Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්ආම්   වාක්‍යය:
وَلَوْ جَعَلْنٰهُ مَلَكًا لَّجَعَلْنٰهُ رَجُلًا وَّلَلَبَسْنَا عَلَیْهِمْ مَّا یَلْبِسُوْنَ ۟
6.9. நாம் வானவரை அவர்களுக்குத் தூதராக அனுப்பியிருந்தாலும் அவரையும் மனித உருவில்தான் ஆக்கியிருப்போம். ஏனெனில் அப்பொழுதுதான் அவர் கூறுவதைச் செவிமடுத்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அல்லாஹ் வானவரைப் படைத்த இயல்பான தோற்றத்தில் இருக்கும் போது அதற்கு அவர்கள் சக்திபெறமாட்டார்கள். நாம் அவரை மனித உருவில் அனுப்பியிருந்தால் அவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்திருப்பார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
6.10. உம்முடன் ஒரு வானவரை இறக்குமாறு கூறி அவர்கள் உம்மை பரிகாசம் செய்தால் - உமக்கு முன்னரும் பல சமூகங்கள் தமது தூதர்களைப் பரிகசித்துள்ளனர். அவர்கள் எச்சரிக்கை செய்யப்படும் வேளை அவர்கள் மறுத்துப் பரிகாசம் செய்துகொண்டிருந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ ثُمَّ اَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟
6.11. தூதரே! பரிகாசம் செய்யும் இந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “பூமியில் பயணம் செய்யுங்கள். அல்லாஹ்வின் தூதர்களை மறுத்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் பலத்தையும் பாதுகாப்பையும் பெற்றிருந்தும் அல்லாஹ்வின் வேதனையில் சிக்கிக் கொண்டார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ لِّمَنْ مَّا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلْ لِّلّٰهِ ؕ— كَتَبَ عَلٰی نَفْسِهِ الرَّحْمَةَ ؕ— لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ— اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
6.12. தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “வானங்கள், பூமி, அவையிரண்டிற்கு இடையில் உள்ளவை ஆகியவற்றின் உரிமை யாருக்குரியது? நீர் கூறுவீராக: அனைத்தின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியது. அடியார்கள் மீது அருள் புரிவதற்காக கருணையை தன்மீது விதித்துக் கொண்டான். எனவேதான் அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அந்த நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வை நிராகரித்து அழிவுக்கான காரணிகளைத்தேடி தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَهٗ مَا سَكَنَ فِی الَّیْلِ وَالنَّهَارِ ؕ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
6.13. இரவிலும் பகலிலும் இருக்கும் எல்லாவற்றின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவர்களது பேச்சுக்களை அவன் செவியேற்கக்கூடியவன். செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ اَغَیْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِیًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ یُطْعِمُ وَلَا یُطْعَمُ ؕ— قُلْ اِنِّیْۤ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
6.14. தூதரே! அல்லாஹ்வுடன் சிலைகளையும் மற்றவைகளையும் வணங்கும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் அல்லாதவர்களை நேசம் பாராட்டும், உதவி பெறும் உதவியாளர்களாக ஆக்கிக் கொள்வதை கற்பனையாவது செய்யலாமா? அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உணவளிக்கிறான். அவனது அடியார்களில் யாரும் அவனுக்கு உணவளிப்பதில்லை. அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். அடியார்கள் அவன்பால் தேவையுடையவர்கள்.” தூதரே! நீர் கூறுவீராக: “இந்த சமூகத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என்று என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவனுடன் மற்றவர்களை இணையாக்குபவர்களுடன் நான் சேர்ந்துவிடுவதை விட்டும் என்னைத் தடுத்துள்ளான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
6.15. தூதரே! நீர் கூறுவீராக: “நான் என் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அவன் தடைசெய்த ஷிர்க் போன்ற பாவங்களில் ஈடுபட்டால் அல்லது அவன் கட்டளையிட்ட நம்பிக்கை மற்றும் ஏனைய வணக்கவழிபாடுகளை விட்டுவிட்டால் மறுமை நாளில் அவன் என்னைக் கடுமையாக வேதனை செய்வான் என்பதை அஞ்சுகிறேன்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
مَنْ یُّصْرَفْ عَنْهُ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمَهٗ ؕ— وَذٰلِكَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟
6.16. மறுமை நாளில் அல்லாஹ் யாரைவிட்டும் இந்த வேதனையை அகற்றிவிடுவானோ அவனுடைய அருளால் அவர் வெற்றி பெற்றுவிட்டார். வேதனையிலிருந்து கிடைக்கும் இந்த விடுதலையே ஈடிணையற்ற மிகப் பெரிய வெற்றியாகும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ؕ— وَاِنْ یَّمْسَسْكَ بِخَیْرٍ فَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
6.17. ஆதமின் மகனே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அவனைத் தவிர யாராலும் அதனைப் போக்க முடியாது. அவன் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟
6.18. அவன் தனது அடியார்களை விட மிகைத்தவன். அனைவரையும் அடிபணிய வைப்பவன், அனைத்து வகையிலும் அவர்களை விட உயர்ந்தவன். அவனுக்கு இயலாதது எதுவுமில்லை. அவனை யாராலும் மிகைக்க முடியாது. அனைவரும் அவனுக்குக் கட்டுப்படுபவர்கள்தாம். தன் கண்ணியத்திற்கேற்ப தனது அடியார்களுக்க மேலால் இருக்கிறான். தன் படைப்பிலும் நிர்வாகத்திலும் தான் வழங்கிய சட்டங்களிலும் அவன் ஞானம்மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• بيان حكمة الله تعالى في إرسال كل رسول من جنس من يرسل إليهم؛ ليكون أبلغ في السماع والوعي والقبول عنه.
1. அல்லாஹ் தூதர்களை மனித இனத்திலிருந்தே அனுப்பியதன் நோக்கம், அவர்கள் சிறந்த முறையில் செவியேற்று, புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.

• الدعوة للتأمل في أن تكرار سنن الأوّلين في العصيان قد يقابله تكرار سنن الله تعالى في العقاب.
2. இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னோரின் வழிமுறையைப் பின்பற்றினால் சில வேளை தண்டனையிலும் அல்லாஹ்வின் வழிமுறை நடைபெறும் என்பதைச் சிந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

• وجوب الخوف من المعصية ونتائجها.
3. பாவத்தைக் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் அஞ்சுவது கடமையாகும்.

• أن ما يصيب البشر من بلاء ليس له صارف إلا الله، وأن ما يصيبهم من خير فلا مانع له إلا الله، فلا رَادَّ لفضله، ولا مانع لنعمته.
4. மனிதனுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் போக்க முடியாது. அவனுக்குக் கிடைக்கும் நன்மைகளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. அவனது அருளைத் தடுப்பவர் யாரும் இல்லை.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්ආම්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න