Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: مائىدە   ئايەت:
وَمِنَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذْنَا مِیْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۪— فَاَغْرَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ— وَسَوْفَ یُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
5.14. யூதர்களிடம் உறுதியான வாக்குறுதியைப் பெற்றதைப் போன்றே தங்களைத் தாங்களே தூய்மையானவர்கள் என்று கூறிக் கொண்ட ஈஸாவைப் பின்பற்றியவர்களிடமும் உறுதியான வாக்குறுதி வாங்கினோம். யூதர்கள் செய்ததைப் போன்றே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரையில் ஒரு பகுதியின்படி செயல்படுவதை இவர்களும் விட்டுவிட்டார்கள். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்தினோம். அவர்கள் ஒருவர் மற்றவரை காஃபிர் என்று கூறி சண்டையிடக்கூடியவர்களாகி விட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ كَثِیْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ؕ۬— قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِیْنٌ ۟ۙ
5.15. தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களே! நம்முடைய தூதர் முஹம்மது உங்களிடம் வந்துள்ளார்; நீங்கள் மறைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலுள்ள பெரும்பாலான விஷயங்களை அவர் தெளிவுபடுத்துகிறார்; உங்களை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லாத பல விஷயங்களை அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்; அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் என்னும் வேதம் உங்களிடம் வந்துள்ளது. அது ஒளிரும் பிரகாசமாகவும் மக்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக விவகாரங்களுக்குத் தேவையானவற்றைத் தெளிவுபடுத்தும் வேதமாகவும் இருக்கின்றது.
ئەرەپچە تەپسىرلەر:
یَّهْدِیْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَیُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ بِاِذْنِهٖ وَیَهْدِیْهِمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
5.16. அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் தனக்கு விருப்பமான ஈமான் மற்றும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தனது வேதனையிலிருந்து ஈடேற்றம் பெறும் வழிகளைக் காட்டுகிறான். அது சுவனத்தின்பால் கொண்டு சேர்க்கக்கூடிய வழிகளாகும். நிராகரிப்பு, தீமை ஆகிய இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவனை நம்புதல், அவனுக்குக் கீழ்படிதல் ஆகிய ஒளியின் பக்கம் செல்வதற்கு அனுமதிக்கிறான். மேலும் இஸ்லாம் என்னும் நேரான பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான்.
ئەرەپچە تەپسىرلەر:
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ— قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ— وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ— یَخْلُقُ مَا یَشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
5.17. ‘மர்யமின் மகன் ஈஸாதான் இறைவன்’ என்று கூறிய கிருஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “ஈஸாவையும் அவருடைய அன்னையையும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடிவிட்டால் யாரால் அதனைத் தடுக்க முடியும்? அவனைத் தடுப்பவர் யாருமில்லை என்பதே அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, மர்யமின் மகன் ஈஸாவும் அவரது தாய் மர்யமும் பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வின் படைப்புகள்தாம் என்பதற்கான சான்றாகும். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடியதை படைக்கிறான், அவ்வாறு அவன் படைப்பதற்கு நாடியவற்றில் ஒருவரே ஈஸா (அலை) அவர்கள். அவர் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• تَرْك العمل بمواثيق الله وعهوده قد يوجب وقوع العداوة وإشاعة البغضاء والتنافر والتقاتل بين المخالفين لأمر الله تعالى.
1. அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தங்களின்படி செயல்படாமல் இருப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் சண்டையையும் சிலவேளை ஏற்படுத்திவிடுகின்றன.

• الرد على النصارى القائلين بأن الله تعالى تجسد في المسيح عليه السلام، وبيان كفرهم وضلال قولهم.
2. ‘ஈஸாவின் உருவில் இறைவனே இருக்கின்றான்’ என்று கூறும் கிறிஸ்தவர்களின் தீய கொள்கை மறுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிராகரிப்பும் வழிகேடும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى إن أراد أن يهلك المسيح وأمه عليهما السلام وجميع أهل الأرض فلن يستطيع أحد رده، وهذا يثبت تفرده سبحانه بالأمر وأنه لا إله غيره.
3. அல்லாஹ் ஈஸாவையும் அவரது தாயாரையும் உலகிலுள்ள அனைவரையும் அழிக்க விரும்பினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்பது ஈஸா இறைவனல்ல என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும். இது அவன் தனித்தே காரியமாற்றுகிறான் என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதையும் நிரூபிக்கின்றது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى يُذَكِّر بكونه تعالى ﴿ يَخْلُقُ مَا يَشَاءُ﴾ (المائدة: 17)، فهو يخلق من الأبوين، ويخلق من أم بلا أب كعيسى عليه السلام، ويخلق من الجماد كحية موسى عليه السلام، ويخلق من رجل بلا أنثى كحواء من آدم عليهما السلام.
4. மஸீஹ் இறைவனல்ல என்பற்கான ஆதாரங்களில் ஒன்றுதான் “தான் நாடியதைப் படைப்பதாக அல்லாஹ் நினைவூட்டுவதாகும்.” அவன் தாய் தந்தையிலிருந்தும் படைப்பான். ஈஸாவைப் போன்று தந்தையின்றி தாயிலிருந்து மாத்திரமும் படைப்பான். மூஸா (அலை) அவர்களது பாம்பைப் போன்று உயிரற்ற ஜடப்பொருளிலிருந்தும் படைப்பான். ஹவ்வா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிலிருந்து படைத்ததைப் போன்று பெண் துணையின்றி ஆணிலிருந்து மாத்திரமும் படைப்பான்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: مائىدە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش