《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
39 : 19

وَاَنْذِرْهُمْ یَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِیَ الْاَمْرُ ۘ— وَهُمْ فِیْ غَفْلَةٍ وَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
40 : 19

اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَیْهَا وَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟۠

நிச்சயமாக நாம்தான் பூமிக்கும் அதில் இருப்பவர்களுக்கும் வாரிசாகுவோம். நம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
41 : 19

وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬— اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருக்கிறார். info
التفاسير:

external-link copy
42 : 19

اِذْ قَالَ لِاَبِیْهِ یٰۤاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا یَسْمَعُ وَلَا یُبْصِرُ وَلَا یُغْنِیْ عَنْكَ شَیْـًٔا ۟

(அந்த) சமயத்தை நினைவு கூர்வீராக! அவர் தனது தந்தைக்கு கூறினார்: என் தந்தையே கேட்காதவற்றையும் பார்க்காதவற்றையும் உம்மை விட்டும் (தீமைகளில்) எதையும் தடுக்காதவற்றையும் ஏன் வணங்குகிறீர்? info
التفاسير:

external-link copy
43 : 19

یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟

என் தந்தையே! நிச்சயமாக நான், (அல்லாஹ்வின் புறத்திலிருந்து) உமக்கு வராத கல்வி எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக. நான் உமக்கு நேரான (சமமான) பாதையை வழிகாட்டுவேன். info
التفاسير:

external-link copy
44 : 19

یٰۤاَبَتِ لَا تَعْبُدِ الشَّیْطٰنَ ؕ— اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِیًّا ۟

என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு (-அல்லாஹ்விற்கு) மாறுசெய்பவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
45 : 19

یٰۤاَبَتِ اِنِّیْۤ اَخَافُ اَنْ یَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّیْطٰنِ وَلِیًّا ۟

என் தந்தையே! நிச்சயமாக நான் “ரஹ்மானிடமிருந்து ஒரு வேதனை உம்மை வந்தடைந்தால் (அதை உம்மைவிட்டு ஷைத்தானால் தடுக்க முடியாது.) நீர் (அந்த) ஷைத்தானுக்கு நண்பராக ஆகிவிடுவீர்” என்று நான் பயப்படுகிறேன். info
التفاسير:

external-link copy
46 : 19

قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ— لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟

(தந்தை) கூறினார்: இப்ராஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர்) பாதுகாப்புப் பெற்றவராக என்னை விட்டு விலகிவிடு! info
التفاسير:

external-link copy
47 : 19

قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ— سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ— اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟

(இப்ராஹீம்) கூறினார்: (என் புறத்திலிருந்து) உமக்கு பாதுகாப்பு உண்டாகுக! (இனி நீர் வெறுப்பதைக் கூறமாட்டேன்). உமக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் என் மீது அருளுடையவனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
48 : 19

وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّیْ ۖؗ— عَسٰۤی اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّیْ شَقِیًّا ۟

உங்களையும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நான் விலகி விடுகின்றேன். என் இறைவனிடம் (மட்டும்) நான் பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் (நான்) பிரார்த்திப்பதில் நான் நம்பிக்கை அற்றவனாக ஆகாமல் இருப்பேன். info
التفاسير:

external-link copy
49 : 19

فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ— وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟

அவர் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
50 : 19

وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِیًّا ۟۠

அவர்களுக்கு நமது அருளிலிருந்து வழங்கினோம். அவர்களுக்கு உயர்வான உண்மையான புகழை நாம் ஏற்படுத்தினோம். info
التفاسير:

external-link copy
51 : 19

وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ— اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟

இவ்வேதத்தில் மூஸாவை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கிறார். இன்னும், தூதராக நபியாக இருக்கிறார். info
التفاسير: