Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: Al-Furqān   Ayah:
وَالَّذِیْنَ لَا یَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا یَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَلَا یَزْنُوْنَ ۚؕ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ یَلْقَ اَثَامًا ۟ۙ
25.68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை வணங்க மாட்டார்கள். அவன் தடைசெய்த உயிரை அநியாயமாகக் கொல்ல மாட்டார்கள். ஆனால் கொலைகாரன், மதம் மாறியவன், திருமணமான பின் விபச்சாரத்தில் ஈடுபட்டவன் ஆகிய அல்லாஹ் கொலைசெய்யுமாறு அனுமதித்தோரைத் தவிர. மேலும் விபச்சாரம் புரிய மாட்டார்கள். இந்த பெரும் பாவங்களை யார் புரிவாரோ அவர் மறுமை நாளில் தான் செய்த பாவத்திற்கான தண்டனையைப் பெறுவார்.
Ang mga Tafsir na Arabe:
یُّضٰعَفْ لَهُ الْعَذَابُ یَوْمَ الْقِیٰمَةِ وَیَخْلُدْ فِیْهٖ مُهَانًا ۟ۗۖ
25.69. மறுமை நாளில் அவனுக்குப் பன்மடங்கு வேதனையளிக்கப்படும். அவன் இழிவடைந்தவனாக நிரந்தரமாக வேதனையில் வீழ்ந்துகிடப்பான்.
Ang mga Tafsir na Arabe:
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
25.70. ஆயினும் யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி நம்பிக்கை கொண்டு பாவமன்னிப்பை உண்மைப்படுத்தும் விதமாக நற்செயல் புரிகிறாரோ அவர்கள் செய்த தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிடுவான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Ang mga Tafsir na Arabe:
وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوْبُ اِلَی اللّٰهِ مَتَابًا ۟
25.71. யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி அதனை உண்மைப்படுத்தும் விதத்தில் அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகுகிறார்களோ நிச்சயமாக அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவமன்னிப்பு கோரிக்கையாகும்.
Ang mga Tafsir na Arabe:
وَالَّذِیْنَ لَا یَشْهَدُوْنَ الزُّوْرَ ۙ— وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ۟
25.72. அவர்கள் பாவம் நடைபெறும் இடங்கள், தடைசெய்யப்பட்ட கேளிக்கைகள் போன்ற கெட்டவைகளுக்கு செல்ல மாட்டார்கள். வீணான வார்த்தைகள், செயற்பாடுகள் ஆகியவற்றைக் கடந்துசெல்ல நேரிட்டால் அதில் கலந்துகொள்ளாமல் தூய்மையாக அவற்றைக் கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.
Ang mga Tafsir na Arabe:
وَالَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَمْ یَخِرُّوْا عَلَیْهَا صُمًّا وَّعُمْیَانًا ۟
25.73. அவர்களிடம் செவியேற்கக்கூடிய, பார்க்கக்கூடிய அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு நினைவூட்டப்பட்டால் அவற்றைச் செவியேற்காத காது செவிடர்களாகவும் காணாத குருடர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
Ang mga Tafsir na Arabe:
وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ۟
25.74. அவர்கள் தங்கள் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியர்கள் மற்றும் குழந்தைகள் மூலம், தனது இறையச்சம் சத்தியத்தில் உறுதி ஆகியவற்றினால், எங்களுக்கு கண்குளிர்ச்சியை தந்தருள்வாயாக. எங்களை இறையச்சமுடையோருக்கு முன்னுதாரணமான சத்தியத்தின் தலைவர்களாக ஆக்குவாயாக.
Ang mga Tafsir na Arabe:
اُولٰٓىِٕكَ یُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَیُلَقَّوْنَ فِیْهَا تَحِیَّةً وَّسَلٰمًا ۟ۙ
25.75. இந்த பண்புகளை உடையவர்கள் பொறுமையாக இருந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டதனால் உன்னதமான சுவனத்தில் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌசில் உயர்ந்த அறைகளைப் பெறுவார்கள். வானவர்கள் அவர்களை வாழ்த்து, சலாம் கூறி வரவேற்பார்கள். அவர்கள் அனைத்து வகையான தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் பெறுவார்கள்.
Ang mga Tafsir na Arabe:
خٰلِدِیْنَ فِیْهَا ؕ— حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟
25.76. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் சிறந்த தங்குமிடத்தையும் இருப்பிடத்தையும் பெற்றிருப்பார்கள்.
Ang mga Tafsir na Arabe:
قُلْ مَا یَعْبَؤُا بِكُمْ رَبِّیْ لَوْلَا دُعَآؤُكُمْ ۚ— فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ یَكُوْنُ لِزَامًا ۟۠
25.77. -தூதரே!- நிராகரிப்பில் பிடிவாதமாக இருக்கும் நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் உங்கள் வழிபாட்டினால் தனக்கு பயன் கிடைக்கிறது என்பதற்காக உங்களைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையினாலும் வணக்கத்தினாலும் அவனை அழைக்கும் அடியார்கள் இல்லையெனில் அவன் உங்களைப் பொருட்படுத்தியிருக்கமாட்டான். நீங்கள் தூதரை அவர் தன் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததில் பொய்பித்து விட்டீர்கள். பொய்ப்பித்ததற்கான கூலி உங்களுடனே இருக்கும்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• من صفات عباد الرحمن: البعد عن الشرك، وتجنُّب قتل الأنفس بغير حق، والبعد عن الزنى، والبعد عن الباطل، والاعتبار بآيات الله، والدعاء.
1. அளவிலாக் கருணையாளனுடைய அடியார்களின் பண்புகள்: அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குவதை, விபச்சாரம் செய்வதை விட்டும், அசத்தியத்தில் இருந்தும் தூரமாக இருப்பார்கள், உரிமை இல்லாமல் யாரையும் கொல்லாமல் தவிர்ந்து இருப்பார்கள், அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு படிப்பினை பெறுவார்கள், பிரார்த்தனை புரிவார்கள்.

• التوبة النصوح تقتضي ترك المعصية وفعل الطاعة.
2. ؤண்மையான திருத்தம் பாவங்களை விட்டுவிட்டு வணக்க வழிபாடுகளைச் செய்யத் தூண்டுவதாக இருக்கும்.

• الصبر سبب في دخول الفردوس الأعلى من الجنة.
3. பொறுமை மனிதன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைவதற்குக் காரணமாக இருக்கின்றது.

• غنى الله عن إيمان الكفار.
4. நிராகரிப்பாளர்களின் நம்பிக்கையைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

 
Salin ng mga Kahulugan Surah: Al-Furqān
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara