Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Abdul Hameed Baqavi * - Indise ng mga Salin

XML CSV Excel API
Please review the Terms and Policies

Salin ng mga Kahulugan Surah: An-Naba’   Ayah:

ஸூரா அந்நபஃ

عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ
1. (நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?
Ang mga Tafsir na Arabe:
عَنِ النَّبَاِ الْعَظِیْمِ ۟ۙ
2. மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!
Ang mga Tafsir na Arabe:
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ ۟ؕ
3. அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
Ang mga Tafsir na Arabe:
كَلَّا سَیَعْلَمُوْنَ ۟ۙ
4. (தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
Ang mga Tafsir na Arabe:
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ ۟
5. பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.
Ang mga Tafsir na Arabe:
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
6. (இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?
Ang mga Tafsir na Arabe:
وَّالْجِبَالَ اَوْتَادًا ۟ۙ
7. இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
Ang mga Tafsir na Arabe:
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۟ۙ
8. ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
Ang mga Tafsir na Arabe:
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۟ۙ
9. நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
Ang mga Tafsir na Arabe:
وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا ۟ۙ
10. நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
Ang mga Tafsir na Arabe:
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۟ۚ
11. நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.
Ang mga Tafsir na Arabe:
وَبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۟ۙ
12. உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
Ang mga Tafsir na Arabe:
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۟ۙ
13. அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
Ang mga Tafsir na Arabe:
وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۟ۙ
14. கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.
Ang mga Tafsir na Arabe:
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۟ۙ
15. அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.
Ang mga Tafsir na Arabe:
وَّجَنّٰتٍ اَلْفَافًا ۟ؕ
16. இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).
Ang mga Tafsir na Arabe:
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا ۟ۙ
17. நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
Ang mga Tafsir na Arabe:
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۟ۙ
18. (அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
Ang mga Tafsir na Arabe:
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۟ۙ
19. வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
Ang mga Tafsir na Arabe:
وَّسُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۟ؕ
20. மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.
Ang mga Tafsir na Arabe:
اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۟ۙ
21. நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
Ang mga Tafsir na Arabe:
لِّلطَّاغِیْنَ مَاٰبًا ۟ۙ
22. (பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
Ang mga Tafsir na Arabe:
لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًا ۟ۚ
23. அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
Ang mga Tafsir na Arabe:
لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۟ۙ
24, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
Ang mga Tafsir na Arabe:
اِلَّا حَمِیْمًا وَّغَسَّاقًا ۟ۙ
24, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
Ang mga Tafsir na Arabe:
جَزَآءً وِّفَاقًا ۟ؕ
26. இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
Ang mga Tafsir na Arabe:
اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًا ۟ۙ
27. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
Ang mga Tafsir na Arabe:
وَّكَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًا ۟ؕ
28. அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.
Ang mga Tafsir na Arabe:
وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًا ۟ۙ
29. எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
Ang mga Tafsir na Arabe:
فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا ۟۠
30. ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).
Ang mga Tafsir na Arabe:
اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ
31. (ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.
Ang mga Tafsir na Arabe:
حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ
32. (அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
Ang mga Tafsir na Arabe:
وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ
33. (மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
Ang mga Tafsir na Arabe:
وَّكَاْسًا دِهَاقًا ۟ؕ
34. (பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
Ang mga Tafsir na Arabe:
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚۖ
35. அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
Ang mga Tafsir na Arabe:
جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ
36. (இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
Ang mga Tafsir na Arabe:
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ
37. அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.
Ang mga Tafsir na Arabe:
یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ— لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟
38. ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
Ang mga Tafsir na Arabe:
ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ— فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟
39. இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.
Ang mga Tafsir na Arabe:
اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬— یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠
40. சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!
Ang mga Tafsir na Arabe:
 
Salin ng mga Kahulugan Surah: An-Naba’
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Abdul Hameed Baqavi - Indise ng mga Salin

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an sa wikang Tamil. Isinalin ito ni Shaykh Abdul Hameed Baqavi. Inilathala ito ng King Fahd Glorious Quran Printing Complex sa Madinah Munawwarah. Taon ng imprenta: 1434 H.

Isara