Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: Al-Furqān   Ayah:
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟
25.56. -தூதரே!- அல்லாஹ்வை வழிப்பட்டு நம்பிக்கைகொண்டு நற்செயல் புரியக்கூடியவர்களுக்கு நற்செய்திகூறக்கூடியவராகவும் நிராகரிப்பு மற்றும் பாவங்களின் மூலம் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியவராகவுமே நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.
Ang mga Tafsir na Arabe:
قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَآءَ اَنْ یَّتَّخِذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
25.57. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும் உங்களில் செலவு செய்து அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புபவர்கள் செய்துகொள்ளட்டும்.”
Ang mga Tafsir na Arabe:
وَتَوَكَّلْ عَلَی الْحَیِّ الَّذِیْ لَا یَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ ؕ— وَكَفٰی بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرَا ۟
25.58. -தூதரே!- உம்முடைய எல்லா விவகாரங்களிலும் நித்திய ஜீவனும் என்றும் நிலைத்திருப்பவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிவதற்குப் போதுமானவன். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Ang mga Tafsir na Arabe:
١لَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۛۚ— اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِیْرًا ۟
25.59. அவனே வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். அவன் அளவிலாக் கருணையாளன்.-தூதரே!- நன்கு அறிந்தவனிடம் அதனைக் கேட்பீராக. அவன்தான் ஒவ்வொரு பொருளையும் அறிந்த அல்லாஹ். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Ang mga Tafsir na Arabe:
وَاِذَا قِیْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ ۚ— قَالُوْا وَمَا الرَّحْمٰنُ ۗ— اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۟
25.60. “அளவிலாக் கருணையாளனுக்குச் சிரம்பணியுங்கள்” என்று நிராகரிப்பாளர்களிடம் கூறப்பட்டால், “நாங்கள் அளவிலாக் கருணையாளனுக்குச் சிரம்பணிய மாட்டோம். அளவிலாக் கருணையாளன் என்றால் யார்? நாங்கள் அவனை அறிய மாட்டோம், அவனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். நீர் கூறுபவருக்கெல்லாம் எமக்குத் தெரியாவிட்டாலும் நாங்கள் சிரம்பணிய வேண்டுமா என்ன?” என்று கேட்கிறார்கள். சிரம்பணியுமாறு அவன் அவர்களுக்கு கட்டளையிட்டமை அவர்களை அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதை விட்டும் மென்மேலும் அப்புறப்படுத்திவிட்டது.
Ang mga Tafsir na Arabe:
تَبٰرَكَ الَّذِیْ جَعَلَ فِی السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِیْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِیْرًا ۟
25.61. அவன் பெரும் பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நகரும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நிலைகளை ஏற்படுத்தினான். ஒளிரும் சூரியனையும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பைப் பெற்று பூமியை ஒளிரச் செய்யும் சந்திரனையும் வானில் ஏற்படுத்தினான்.
Ang mga Tafsir na Arabe:
وَهُوَ الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا ۟
25.62. அல்லாஹ்வே இரவையும் பகலையும் ஒன்றன்பின் ஒன்றாக வரக்கூடியதாக ஆக்கியுள்ளான். அது அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு படிப்பினை பெற்று நேர்வழியடையவும் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தவும் விரும்புவர்களுக்காகத்தான்.
Ang mga Tafsir na Arabe:
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِیْنَ یَمْشُوْنَ عَلَی الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ۟
25.63. நம்பிக்கைகொண்ட அளவிலாக் கருணையாளனின் அடியார்கள் பூமியில் கண்ணியமாகவும் பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் உரையாடினால் அவர்களைப் போன்று எதிர்கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களுடன் அறியாமையுடன் நடந்துகொள்ளாமல் நல்ல வார்த்தையைக் கூறுவார்கள்.
Ang mga Tafsir na Arabe:
وَالَّذِیْنَ یَبِیْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِیَامًا ۟
25.64. அவர்கள் தங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாவும் அல்லாஹ்வுக்ககாக நின்று தொழுதவர்களாவும் இரவுகளை கழிப்பார்கள்.
Ang mga Tafsir na Arabe:
وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖۗ— اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۟ۗۖ
25.65. அவர்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றுவாயாக. நிச்சயமாக நரக வேதனை நிராகரித்த நிலையில் மரணித்தவர்களோடு நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளக்கூடியது.
Ang mga Tafsir na Arabe:
اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟
25.66. நிச்சயமாக அதில் தங்குவோருக்கு அது மோசமான இருப்பிடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கின்றது.
Ang mga Tafsir na Arabe:
وَالَّذِیْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ یُسْرِفُوْا وَلَمْ یَقْتُرُوْا وَكَانَ بَیْنَ ذٰلِكَ قَوَامًا ۟
25.67. அவர்கள் தங்களின் செல்வங்களைச் செலவழித்தால் வீண்விரயம் செய்யும் அளவுக்கு செல்லமாட்டார்கள். செலவளிப்பது கடமையான தனக்கும் ஏனையோருக்கும் செலவளிப்பதில் கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அவர்களின் செலவு அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நடுநிலையானதாக அமையும்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• الداعي إلى الله لا يطلب الجزاء من الناس.
1. அல்லாஹ்வின்பால் அழைப்பவர் மக்களிடம் கூலி கேட்கமாட்டார்.

• ثبوت صفة الاستواء لله بما يليق به سبحانه وتعالى.
2. அல்லாஹ் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் என்ற பண்பு உறுதியாகிறது.

• أن الرحمن اسم من أسماء الله لا يشاركه فيه أحد قط، دال على صفة من صفاته وهي الرحمة.
3. நிச்சயமாக அர்ரஹ்மான் அளவிலாக் கருணையாளன், யாரும் அதில் கூட்டு சேராத அல்லாஹ்வின பெயர்களில் ஒன்றாகும். இது அவனுடைய பண்புகளில் ஒன்றான கருணை என்னும் பண்பை அறிவிக்கிறது.

• إعانة العبد بتعاقب الليل والنهار على تدارُكِ ما فاتَهُ من الطاعة في أحدهما.
4. இரவு, பகல் ஒன்றன் பின் ஒன்றாக வருவதன் மூலம் இரண்டில் ஒன்றில் விடுபட்ட வணக்கத்தை மற்றதில் செய்வதற்கு அடியானுக்கு உதவுதல்.

• من صفات عباد الرحمن التواضع والحلم، وطاعة الله عند غفلة الناس، والخوف من الله، والتزام التوسط في الإنفاق وفي غيره من الأمور.
5. பணிவு, நிதானம், மக்கள் மறதியில் இருக்கும் போது வணக்கத்தில் ஈடுபடுதல், அல்லாஹ்வுக்கு அஞ்சுதல், செலவுசெய்வதில் இன்னபிற விஷயங்களில் நடுநிலையைக் கையாளுதல் ஆகிய பண்புகள் அளவிலாக் கருணையாளனுடைய அடியார்களின் பண்புகளாகும்.

 
Salin ng mga Kahulugan Surah: Al-Furqān
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara