Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: గాఫిర్   వచనం:

ஆஃபிர்

ఈ సూరహ్ (అధ్యాయం) యొక్క ప్రయోజనాలు:
بيان حال المجادلين في آيات الله، والرد عليهم.
அல்லாஹ்வின் வசனங்களில் விதண்டாவதம் செய்வோரின் நிலையை விளக்குதலும், அவர்களுக்கு மறுப்பளித்தலும்

حٰمٓ ۟ۚ
40.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ۙ
யாராலும் மிகைக்க முடியாத தனது அடியார்களின் நலவுகளை நன்கறிந்த அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆன் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்டுள்ளது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِیْدِ الْعِقَابِ ذِی الطَّوْلِ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— اِلَیْهِ الْمَصِیْرُ ۟
40.3. பாவம் புரிபவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன்; தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடியவன்; தனது பாவங்களை விட்டு மீளாதவர்களைக் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்; பெரும் நலன் புரியக்கூடியவனும் அருளாளனுமாவான். அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. மறுமை நாளில் அடியார்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் அவர்களுக்குரிய கூலியை வழங்கிடுவான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
مَا یُجَادِلُ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ اِلَّا الَّذِیْنَ كَفَرُوْا فَلَا یَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِی الْبِلَادِ ۟
40.4. அறிவு மழுங்கடிக்கப்பட்டதனால் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள்தாம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதையும் அவனுடைய தூதர்களின் நம்பகத்தன்மையையும் அறிவிக்கும் அவனுடைய சான்றுகளில் தர்க்கம் புரிகிறார்கள். அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர். அவர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்வும் இன்பங்களும் உம்மை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் அவர்களை விட்டுப்பிடிப்பதும், அவர்களுக்கு செய்யப்படும் சூழ்ச்சியுமேயாகும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪— وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫— فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
40.5. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகமும் அவர்களுக்குப் பின் வந்த கூட்டத்தினரும் பொய்ப்பித்தார்கள். ஆத் சமூகம், ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், மத்யன்வாசிகள், ஃபிர்அவ்னின் சமூகம் ஆகியோரும் பொய்ப்பித்தார்கள். அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களிடம் வந்த தூதரைப் பிடித்து கொலைசெய்யவே நாடினார்கள். சத்தியத்தை அழிப்பதற்காக தங்களிடமுள்ள அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் செய்தார்கள். நான் அந்த சமூகங்கள் அனைத்தையும் தண்டித்தேன். நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அது கடுமையான தண்டனையாக இருந்தது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِ ۟
40.6. -தூதரே!- பொய்ப்பித்த அந்த சமூகங்களின் மீது அல்லாஹ் அழிவை விதித்தது போன்று நிராகரிப்பாளர்கள் நரகவாசிகளாவர் என்ற உம் இறைவனின் வாக்கும் அவர்கள் விடயத்தில் உறுதியாகி விட்டது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَلَّذِیْنَ یَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیُؤْمِنُوْنَ بِهٖ وَیَسْتَغْفِرُوْنَ لِلَّذِیْنَ اٰمَنُوْا ۚ— رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَیْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِیْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِیْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
40.7. -தூதரே!- உம் இறைவனின் அர்ஷைச் சுமப்பவர்களும் அதனைச் சூழ உள்ளவர்களும் அவனுக்கு பொருத்தமில்லாதவற்றை விட்டுவிட்டு அவனுடைய தூய்மையைப் பறைசாற்றுகிறார்கள்; அவன்மீது நம்பிக்கைகொள்கிறார்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருகிறார்கள். “எங்கள் இறைவா! உன் ஞானமும் கருணையும் அனைத்தையும் வியாபித்துள்ளது. தங்களின் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரி உனது மார்க்கத்தைப் பின்பற்றுவோரை மன்னிப்பாயாக. நரக நெருப்பு அவர்களைத் தீண்டாமல் அவர்களைக் காத்தருள்வாயாக. என்று தங்களது பிரார்த்தனையில் கூறுகிறார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• الجمع بين الترغيب في رحمة الله، والترهيب من شدة عقابه: مسلك حسن.
1. அல்லாஹ்வின் கருணையில் ஆர்வமூட்டுதல், அவனுடைய தண்டனையின் கடுமையை விட்டும் எச்சரித்தல் ஆகிய இரண்டையும் ஒன்றுசேர மேற்கொள்வது சிறந்த வழிமுறையாகும்.

• الثناء على الله بتوحيده والتسبيح بحمده أدب من آداب الدعاء.
2.அல்லாஹ்வின் ஏகத்துவத்தைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவனது புகழைக் கொண்டு துதிப்பது பிரார்த்தனையின் ஓர் ஒழுங்காகும்.

• كرامة المؤمن عند الله؛ حيث سخر له الملائكة يستغفرون له.
3. அல்லாஹ்விடத்தில் நம்பிக்கையாளனுக்குள்ள கண்ணியத்தினால், வானவர்களை அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதில் அல்லாஹ் ஈடுபடுத்தியு்ளளான்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: గాఫిర్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం