Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 麦尔彦   段:
وَنَادَیْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَیْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِیًّا ۟
19.52. மூஸா (அலை) அவர்கள் இருந்த இடத்திற்கு வலது புறத்தில் இருந்த மலைப் பகுதியிலிருந்து நாம் அவரை அழைத்தோம். அவருடன் இரகசியமாகப் பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம். அங்கு அல்லாஹ் தன் பேச்சை மூசாவுக்கு செவியுறச் செய்தான்.
阿拉伯语经注:
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
19.53. நாம் -அவர் மீது கொண்ட நம் கருணையினாலும் அருளினாலும்-, அவர் தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டதற்கேற்ப, அவரது சகோதரர் ஹாரூனையும் நபியாக ஆக்கினோம்.
阿拉伯语经注:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ ؗ— اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟ۚ
19.54. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இஸ்மாயீலின் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றினார். அவர் தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
阿拉伯语经注:
وَكَانَ یَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ ۪— وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِیًّا ۟
19.55. அவர் தம் குடும்பத்தினரை தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் ஏவக்கூடியவராக இருந்தார். அவர் தம் இறைவனிடத்தில் பிரியத்திற்குரியவராக இருந்தார்.
阿拉伯语经注:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِدْرِیْسَ ؗ— اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟ۗۙ
19.56. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இத்ரீஸ் அவர்களின் தகவலையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் உண்மையாளராகவும், தம் இறைவனின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும் இருந்தார். அவர் அல்லாஹ்வின் நபிமார்களில் ஒருவராகவும் இருந்தார்.
阿拉伯语经注:
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِیًّا ۟
19.57. நாம் அவருக்கு தூதுத்துவத்தை வழங்கி அவரது புகழை உயர்த்தினோம். எனவே அவர் உயர்ந்த அந்தஸ்துடையவராக இருந்தார்.
阿拉伯语经注:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ— وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ— وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ— وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ— اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
19.58. ஸகரிய்யா முதல் இத்ரீஸ் வரை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்கள் அனைவருக்கும் தூதுப்பணியை அளித்து அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிந்துள்ளான். அவர்கள் ஆதமின் சந்ததியிலும், நூஹுடன் நாம் கப்பலில் சுமந்து சென்றவர்களிலும், இப்ராஹீம் மற்றும் யஅகூபின் வழித்தோன்றல்களிலும், நாம் இஸ்லாத்தின்பால் நேர்வழி அளித்தவர்களிலும் உள்ளவர்களாவர். நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்து தூதர்களாக ஆக்கினோம். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதைச் செவியுற்றால் அவன் மீதுள்ள பயத்தால் அழுதவர்களாக, அவனுக்குச் சிரம்பணிபவர்களாக இருந்தார்கள்.
阿拉伯语经注:
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّا ۟ۙ
19.59. தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தூதர்களுக்குப் பிறகு தீய வழிகேடர்கள் வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். அதனை நிறைவேற்ற வேண்டிய முறைப்படி நிறைவேற்றவில்லை. விபச்சாரம் போன்ற தங்களின் மனம் ஆசை வைக்கும் பாவங்களில் ஈடுபட்டார்கள். விரைவில் அவர்கள் நரகத்தில் தீங்கினையும், ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள்.
阿拉伯语经注:
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
19.60. ஆயினும் தாம் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் மன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தவிர. இந்த பண்புகளைப் பெற்றவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர்கள் செய்த செயல்களின் நன்மைகள் எதுவும் குறைக்கப்படாது. அது குறைவாக இருந்தாலும் சரியே.
阿拉伯语经注:
جَنّٰتِ عَدْنِ ١لَّتِیْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَیْبِ ؕ— اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِیًّا ۟
19.61. அளவிலாக் கருணையாளன் தன் நல்லடியார்களுக்கு அவர்களை நுழைவிப்பதாக, மறைவாக இருக்கும் போது வாக்களித்த, நிலையான, தங்குமிடமான சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள். அவர்கள் அவற்றைக் காணாமலே நம்பிக்கை கொண்டார்கள். சுவனத்தைத் தருவான் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி -மறைவாக இருந்தாலும்- அது சந்தேகம் இல்லாமல் நிறைவேறியே தீரும்.
阿拉伯语经注:
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا اِلَّا سَلٰمًا ؕ— وَلَهُمْ رِزْقُهُمْ فِیْهَا بُكْرَةً وَّعَشِیًّا ۟
19.62. அவர்கள் அங்கு மோசமான பேச்சையோ, வீணான வார்த்தையையோ செவியுற மாட்டார்கள். மாறாக ஒருவருக்கொருவர் சலாம் கூறுவதையும் வானவர்கள் அவர்களுக்கு கூறும் சலாமையும்தான் செவியுறுவார்கள். அங்கு அவர்களுக்கு காலையிலும், மாலையிலும் அவர்கள் விரும்புகின்ற உணவு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
阿拉伯语经注:
تِلْكَ الْجَنَّةُ الَّتِیْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِیًّا ۟
19.63. இப்படிப்பட்ட தன்மைகளையுடைய சுவனத்தைத்தான் நம் கட்டளைகளைச் செயல்படுத்தி, நாம் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்திருக்கக்கூடிய நம் அடியார்களுக்கு நாம் சொந்தமாக்குகின்றோம்.
阿拉伯语经注:
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ ۚ— لَهٗ مَا بَیْنَ اَیْدِیْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَیْنَ ذٰلِكَ ۚ— وَمَا كَانَ رَبُّكَ نَسِیًّا ۟ۚ
19.64. -ஜிப்ரீலே!- முஹம்மதிடம் நீர் கூறும்: “நிச்சயமாக வானவர்கள் தாங்களாவே சுயமாக இறங்குவதில்லை. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இறங்குகிறார்கள். நாங்கள் முன்னோக்கும் மறுமையின் விஷயமும், பின்னால் விட்டுவிடும் உலகத்தின் விஷயமும், உலகம் மற்றும் மறுமைக்கு மத்தியில் இருப்பவையும் அல்லாஹ்வுக்கே உரியன. -தூதரே!- உம் இறைவன் எதையும் மறந்துவிடுபவன் அல்ல.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• حاجة الداعية دومًا إلى أنصار يساعدونه في دعوته.
1. ஓர் அழைப்பாளர் தன் அழைப்புப் பணியில் எப்போதும் தனக்கு உதவிசெய்யக்கூடிய உதவியாளர்களின்பால் தேவையுடையவராக இருக்கின்றார்.

• إثبات صفة الكلام لله تعالى.
2. அல்லாஹ்வுக்கு பேச்சு எனும் பண்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

• صدق الوعد محمود، وهو من خلق النبيين والمرسلين، وضده وهو الخُلْف مذموم.
3. வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொள்வது புகழுக்குரியதாகும். இது இறைத்தூதர்கள், நபிமார்களின் பண்பாகும். அதற்கு மாற்றமாக வாக்குறுதிக்கு மாறுசெய்வது இகழுக்குரியதாகும்.

• إن الملائكة رسل الله بالوحي لا تنزل على أحد من الأنبياء والرسل من البشر إلا بأمر الله.
4. நிச்சயமாக வானவர்கள் வஹியைக் கொண்டுவரும் அல்லாஹ்வின் தூதர்களாவர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே அன்றி மனிதர்களான தூதர், நபிமார்களில் எவர் மீதும் இறங்குவதில்லை.

 
含义的翻译 章: 麦尔彦
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭