Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 拜格勒   段:
فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَیْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
2.182. உயில் எழுதுபவர் அநியாயமாக அல்லது பக்கச்சார்போடு எழுதிவிடுவார் என அஞ்சுபவர் உயில் எழுதுபவருக்கு அவர் அறிவுரை வழங்கி சீர்திருத்தம் செய்வதும் குற்றமல்ல. உயில் விடயத்தில்; கருத்துவேறுபட்டுள்ளவர்களுக்கு மத்தியில் அவர் சீர்திருத்தம் செய்வதும் குற்றமல்ல. அவர் செய்த சமாதான முயற்சிக்காக அவர் கூலிகொடுக்கப்படுவார். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிப்பவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
阿拉伯语经注:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
2.183. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப்போல உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்குமிடையே நற்செயல்களால் தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த நற்செயல்களில் மிகச் சிறந்தது நோன்பாகும்.
阿拉伯语经注:
اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ— وَعَلَی الَّذِیْنَ یُطِیْقُوْنَهٗ فِدْیَةٌ طَعَامُ مِسْكِیْنٍ ؕ— فَمَنْ تَطَوَّعَ خَیْرًا فَهُوَ خَیْرٌ لَّهٗ ؕ— وَاَنْ تَصُوْمُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
2.184. வருடத்தில் சில நாட்களே உங்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ, பயணம் செய்யக்கூடியவராகவோ இருந்தால் அந்த நாட்களில் நோன்பு நோற்காமல் மற்ற நாட்களில் விட்டவற்றை கணக்கிட்டு நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்க சக்திபெற்றவர் நோன்பு நோற்கவில்லையெனில் அதற்குரிய பரிகாரத்தை அளித்துவிடட்டும். அது நோன்பை விடுகின்ற ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்தலாகும். நீங்கள் நோன்பின் சிறப்புகளை அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்காமல் பரிகாரம் வழங்குவதை விட நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இது அல்லாஹ் முதல் கட்டமாக நோன்பை விதியாக்கிய நேரத்தில் இருந்த சட்டமாகும். அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம், விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு அதற்குப் பகரமாக உணவளிக்கலாம். பின்னர் அல்லாஹ் வயதுவந்த சக்தியுள்ள அனைவரின்மீதும் நோன்பு நோற்பதை கடமையாக்கினான்.
阿拉伯语经注:
شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَالْفُرْقَانِ ۚ— فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ ؕ— وَمَنْ كَانَ مَرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ— یُرِیْدُ اللّٰهُ بِكُمُ الْیُسْرَ وَلَا یُرِیْدُ بِكُمُ الْعُسْرَ ؗ— وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
2.185. ரமலான் மாதத்தில் "லைலத்துல் கத்ர்" என்றும் கண்ணியமிக்க இரவில்தான் முஹம்மது நபியின்மீது குர்ஆன் இறங்கத் தொடங்கியது. அல்லாஹ் அதனை மக்களுக்கு வழிகாட்டியாக இறக்கினான். அதில் நேர்வழி மற்றும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்தல் ஆகிய தெளிவான ஆதாரங்களும், உள்ளன. எனவே ரமலான் மாதத்தை அடைபவர் பயணத்தில் அல்லாமல், ஆரோக்கியமாக இருந்தால் அவர்மீது நோன்பு நோற்பது கடமையாகும். உங்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ பயணியாகவோ இருப்பவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தன்னுடைய சட்டங்களின்மூலம் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். இது ஏனெனில், நீங்கள் நோன்பு மாதத்தின் எண்ணிக்கையை நிறைவுபடுத்துவதற்காகவும், அதன் முடிவில் வருகின்ற பெருநாளில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கவும் அதனை முழுமைப்படுத்தவும் உதவியமைக்காக அவனைத் தக்பீர் கூறி புகழ்வதற்காகவும் அவன் விரும்பும் மார்க்கத்தின்பால் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும்தான்.
阿拉伯语经注:
وَاِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ ؕ— اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْیَسْتَجِیْبُوْا لِیْ وَلْیُؤْمِنُوْا بِیْ لَعَلَّهُمْ یَرْشُدُوْنَ ۟
2.186. தூதரே! என் அடியார்கள் என்னை நெருங்குவது குறித்தும், நான் அவர்களின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பது குறித்தும் உம்மிடம் வினவினால் - நான் அவர்களுக்குச் சமீபமாக, அவர்களின் நிலையை நன்கறிந்தவனாக, அவர்களின் பிரார்த்தனையை செவியேற்பவனாக இருக்கின்றேன். அவர்களுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை; அவர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. அழைப்பவரின் அழைப்புக்கு, அவர் என்னை உளத்தூய்மையுடன் அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படட்டும்; தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கட்டும். இதுதான் நான் அவர்களுக்குப் பதிலளிப்பதற்கான பயனுள்ள வழிமுறை. இதனால் அவர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் நேரான பாதையில் சென்றிடலாம்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• فَضَّلَ الله شهر رمضان بجعله شهر الصوم وبإنزال القرآن فيه، فهو شهر القرآن؛ ولهذا كان النبي صلى الله عليه وسلم يتدارس القرآن مع جبريل في رمضان، ويجتهد فيه ما لا يجتهد في غيره.
1. குர்ஆனை இறக்கி நோன்பை விதியாக்கி அல்லாஹ் ரமலான் மாதத்தை சிறப்பித்துள்ளான். இது குர்ஆனுடைய மாதமாகும். எனவேதான் நபியவர்கள் இந்த மாதத்தில் ஜீப்ரீலுடன் சேர்ந்து குர்ஆனைப் படிப்பவர்களாக இருந்தார்கள். ஏனைய மாதங்களில் செய்யாதளவு அதிக வணக்கங்களில் இந்த மாதத்தில் ஈடுபடுவார்கள்.

• شريعة الإسلام قامت في أصولها وفروعها على التيسير ورفع الحرج، فما جعل الله علينا في الدين من حرج.
2. இஸ்லாமிய அடிப்படைகளும் கிளைச்சட்டங்களும் இலகுபடுத்தலையும் மற்றும் சங்கடங்களை அகற்றுவதையும் அடிப்படையாகக்கொண்டே அமைந்துள்ளன. அல்லாஹ் இந்த மார்க்கத்தில் நமக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.

• قُرْب الله تعالى من عباده، وإحاطته بهم، وعلمه التام بأحوالهم؛ ولهذا فهو يسمع دعاءهم ويجيب سؤالهم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு மிக நெருக்கமாக அவர்களைச் சூழ்ந்துள்ளான். மேலும் அவர்களது விடயங்களை நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளான். எனவேதான் அவர்களது பிரார்த்தனையை செவியேற்று அவர்களது வேண்டுதலுக்கு பதிலளிக்கின்றான்.

 
含义的翻译 章: 拜格勒
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭