-link copy
69 : 19

ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِیْعَةٍ اَیُّهُمْ اَشَدُّ عَلَی الرَّحْمٰنِ عِتِیًّا ۟ۚ

பிறகு ஒவ்வொரு கூட்டத்திலும் ரஹ்மானுக்கு பாவம் செய்வதில் கடுமையானவரை நாம் கழட்டி எடுப்போம். info
التفاسير:

external-link copy
70 : 19

ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِیْنَ هُمْ اَوْلٰی بِهَا صِلِیًّا ۟

பிறகு அதில் கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு மிகவும் தகுதியானவர்களை நாம் மிக அறிந்தவர்கள். info
التفاسير:

external-link copy
71 : 19

وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ— كَانَ عَلٰی رَبِّكَ حَتْمًا مَّقْضِیًّا ۟ۚ

உங்களில் (ஒவ்வொருவரும்) அதில் நுழையக்கூடியவராகவே தவிர வேறில்லை. (அது) உமது இறைவன் மீது முடிவு செய்யப்பட்ட தீர்ப்பாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
72 : 19

ثُمَّ نُنَجِّی الَّذِیْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِیْنَ فِیْهَا جِثِیًّا ۟

பிறகு, இறையச்சமுடையவர்களை நாம் (அதிலிருந்து) பாதுகாப்போம். அநியாயக்காரர்களை அதில் முழந்தாளிட்டவர்களாக விட்டுவிடுவோம். info
التفاسير:

external-link copy
73 : 19

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا ۙ— اَیُّ الْفَرِیْقَیْنِ خَیْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِیًّا ۟

அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு கூறுகின்றனர்: “இரு பிரிவினரில் யார் தங்குமிடத்தால் சிறந்தவர், சபையால் மிக அழகானவர்?” info
التفاسير:

external-link copy
74 : 19

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِﺋْﻴًﺎ ۟

அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் (இவர்களைவிட வீட்டு உபயோகப்) பொருட்களாலும் தோற்றத்தாலும் மிக அழகானவர்கள். info
التفاسير:

external-link copy
75 : 19

قُلْ مَنْ كَانَ فِی الضَّلٰلَةِ فَلْیَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ۬— حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ۬— فَسَیَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ۟

கூறுவீராக! (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கின்றாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை -ஒன்று வேதனையை அல்லது மறுமையை- அவர்கள் பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள். info
التفاسير:

external-link copy
76 : 19

وَیَزِیْدُ اللّٰهُ الَّذِیْنَ اهْتَدَوْا هُدًی ؕ— وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ مَّرَدًّا ۟

நேர்வழி நடப்போருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகப்படுத்துவான். உங்கள் இறைவனிடம் நிரந்தரமான நன்மைகள்தான் நற்கூலியால் மிகச் சிறந்ததும் முடிவால் மிகச் சிறந்ததும் ஆகும். info
التفاسير: