Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: イムラーン家章   節:
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠
3.71. வேதக்காரர்களே! உங்கள் வேதங்களில் இறக்கப்பட்ட உண்மையை நீங்கள் உருவாக்கிய பொய்யோடு ஏன் கலக்கின்றீர்கள்? அதிலுள்ள சத்தியத்தையும் நேர்வழியையும் ஏன் மறைக்கின்றீர்கள்? அதிலுள்ள சத்தியங்களில் ஒன்றே முஹம்மத் (ஸல்) அவர்களது நபித்துவம் உண்மை என்பதும். அசத்தியத்திலிருந்து சத்தியத்தையும் வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள்.
アラビア語 クルアーン注釈:
وَقَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِیْۤ اُنْزِلَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟ۚۖ
3.72. யூத அறிஞர்களில் ஒருபிரிவினர் கூறுகிறார்கள், “பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின்மீது வெளிப்படையாக நம்பிக்கைகொள்ளுங்கள். பகலின் இறுதிப்பகுதியில் அதனை நிராகரித்துவிடுங்கள். ஈமான்கொண்ட பிறகு அதனை நீங்கள் நிராகரித்து விடுவதனால் அவர்களின் மார்க்கத்தில் அவர்கள் சந்தேகம்கொண்டு, “நம்மைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கறிந்தவர்களே திரும்பி விட்டார்களே” என்று கூறி சந்தேகம் கொண்டு அவர்களும் திரும்பிவிடக்கூடும்.”
アラビア語 クルアーン注釈:
وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِیْنَكُمْ ؕ— قُلْ اِنَّ الْهُدٰی هُدَی اللّٰهِ ۙ— اَنْ یُّؤْتٰۤی اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِیْتُمْ اَوْ یُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ ؕ— قُلْ اِنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ ۚ— یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟ۚۙ
3.73. “உங்களின் யூத மதத்தில் இருப்பவர்களை மட்டுமே நம்பிப் பின்பற்றுங்கள்” என்றும் கூறுகிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே சத்தியத்திற்கான வழியாகும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு போன்று மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால் அல்லது அவர்கள் மீது இறக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவார்களே என்ற பயத்தினால் நீங்கள் கொண்டிருக்கும் நிராகரிப்பும் பிடிவாதமும் சத்தியத்திற்கான வழி அல்ல.” தூதரே நீர் கூறுவீராக: “சிறப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். அவன் தன் அருளை ஒரு சமூகத்தோடு மட்டும் சுருக்கிவிட மாட்டான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; அதற்குத் தகுதியானவர்களையும் நன்கறிந்தவன்.
アラビア語 クルアーン注釈:
یَّخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
3.74. தன் படைப்புகளில் தான் நாடியோருக்கு தன் அருளை பிரத்யேகமாக வழங்குகிறான். அதனால் அவருக்கு நேர்வழியையும் நபித்துவத்தையும் பலவித அருள்களையும் அளித்து அருள்புரிகிறான். அல்லாஹ் மாபெரும் அருளாளன். அவனது அருளுக்கு எல்லையே கிடையாது.
アラビア語 クルアーン注釈:
وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ یُّؤَدِّهٖۤ اِلَیْكَ ۚ— وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِیْنَارٍ لَّا یُؤَدِّهٖۤ اِلَیْكَ اِلَّا مَا دُمْتَ عَلَیْهِ قَآىِٕمًا ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَیْسَ عَلَیْنَا فِی الْاُمِّیّٖنَ سَبِیْلٌ ۚ— وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
3.75. வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பெருங்செல்வத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதனை முறையாக திருப்பி அளித்துவிடுவார்கள். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் குறைவான செல்வத்தை நம்பி ஒப்படைத்தாலும் அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டாலன்றி தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பி அளிக்க மாட்டார்கள். அவர்களின் இந்த நடத்தைக்குக் காரணம், “அரபுக்கள் விஷயத்திலும் அவர்களது செல்வத்தை அனுபவிப்பதிலும் நாம் குற்றம்பிடிக்கப்பட மாட்டோம். ஏனெனில் அல்லாஹ் அவற்றை நமக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான்” என்ற அவர்களின் தவறான கூற்றும் எண்ணமும்தான். இவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டம் கூறுகிறோம் என அறிந்துகொண்டே இந்தப் பொய்யைக் கூறுகின்றனர்.
アラビア語 クルアーン注釈:
بَلٰی مَنْ اَوْفٰی بِعَهْدِهٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
3.76. அவர்கள் கூறியது போலல்ல. மாறாக அது பாவமாகும். அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதன் மூலம் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியவர்கள், மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அமானிதத்தை ஒப்படைத்தவர்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் ஆகியவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான். அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை வழங்கிடுவான்.
アラビア語 クルアーン注釈:
اِنَّ الَّذِیْنَ یَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَیْمَانِهِمْ ثَمَنًا قَلِیْلًا اُولٰٓىِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِی الْاٰخِرَةِ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا یَنْظُرُ اِلَیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۪— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
3.77. தன் வேதத்தில் இறக்கியதையும், தான் அனுப்பிய தூதர்களையும் பின்பற்றுமாறு அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அறிவுரையையும் ,அவனிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகச் செய்த சத்தியங்களையும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்திற்குப் பகரமாக மாற்றிவிடுபவர்களுக்கு மறுமையின் நன்மையில் எந்தப் பங்கும் இல்லை. மறுமை நாளில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களிடம் பேசமாட்டான். அவர்களைக் கருணையோடு பார்க்க மாட்டான். அவர்களின் பாவம் மற்றும் நிராகரிப்பு ஆகிய அழுக்குகளிலிருந்து பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• من علماء أهل الكتاب من يخدع أتباع ملتهم، ولا يبين لهم الحق الذي دلت عليه كتبهم، وجاءت به رسلهم.
1. வேதக்காரர்களிலுள்ள அறிஞர்களில் தங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றுபவர்களும் உள்ளனர். அவர்களின் வேதங்கள் கூறும், அவர்களின் தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில்லை.

• من وسائل الكفار الدخول في الدين والتشكيك فيه من الداخل.
2. இஸ்லாத்தில் நுழைந்து அதன் உள்ளேயிருந்து அதிலே சந்தேகத்தை ஏற்படுத்துவது நிராகரிப்போரின் வழிமுறைகளில் ஒன்றாகும்.

• الله تعالى هو الوهاب المتفضل، يعطي من يشاء بفضله، ويمنع من يشاء بعدله وحكمته، ولا ينال فضله إلا بطاعته.
3. அல்லாஹ்தான் வழங்கக்கூடியவன், சிறப்பினை அளிப்பவன். தான் நாடியவர்களுக்குத் தன் அருளை வழங்குகிறான். நீதி, ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் நாடியவர்களுக்கு கொடுக்காமல் தடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமே அவனது அருள் கிடைக்கும்.

• كل عِوَضٍ في الدنيا عن الإيمان بالله والوفاء بعهده - وإن كان عظيمًا - فهو قليل حقير أمام ثواب الآخرة ومنازلها.
4. ஈமானுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் பகரமாக இவ்வுலகில் பெறப்படும் அனைத்தும் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மறுமையின் நன்மைக்கும் பதவிகளுக்கும் முன்னால் அற்பமானதே.

 
対訳 章: イムラーン家章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる