Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: గాఫిర్   వచనం:
وَلَقَدْ جَآءَكُمْ یُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَیِّنٰتِ فَمَا زِلْتُمْ فِیْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ— حَتّٰۤی اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ یَّبْعَثَ اللّٰهُ مِنْ بَعْدِهٖ رَسُوْلًا ؕ— كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابُ ۟ۚۖ
40.34.மூஸாவுக்கு முன்னர் யூசுஃப் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டுவந்தார். அவர் கொண்டுவந்தவற்றைக்குறித்து நீங்கள் சந்தேகத்திலேயே, பொய்ப்பிப்பதிலேயே இருந்தீர்கள். அவர் மரணித்த பிறகு உங்களின் சந்தேகம் இன்னும் அதிகமாகிவிட்டது. “அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்தத் தூதரையும் அனுப்பமாட்டான்” என்று நீங்கள் கூறினீர்கள். சத்தியத்தை விட்டும் நீங்கள் வழிகெட்டது போன்றே அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறக்கூடிய, அவன் ஒருவனே என்பதில் சந்தேகம் கொள்ளக்கூடிய ஒவ்வொருவரையும் வழிகெடுக்கிறான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
١لَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ؕ— كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ— كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ۟
40.35. அவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமலேயே அல்லாஹ்வின் சான்றுகளை பொய்யாக்குவதற்காக அவற்றில் வாதம் புரிகிறார்கள். அவர்களின் வாதம் அல்லாஹ்விடத்திலும் அவனையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுப்பிற்குரியதாகும். நம் சான்றுகளைப் பொய்யாக்குவதற்காக வாதம் புரியும் இவர்களின் உள்ளங்களில் நாம் முத்திரையிட்டது போன்றே சத்தியத்தை விட்டு கர்வம், ஆணவம்கொள்ளும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் முத்திரையிட்டு விடுகிறோம். எனவே அவர்களால் சரி, நன்மையின்பால் நேர்வழிபெற முடியாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَقَالَ فِرْعَوْنُ یٰهَامٰنُ ابْنِ لِیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَبْلُغُ الْاَسْبَابَ ۟ۙ
40.36. ஃபிர்அவன் தன்னுடைய அமைச்சர் ஹாமானுக்குக் கூறினான்: “ஹாமானே! நான் வானங்களுக்கான பாதைகளை அடையும்பொருட்டு எனக்காக உயரமான ஒரு கட்டடத்தை எழுப்புவீராக,
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی وَاِنِّیْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ— وَكَذٰلِكَ زُیِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِیْلِ ؕ— وَمَا كَیْدُ فِرْعَوْنَ اِلَّا فِیْ تَبَابٍ ۟۠
40.37. அவனின்பால் சென்றடையக்கூடிய வானத்தின் வாயில்கள் மூலம் அவனை அடைந்து வணங்குவதற்குத் தகுதியான இறைவன் என்று மூஸா கருதும் அந்த இறைவனை நான் காண்பதற்காக. நிச்சயமாக நான் மூஸா வாதிடுவதில் அவர் பொய்யர் என்றே கருதுகிறேன்.” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டது. எனவே தான் ஹாமானிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டான். அவன் சத்திய வழியை விட்டும் அசத்திய வழிகளின் பக்கம் திருப்பப்பட்டான். -தன்னிடம் உள்ள அசத்தியத்தை மேலோங்கச் செய்யவும் மூஸா கொண்டுவந்த சத்தியத்தை பொய் எனக் காட்டவும்- ஃபிர்அவ்ன் செய்த சூழ்ச்சி தோல்வியடையக் கூடியதே. ஏனெனில் நிச்சயமாக அதன் முடிவு ஏமாற்றமும் தோல்வி மிக்க முயற்சியும், முடிவடையாத துர்பாக்கியமுமே.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِیْلَ الرَّشَادِ ۟ۚ
40.38. ஃபிர்அவ்னின் கூட்டத்தைச் சேர்ந்த நம்பிக்கைகொண்ட அந்த மனிதர் தன் சமூகத்திற்கு அறிவுரை வழங்கியவராக, அவர்களுக்கு சத்தியப்பாதையைக் காட்டியவராகக் கூறினார்: “என் சமூகமே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு சரியான, சத்தியத்தின்பால் கொண்டு செல்லும் நேரான வழியைக் காட்டுகிறேன்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَا مَتَاعٌ ؗ— وَّاِنَّ الْاٰخِرَةَ هِیَ دَارُ الْقَرَارِ ۟
40.39. என் சமூகமே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய அற்ப இன்பங்கள்தாம். அதிலுள்ள அழிந்து விடும் இன்பங்கள் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். திட்டமாக மறுமையின் வீடுதான் என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களை உள்ளடக்கியுள்ள நிலையான தங்குமிடமான வீடாகும். அதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படுங்கள். மறுமைக்காகச் செயற்படுவதை விட்டுவிட்டு உங்கள் உலக வாழ்கையில் மூழ்கிவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
مَنْ عَمِلَ سَیِّئَةً فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا ۚ— وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ یُرْزَقُوْنَ فِیْهَا بِغَیْرِ حِسَابٍ ۟
40.40. யார் ஒரு தீய செயல் செய்வாரோ அவர் அந்த செயலுக்கேற்பவே தண்டிக்கப்படுவார். அதற்கு அதிகமாக அவர் தண்டிக்கப்படமாட்டார். எவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக நற்செயல் புரிவாரோ அவர் ஆணாயினும் பெண்ணாயினும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் அத்தகைய புகழுக்குரிய பண்புகளை உடையவர்கள்தாம் மறுமை நாளில் சுவனத்தில் நுழைவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தில் வைத்திருக்கக்கூடிய என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளை கணக்கின்றி வழங்கிடுவான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• الجدال لإبطال الحق وإحقاق الباطل خصلة ذميمة، وهي من صفات أهل الضلال.
1. சத்தியத்தை அசத்தியம் எனக் காட்டவும் அசத்தியத்தை சத்தியம் எனக் காட்டவும் வாதம் செய்வது மோசமான பண்பாகும். இது வழிகேடர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

• التكبر مانع من الهداية إلى الحق.
2. கர்வம் சத்தியத்தின்பால் நேர்வழிபெறுவதற்கு தடையாக இருக்கின்றது.

• إخفاق حيل الكفار ومكرهم لإبطال الحق.
3. சத்தியத்தை முறியடிப்பதற்காக நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும்.

• وجوب الاستعداد للآخرة، وعدم الانشغال عنها بالدنيا.
4. உலக இன்பங்களில் மூழ்கிவிடாமல் மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வது கட்டாயமாகும்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: గాఫిర్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం