《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
65 : 22

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ وَالْفُلْكَ تَجْرِیْ فِی الْبَحْرِ بِاَمْرِهٖ ؕ— وَیُمْسِكُ السَّمَآءَ اَنْ تَقَعَ عَلَی الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியில் உள்ளவற்றை உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான். இன்னும் கப்பலையும் -அவனது கட்டளைப்படி அது கடலில் செல்கின்றதாக (உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான்). வானத்தை -அவனது கட்டளையைக் கொண்டே தவிர- அது பூமியின் மீது வீழ்ந்து விடாமல் தடுத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மகா இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
66 : 22

وَهُوَ الَّذِیْۤ اَحْیَاكُمْ ؗ— ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ— اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ ۟

அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவன். info
التفاسير:

external-link copy
67 : 22

لِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ فَلَا یُنَازِعُنَّكَ فِی الْاَمْرِ وَادْعُ اِلٰی رَبِّكَ ؕ— اِنَّكَ لَعَلٰی هُدًی مُّسْتَقِیْمٍ ۟

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் ஒரு பலியை (பிராணிகளை அறுக்கின்ற முறையை) ஏற்படுத்தினோம். அவர்கள் அதை (அதன்படி) பலியிடுவார்கள். ஆகவே, அவர்கள் உம்மிடம் அந்த விஷயத்தில் (-அறுத்ததை சாப்பிடுவதிலும் இறந்து விட்டதை தவிர்த்து விடுவதிலும்) தர்க்கிக்க வேண்டாம். உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேரான வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர். info
التفاسير:

external-link copy
68 : 22

وَاِنْ جٰدَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟

அவர்கள் உம்மிடம் (மார்க்க விஷயங்களில்) தர்க்கித்தால், “நீங்கள் செய்கின்றதை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று நீர் கூறுவீராக! info
التفاسير:

external-link copy
69 : 22

اَللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟

நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில் உங்கள் மத்தியில் மறுமை நாளில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான். info
التفاسير:

external-link copy
70 : 22

اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؕ— اِنَّ ذٰلِكَ فِیْ كِتٰبٍ ؕ— اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟

நிச்சயமாக அல்லாஹ் வானத்தில் இன்னும் பூமியில் உள்ளவற்றை நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (அனைத்தும் குறிப்பேடாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’ (பதியப்பட்டு) இருக்கிறது. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக சுலபமானதே! info
التفاسير:

external-link copy
71 : 22

وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّمَا لَیْسَ لَهُمْ بِهٖ عِلْمٌ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟

(அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதையும் அவர்களுக்கு எதைப் பற்றி அறவே (எவ்வித) அறிவும் இல்லையோ அதையும்தான் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்யாரும் இல்லை. info
التفاسير:

external-link copy
72 : 22

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ تَعْرِفُ فِیْ وُجُوْهِ الَّذِیْنَ كَفَرُوا الْمُنْكَرَ ؕ— یَكَادُوْنَ یَسْطُوْنَ بِالَّذِیْنَ یَتْلُوْنَ عَلَیْهِمْ اٰیٰتِنَا ؕ— قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكُمْ ؕ— اَلنَّارُ ؕ— وَعَدَهَا اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠

அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்களுடைய முகங்களில் (நீங்கள்) விரும்பாததை (-முக சுளிப்பை) நீர் பார்ப்பீர்! நமது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுபவர்களை கடுமையாகப் பிடித்து விடுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! “இவர்களைவிட வெறுப்பானதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” (அதுதான்) நரகம். நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ் அதை வாக்களித்துள்ளான். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது. info
التفاسير: