Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: Az-Zumar   อายะฮ์:
وَنُفِخَ فِی الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ— ثُمَّ نُفِخَ فِیْهِ اُخْرٰی فَاِذَا هُمْ قِیَامٌ یَّنْظُرُوْنَ ۟
39.68. சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவர் சூர் ஊதும் நாளில், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அனைவரும் மரணித்துவிடுவார்கள். மரணிக்கமாட்டார்கள் என அல்லாஹ் நாடியவர்களைத்தவிர.) பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்காக இரண்டாவது முறையாக வானவர் சூர் ஊதுவார். அப்போது உயிர்பெற்றவர்கள் அனைவரும் அல்லாஹ் தங்களை என்ன செய்யப் போகிறான் என்பதை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِایْٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
39.69. அடியார்களிடையே தீர்ப்பளிக்க கண்ணியமிக்க இறைவன் தோன்றியதால் பூமி பிரகாசிக்கும். மக்களின் செயல் பதிவேடுகள் விரித்து வைக்கப்படும். தூதர்களும் அவர்களுக்காக அவர்களின் சமூகங்களுக்கு எதிராகச் சாட்சி கூறுவதற்கு முஹம்மதின் சமூகமும் கொண்டுவரப்படுவார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவரிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அந்நாளில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது. மனிதனுக்கு தீமைகள் அதிகரிக்கப்படாது. நன்மைகளும் குறைவடையாது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا یَفْعَلُوْنَ ۟۠
39.70. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் முழுமையாக கூலியை பூரணப்படுத்துவான். அவர் நற்செயல்களைச் செய்தாலும் அல்லது தீய செயல்களைச் செய்தாலும் சரியே. அவர்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். நன்மையோ, தீமையோ அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இன்றைய தினம் அவன் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி கொடுப்பான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ— قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟
39.71. வானவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தவர்களை இழிவடைந்த நிலையில் கூட்டம் கூட்டமாக நரகத்தில் இழுத்து வருவார்கள். அவர்கள் நரகத்தின் அருகில் வந்தவுடன் அவர்களுக்காக நரகத்துக்கு பொறுப்பாக்கப்பட்ட வானவ காவலர்கள் அதன் வாயில்களைத் திறப்பார்கள். வானவர்கள் அவர்களிடம் கண்டிக்கும் தோரணையில் கேட்பார்கள்: “உங்கள் இனத்திலிருந்தே தமக்கு இறக்கப்பட்ட உங்கள் இறைவனின் வசனங்களை எடுத்துரைத்து, கடுமையான வேதனையுடைய மறுமையின் சந்திப்பைக் குறித்து உங்களுக்கு எச்சரிக்கும் தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?” நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு எதிராக ஒத்துக் கொண்டவர்களாக கூறுவார்கள்: “ஆம். அவை அனைத்தும் இடம்பெற்றன. ஆயினும் நிராகரிப்பாளர்களின் மீது வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டது. நாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
قِیْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
39.72. அவர்களை இழிவுபடுத்தும் விதமாக, இறையருளை விட்டும், நரகிலிருந்து வெளியேறுவதை விட்டும் நிராசை ஏற்படுத்தும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “நரகத்தின் வாயில்களில் என்றும் நிரந்தரமாக நுழைந்துவிடுங்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கர்வம் கொண்டவர்களின் தங்குமிடம் எத்துணை மோசமானது!”
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَسِیْقَ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَی الْجَنَّةِ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَیْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِیْنَ ۟
39.73. தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிய நம்பிக்கையாளர்களை கண்ணியப்படுத்தும் விதமாக வானவர்கள் சுவனத்தின்பால் கூட்டம் கூட்டமாக மிருதுவாக அழைத்துவருவார்கள். அவர்கள் அதன் அருகில் வந்தவுடன் அவர்களுக்காக அதன் கதவுகள் திறக்கப்படும். அதற்கு பொறுப்பாக்கப்பட்ட வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் நீங்கள் வெறுக்கும் ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் உங்களுக்கு பாதுகாப்பு உண்டாகட்டும். உங்களின் உள்ளங்களும் செயல்களும் சிறந்ததாகி விட்டன. சுவனத்தில் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுங்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَیْثُ نَشَآءُ ۚ— فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟
39.74. நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் நுழையும் போது கூறுவார்கள்: “தன் தூதர்களின் மூலம் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான் என்று வாக்களித்தான். எங்களை சுவனத்தின் பூமியில் வாரிசுகளாக ஆக்கினான். இங்கு நாங்கள் விரும்பிய இடத்தில் தங்கிக்கொள்வோம். தங்கள் இறைவனின் திருப்தியை நாடி நற்செயல்களில் ஈடுபடுவோரின் கூலி எத்துணை சிறப்பானது!
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• ثبوت نفختي الصور.
இரு முறை ஸுர் ஊதப்படும் என்பது நிரூபிக்கப்படல்

• بيان الإهانة التي يتلقاها الكفار، والإكرام الذي يُسْتَقبل به المؤمنون.
2. நிராகரிப்பாளர்கள் எதிர்நோக்கும் அவமானத்தையும் நம்பிக்கையாளர்கள் எதிர்நோக்கும் மரியாதையையும் தெளிவுபடுத்தல்.

• ثبوت خلود الكفار في الجحيم، وخلود المؤمنين في النعيم.
3. நிராகரிப்பாளர்கள் நரத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். நம்பிக்கையாளர்கள் இன்பங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்பது உறுதியாகிறது.

• طيب العمل يورث طيب الجزاء.
4. நற்செயல் நற்கூலியைப் பெற்றுத் தருகிறது.

 
แปลความหมาย​ สูเราะฮ์: Az-Zumar
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด