Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (2) Simoore: Simoore denndal
هُوَ الَّذِیْۤ اَخْرَجَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِیَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِ ؔؕ— مَا ظَنَنْتُمْ اَنْ یَّخْرُجُوْا وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّا نِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰىهُمُ اللّٰهُ مِنْ حَیْثُ لَمْ یَحْتَسِبُوْا وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ یُخْرِبُوْنَ بُیُوْتَهُمْ بِاَیْدِیْهِمْ وَاَیْدِی الْمُؤْمِنِیْنَ ۗ— فَاعْتَبِرُوْا یٰۤاُولِی الْاَبْصَارِ ۟
59.2. அவனே தன்னை நிராகரித்து தன் தூதரை பொய்ப்பித்த தவ்ராத் வேதத்தையுடைய யூதர்களான பனூ நளீர் குலத்தார் உடன்படிக்கையை முறித்து இணைவைப்பாளர்களுடன் ஒத்துழைத்தபோது அவர்களை மதீனாவிலுள்ள அவர்களின் வீடுகளிலிருந்து ஷாமுக்கு முதன் முதலாக வெளியேற்றினான். -நம்பிக்கையாளர்களே!- அவர்களிடம் காணப்படும் பலம் மற்றும் பாதுகாப்பினால் தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கவில்லை. தாங்கள் உறுதியாகக் கட்டிய கோட்டைகள் தங்களை அல்லாஹ்வின் தண்டனை, பிடியிலிருந்து பாதுகாக்கும் என்று அவர்களும் நினைத்தனர். தூதர் அவர்களுடன் போரிடும்படி, அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றும்படி கட்டளையிட்ட போது அவர்கள் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அல்லாஹ்வின் தண்டனை அவர்களிடம் வந்தது. அவன் அவர்களின் உள்ளங்களில் கடும் பீதியை ஏற்படுத்திவிட்டான். தமது வீடுகள் முஸ்லிம்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக அவர்கள் உட்புறமிருந்து தங்களின் கைகளாலேயே அவற்றைத் தகர்த்தார்கள். வெளிப்புறமிருந்து முஸ்லிம்கள் அவற்றை அழித்தார்கள். அகப்பார்வையுடையோரே! அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது இறங்கிய வேதனையைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் மீது இறங்கிய அதே வேதனை, கூலி உங்கள் மீதும் இறங்கும்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• المحبة التي لا تجعل المسلم يتبرأ من دين الكافر ويكرهه، فإنها محرمة، أما المحبة الفطرية؛ كمحبة المسلم لقريبه الكافر، فإنها جائزة.
1. நிராகரிப்பாளனின் மார்க்கத்தில் இருந்து விலகி அதனை வெறுப்பதை விட்டும் முஸ்லிமைத் தடுக்கும் அன்பு நிச்சயமாக தடைசெய்யப்பட்டதாகும். ஆனால் தனது நிராகரிப்பாளனான உறவினரை ஒரு முஸ்லிம் இயல்பான நேசம் வைப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

• رابطة الإيمان أوثق الروابط بين أهل الإيمان.
2. ஈமானிய உறவே நம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலுள்ள மிக உறுதியான உறவாகும்.

• قد يعلو أهل الباطل حتى يُظن أنهم لن ينهزموا، فتأتي هزيمتهم من حيث لا يتوقعون.
3. நிச்சயமாக தோல்வியடையவேமாட்டார்கள் என நினைக்கும் அளவுக்கு சில வேளை அசத்தியவாதிகள் ஆதிக்கம் பெறுவார்கள். அப்போது அவர்கள் எதிர்பாராத விதத்தில் தோல்விக்குள்ளாகுவர்.

• من قدر الله في الناس دفع المصائب بوقوع ما دونها من المصائب.
4. சிறிய சோதனைகள் நிகழ்வதன் மூலம் பெரிய சோதனைகளைத் தடுப்பது மனிதர்களின் விடயத்தில் அல்லாஹ்வின் விதியில் உள்ளதாகும்.

 
Firo maanaaji Aaya: (2) Simoore: Simoore denndal
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tippudi firooji ɗii

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uddude